உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடுகுடுப்பைக்காரர் போல் அமைச்சர் ராஜா பேசுகிறார் அன்புமணி குற்றச்சாட்டு

குடுகுடுப்பைக்காரர் போல் அமைச்சர் ராஜா பேசுகிறார் அன்புமணி குற்றச்சாட்டு

சென்னை : 'குடுகுடுப்பைக்காரர் போல் தொழில் துறை அமைச்சர் ராஜா பேசிக் கொண்டிருக்கிறார்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்திற்கு 'பாக்ஸ்கான்' நிறுவனம் உறுதியளித்த, 15,000 கோடி ரூபாய் முதலீடு கண்டிப்பாக வரும் என அமைச்சர் ராஜா கூறுகிறார். ஆனால், அந்த முதலீடு எப்படி வரும் என்பதை கூற மறுக்கிறார். அவர் கூறுவதை பார்க்கும் போது, 'நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது' என, குடுகுடுப்பைக்காரர் கூறுவதை போல் இருக்கிறது. அமைச்சரைப் போல் தெளிவாக ராஜா பேச வேண்டும். ஜோதிடம் கூறுவதைப் போல பேசிக் கொண்டிருக்கக் கூடாது. 'பாக்ஸ்கான்' முதலீடு தொடர்பாக, தர்க்க ரீதியாக எந்த விளக்கமும் அளிக்க முடியாத ராஜா, ஆதாரமற்ற தகவல்களை கூறக் கூடாது. தொழில் முதலீடு என்பது, துணி போட்டு மூடிக் கொண்டு, கை விரல்களை பிடித்து விலை பேசும் மாட்டுச் சந்தை பேரம் அல்ல. அதில், மூடி மறைக்க எதுவும் இல்லை. தமிழகத்திற்கு, தி.மு.க., அரசு தொழில் முதலீடுகளை கொண்டு வந்தால், அரசியல் வேறுபாடுகளை கடந்து வரவேற்பேன். அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு, அரசு செலவில் சுற்றுலா சென்று திரும்பி விட்டு, முதலீடுகள் குவிந்து விட்டன என, கதை, திரைக்கதை எழுதி, வசனம் பேசினால், அதை வேடிக்கை பார்க்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை