உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை - குமரி உட்பட 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை - குமரி உட்பட 4 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை:தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை - கன்னியாகுமரி உட்பட நான்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு:  திருநெல்வேலியில் இருந்து, இன்று மாலை 4:00 மணிக்கு புறப்படும் 'ஏசி' சிறப்பு ரயில், மறுநாள் காலை 10:00 மணிக்கு சென்ட்ரல் வரும். சென்ட்ரலில் இருந்து நாளை மாலை 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7:15 மணிக்கு திருநெல்வேலி செல்லும்  மதுரையில் இருந்து, வரும் 29, 30, நவ., 2ம் தேதிகளில் காலை 8:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், அதே நாளில் மாலை 3:25 மணிக்கு தாம்பரம் வரும். தாம்பரத்தில் இருந்து, வரும் 29, 30, நவ., 2ம் தேதிகளில் மாலை 5:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1:20 மணிக்கு மதுரை செல்லும் சென்ட்ரலில் இருந்து, இன்று இரவு 11:25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் பகல் 12:45 மணிக்கு கன்னியாகுமரி செல்லும். கன்னியாகுமரியில் இருந்து, நாளை மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 3:45 மணிக்கு எழும்பூர் வரும் ஈரோட்டில் இருந்து, வரும் 30, 31, நவ., 3ம் தேதிகளில் அதிகாலை 4:55 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில், அதே நாளில் காலை 11:55 மணிக்கு சென்ட்ரல் வரும். சென்ட்ரலில் இருந்து, வரும் 30, 31, நவ., 3ம் தேதிகளில் மதியம் 2:45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 9:15 மணிக்கு ஈரோடு வந்தடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி