உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியில் பா.ஜ., பங்கேற்கும் அமித் ஷா அறிவிப்பு பின்னணி

ஆட்சியில் பா.ஜ., பங்கேற்கும் அமித் ஷா அறிவிப்பு பின்னணி

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு பிறகும், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காகவே, 'தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்' என, உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபை தேர்தலில், 'தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். அதில் பா.ஜ., அங்கம் வகிக்கும்' என, அமித் ஷா கூறியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அமித் ஷா அறிவிப்பின் பின்னணி குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தில், கடந்த 1967ல் ஆட்சிக்கு வந்தது முதல், தி.மு.க., அனைத்து சட்டசபை, லோக்சபா தேர்தல்களிலும், கூட்டணி அமைத்துதான் தேர்தலில் போட்டியிட்டுள்ளது. சட்டசபை தேர்தலில், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் வெற்றிபெற்ற நிலையில், தனி மெஜாரிட்டி கிடைத்தது என்பதால், தி.மு.க., அரசின் அமைச்சரவையில் அக்கட்சியினர் மட்டும் இடம்பெற்று வருகின்றனர். தேர்தல் முடிந்ததும், அக்கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கும் வகையில், வெற்றிக்கு பாடுபட்ட, கூட்டணி கட்சிகளை கண்டு கொள்வதில்லை. அதுமட்டுமல்ல, 2006 தேர்தலில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட தி.மு.க.,வுக்கு, தனித்து ஆட்சி அமைக்கத் தேவையான அளவுக்கு மெஜாரிட்டி இல்லை. இருந்தும், கூட்டணிக் கட்சிகள் ஆதரவோடு, தி.மு.க., ஆட்சி அமைத்தது. ஆனாலும், கூட்டணி கட்சியினரை தி.மு.க., தலைமை கண்டு கொள்ளவில்லை.அதனால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கோஷம் தற்போது வலுத்துள்ளது. தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலுக்கு, தி.மு.க.,வை எதிர்கொள்ள, பா.ஜ., - அ.தி.மு.க., அணியில், மேலும் பல கட்சிகளை சேர்த்து, பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியில், அமித் ஷா ஈடுபட்டுள்ளார். தேர்தலுக்கு பின்பும், அ.தி.மு.க., உடனான கூட்டணி தொடர வேண்டும் என்பதே, அமித் ஷா உள்ளிட்ட மேலிடத் தலைவர்களின் விருப்பமாக உள்ளது.இதற்காகவே, அமித் ஷா அளித்த பேட்டியில், 'சட்டசபை தேர்தலுக்கு பின், தமிழகத்தில் நிச்சயமாக, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும். அதில், பா.ஜ.,வும் ஒரு அங்கமாக இருக்கும்' என, தெரிவித்தார். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஆட்சியை பிடிக்கும் நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த ஓரிருவருக்கு அமைச்சரவையில், அ.தி.மு.க., வாய்ப்பு கொடுத்தால், மத்திய அரசிடம் இருந்து, அதிக அளவிலான திட்டங்கள், நிதியை பெற்று, தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல முடியும். உள்ளாட்சி, லோக்சபா என, தொடர்ந்து வரும் தேர்தல்களிலும், இரு கட்சிகளின் கூட்டணி தொடரும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

ஜெய்ஹிந்த்புரம்
ஜூலை 03, 2025 00:54

அறிவிப்பின் பின்னணி ???


Palanisamy T
ஜூன் 29, 2025 22:24

அமித்ஷா ஒருக் கொள்கையுள்ள நல்ல அரசியல்வாதியாக ஆட்சியாளராக இருந்திருந்தால் அன்று 22 04 25 - ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எல்லை மீறி இந்தியாவில் 26 பேர்களை கொடூரமாக அவமதித்துக் கொன்றதற்க்கு பொறுப்பேற்று தன் பதவியை உடனே ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவர் உள்துறை அமைச்சர். ஆகவே இன்று தமிழகத்திற்கு வந்து அவர் அரசியல் செய்வதும் பேசுவதும் விநோதமாக வுள்ளது. தமிழகத்தில் அவரின் அரசியல் அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது.


Sampath
ஜூலை 02, 2025 15:25

பழனி சாமீ, போலீஸ் மானில நிர்வாகத்தின் கீழ வருகிறது என்று தெரியாதா ? 200 ரு வாங்கி ஒரு கட்டிங் போடுற உனக்கு இதெல்லாம் அதிகப்படியான அறிவு .


Palanisamy T
ஜூன் 29, 2025 21:52

ஆட்சியில் பங்கு கேட்கவில்லை அவர்களே ஏற்பார்களாம். அப்படி யென்றால் கேட்க வேண்டியதில்லை. அவர்களே ஆட்சிக் கட்டிலில் உள்ளே புகுந்து அமர்ந்துக் கொள்வார்களாம். இனி எடப்பாடி அவர்கள் என்னச் செய்யப் போகின்றார். அவரின் நிலை இன்று பரிதாப நிலையாகிவிட்டட்து


J.Isaac
ஜூன் 29, 2025 21:31

குரங்கு கையில் பூ மாலை


முருகன்
ஜூன் 29, 2025 16:58

இவர்கள் அமைச்சரவையில் இருந்தால் தான் மத்திய அரசின் நிதி ,சலுகைகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என்ன ஒரு வேடிக்கை


ஈசன்
ஜூன் 29, 2025 16:00

என்னங்க இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க. சாமி கோச்சுக்கபோவுது. அப்புறம் அண்ணாமலையார் வந்து தான் உங்களை காப்பாத்தோணும் ...


Anantharaman Srinivasan
ஜூன் 29, 2025 15:38

2026 ல் தனியாட்சியோ கூட்டணியாட்சியோ யார் வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்பட போவதில்லை.


Sridhar
ஜூன் 29, 2025 15:25

இல்லாத "திராவிடத்தை" புகுத்தினமாதிரி தமிழகம் கூட்டணி ஆட்சியை ஏற்றுக்கொள்ளாதுனு புதுசா இவனுகளே ஒரு உடான்ஸ் சித்தாந்தத்தை நிறுவ பாக்கறானுங்க. 67இல் திமுக வந்த பிறகு காமராஜ் காங்கிரஸ் பிரதான எதிர்கட்சியா வளர்ந்து வந்தபோது எம்ஜியார் வந்தார். காமராஜரும் அப்போது மறைந்ததால், வேறு கட்சிகள் எதுவும் பலமான நிலையில் இல்லை. ஏன் திமுகவே சாகும் நிலையில்தான் இருந்தது. பிற்காலத்தில் அதிமுக பிளவுபடும் சூழ்நிலை ஏற்பட்டதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கட்டுமரம் உள்ளே நுழைந்தது. அதன்பிறகும் ஜெயலலிதாவால் ஒடுக்கி ஓரம் கட்டப்பட்ட கட்டு, ஜெயலலிதாவின் தவறுகளாலேயே மீண்டும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்று மீண்டெழ முடிந்தது. பல இலவச திட்டங்களினால் மிகவும் சிரமப்பட்டு முன்னிலைப்படுத்த முயற்சித்தாலும், திமுக ஒரு பலவீன அரசியல் கட்சியாகவே தொடர்ந்தது. ஆனாலும், கட்டு சாமர்த்தியமாக மத்திய அரசில் புகுந்து மாபெறும் கொள்ளைகள் அடித்து கட்சி கட்டுமானத்தை பலமாக்கிக்கொண்டதினால், 21 தேர்தல் வரை சமாளித்து ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை ப்படுத்தி உள்ளே நுழைந்தனர். இன்று கட்சி தோற்கடிக்கப்பட்டாலும், 20, 30 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடிக்கும் அளவுக்கு கொள்ளைகள் அடித்து சேர்த்துவிட்டார்கள். மோடி கடுமையான நடவடிக்கைகள் எடுத்து எல்லா திருட்டு சொத்துக்களையும் பறிமுதல் செய்தாலொழிய இந்த திருட்டு கும்பலை தமிழ்நாட்டிலிருந்து அகற்றுவது இன்றைய நிலையில் மிகவும் கடினம். ஆனால், இப்போது 3, 4 எதிர் கட்சிகள் ஏறக்குறைய சமபலத்தோடு இருப்பதால், பிற மாநிலங்களில் நடப்பதுபோல் கூட்டணி ஆட்சி தமிழகத்திலும் நடைபெறலாம். அதற்க்கு எந்த தடங்கலும் இல்லை.


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூன் 29, 2025 13:28

ரோமாபுரியில் அடிமை வியாபாரிகள் எல்லாம் ரொம்போ உஷார் ..... சிங்கத்துடன் சண்டை போட அடிமைகளை தயார் செய்வது ஒரு சாதுர்யமான கலை .....வீரியமான சிங்கத்துடன் சண்டை செய்ய அடிமைகளுக்கு நல்ல போஷாக்கான உணவு கொடுத்து தயார் செய்வது ஒரு முறை... இல்லை வேடிக்கை பார்க்கும் மக்களின் ஆசைக்கு தீனி போட அடிமைகளை நோஞ்சானாக தயார் செய்வது இன்னொரு முறை.. அடிமையின் முதுகில் குத்துவது கூட அடிமை வியாபாரிகளின் உரிமை.. அந்த காலத்தில்... அடிமையின் கைகளையோ இல்லை கால்களையோ உடைத்தால் கூட அடிமைக்காக பேச அந்த காலத்தில் நாதி கிடையாது .. எனக்கு இதெல்லாம் திடீரெனெ நினைவுக்கு வருது ..... மக்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன் ...


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூன் 29, 2025 13:14

தமிழகம் எப்போதும் வெட்டு ஒன்னு ... துண்டு ரெண்டு ...அவ்ளோ தான் .... நாலாவது .. மூணாவது துண்டு எல்லாம் போடாது


முக்கிய வீடியோ