உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கி ஆவணங்கள் கேட்டு வழக்கு: செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவு

வங்கி ஆவணங்கள் கேட்டு வழக்கு: செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவு

சென்னை : சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பெறுவதற்காக, வரும் 22ல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தும்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி, செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி எஸ்.அல்லி விசாரித்தார்.செந்தில் பாலாஜி சார்பில் டில்லி மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், வழக்கறிஞர் மா.கவுதமன், அமலாக்கத் துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளிவைத்திருந்தார். இந்நிலையில், இவ்வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரி, செந்தில் பாலாஜி தரப்பில், மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'நாங்கள் கோரிய ஒரு சில வங்கி ஆவணங்களை வழங்கும்படி, இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை. கோரிய ஆவணங்கள் கிடைத்ததும், அதன்படி வாதிட அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படும்' என கூறப்பட்டது.இந்த மனுவை ஏற்ற நீதிபதி எஸ்.அல்லி, மீண்டும் வாதங்களை முன்வைக்க, செந்தில் பாலாஜி தரப்புக்கு அனுமதியளித்து நேற்று உத்தரவிட்டார்.அதையடுத்து, 'வங்கியில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களுக்கும், அமலாக்கத் துறை தங்களுக்கு வழங்கிய வங்கி சார்ந்த ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளதால், வங்கி வசமுள்ள ஆவணங்களையும் வழங்க வேண்டும்' என, செந்தில் பாலாஜி தரப்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தையும் பெற உரிமையுள்ளது என்றும், அதை நீதிமன்றமே வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.வங்கி ஆவணங்களை பெற்று கொள்ள, செந்தில் பாலாஜியை வரும் 22ல் பிற்பகல் நேரில் ஆஜர்படுத்தும்படி, சிறைத் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் வரை, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் நீட்டித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

S.Bala
ஏப் 18, 2024 10:59

நீதித்துறை மீது உள்ள மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது ஏழை குற்றவாளிக்கும் செல்வம் படைத்த குற்றவாளிக்கும் நடைமுறையில் ஏகப்பட்ட முரண்


Dharmavaan
ஏப் 18, 2024 10:24

கேவலமான நீதித்துறை எத்தனை ஜாமீன் மனுக்களை அடுத்தடுத்து அனுமதிப்பது வரைமுறை இல்லையா பணமிருப்பவனுக்கு மட்டும்தான் நீதியா ஏன் இதை நிறுத்தவில்லை கோர்ட் இதை மட்டுமே செய்துகொண்டிருந்தால் போதுமா


Kasimani Baskaran
ஏப் 18, 2024 06:42

இவன் கிழித்த கிழிப்புக்கு முன்னூறு கோடியில் வீடு கட்ட முடியும் என்றால் அப்படி என்னதான் தொழில் செய்தான் என்று கூட நீதிமன்றம் கேட்கவில்லை திஹாருக்கு அனுப்ப வேண்டும் - இல்லை அந்தமானுக்கு அனுப்பவேண்டும் தீம்க்கா ஆட்சி நடக்கும் தமிழகத்தில் சிறை வைத்தால் என்ன மாதிரியான டகால்டி வேலையும் கூட செய்ய முடியும் என்பதை நீதிமன்றம் அறிவது நல்லது


D.Ambujavalli
ஏப் 18, 2024 06:21

நீதித்துறை துறை/ அமலாக்கத்துறை களில் மறறொரு 'கன்னித்தீவாக ' மாறிக்கொண்டிருக்கிறது


Bye Pass
ஏப் 18, 2024 05:52

ஆவணங்கள் கேட்டாரா அல்லது


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை