உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் மதுவை ஒழிக்கும் சக்தி கொண்ட கட்சி பா.ஜ.,: அண்ணாமலை

தமிழகத்தில் மதுவை ஒழிக்கும் சக்தி கொண்ட கட்சி பா.ஜ.,: அண்ணாமலை

சென்னை: ‛‛தமிழகத்தில் மதுவை ஒழிக்கும் சக்தி பா.ஜ.,வுக்கு தான் உள்ளது'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில், யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை பேசியதாவது: ஒருபுறம் டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதிய மாணவர்கள் ரிசல்ட் வர வில்லை என போராடி கொண்டு இருக்கின்றனர். மறுபுறம் செவிலியர்கள் போராட்டம் நடத்தி கொண்டு இருக்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனை தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றியது தான். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=anq0s3da&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது. தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியது தான் திமுக ஆட்சியின் இரண்டாவது சாதனை. கோயில்கள், மசூதிகள் அருகில் என தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் சாராய கடைகளை திறந்துள்ளனர்.தமிழகத்தில் மதுவை ஒழிக்கும் சக்தி பா.ஜ.,வுக்கு தான் உள்ளது. பா.ஜ.,வில் உள்ள யாரும் மதுபான ஆலைகளை நடத்த வில்லை. தமிழகத்தில் கள்ளு கடையை திறப்பதற்கான நேரம் வந்துவிட்டது. டாஸ்மாக் கடைகளை மூடும் நேரம் வந்துவிட்டது. அரசியல் மாற்றம் மிக மிக முக்கியம். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

r ravichandran
ஜன 30, 2024 01:37

கடன் வாங்காத மாநிலங்களே இல்லை, நாடுகளும் இல்லை, அவசியம் கடன் வாங்க வேண்டும், ஆனால் அவை நிலையான வளர்ச்சி திட்டங்களுக்கு பயன் படுத்த வேண்டும், மாறாக ஓட்டுக்காக இலவச திட்டங்களுக்கு பயன் படுத்தும் வகையில் வாங்கபட்டால் அவை மேலும் கடன் சுமையை அதிகரிக்கும். 55 ஆண்டு கால திராவிட மாடல் அரசுகள் இன்னமும் இலவச பஸ் பயணம், யாரும் கோரிக்கை வைக்காத நிலையில் மகளிர் உரிமை தொகை ஆண்டுக்கு 12000 கோடி, இவையெல்லாம் ஓட்டு அரசியலுக்கு தான். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 96 மாதங்களாக அகவிலை படி கொடுக்க படாமல் உள்ளது. ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு உடனடியாக பண பலன்கள் கொடுக்காமல் 3 ஆண்டுகள் தவணையில் வழங்கும் நிலையில் அரசு கஜானா .உள்ளது. அந்த அளவிற்கு அரசு நிதி நிலமை படு மோசமாக உள்ளது. தேவை இல்லாத இலவசங்கள், தேவை அற்ற ஆடம்பர விழாக்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
ஜன 30, 2024 01:19

மகாராஷ்டிராவில், உத்தர பிரதேசத்திலும், ஹரியானாவிலும் .. மற்றும் பிற மாநிலங்களிலும் குப்புற அடிச்சி கவுந்து கிடப்பது ஏன் அண்டாமலை?


Ramesh Sargam
ஜன 30, 2024 00:44

பாஜக, மதுவை ஒழித்து ஆட்சியை பிடிக்க பார்க்கிறது. திமுக, மதுவை குடிக்கவைத்து ஆட்சியை தக்கவைக்க பார்க்கிறது.


GMM
ஜன 29, 2024 22:23

குடியை உடன் நிறுத்துவது கடினம். மாற்று கள்ளு. (இயற்கையான மது). டாஸ்மாக் வருவாய் சிலருக்கு. கள் வருவாய் பெரும் சமூக மக்களுக்கு. உடன் தடுத்தால் கள்ள சாராயம். மீனவருக்கு மாற்று சமூகம் இல்லை. பனை தொழிலுக்கும் மாற்று சமூகம் குறைவு. குல தொழில் அறிந்த சமூகம் தானே பிழைத்து கொள்ளும். குல தொழில் இல்லாத இரு பெரும் சமூகங்கள் விரும்பும் தொழிலை ஊர் ஊராக பயிற்று விக்க வேண்டும். சாதி கட்சிகள் ஒழியும். திராவிட இயக்கம் அஸ்தமிக்கும். (எல்லா நாடுகளும் கடன் வாங்க முடியாது. மாநிலங்களுக்கு கடன் தேவை இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் குறைவு. மாநிலங்கள் வெட்டி செலவை அரசியல் பந்தாவிற்கு செலவு செய்கின்றனர். தமிழக அதிக கடன் மூலம் விடு பட அடுத்த சில தலைமுறை உழைப்பு தேவை. தடுக்க அமைப்பு இல்லை.) பிஜேபி தடம் புரள கூடாது.


பேசும் தமிழன்
ஜன 29, 2024 21:41

மதுவை ஒழித்தால்... அவர்கள் எப்படி கட்சி நடத்துவார்கள்.... அவர்கள் பிழைப்பே..... மது மற்றும் இலவசத்தை நம்பி தான் நடக்கிறது.... நீங்கள் மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால்... அவர்கள் கட்சியை இழுத்து மூடி விட்டு போக வேண்டியது தான்.


SIVA
ஜன 29, 2024 21:40

இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் , அப்போது தான் தமிழ் நாடு உருப்படும் , ஒரு சிலருக்கு மூணு பொண்டாட்டி , மூணு புருஷன் கூட இருகாங்க அவங்க ஒன்னு செத்தா மீதம் ரெண்டு இருக்குதுல அத வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்று கவலை இல்லாமல் இருப்பார்கள் , அனால் அப்பாவி தமிழன் அப்படியா .....


Rajagopal
ஜன 29, 2024 21:40

திராவிடத்தை ஒழித்தாலே எல்லாம் சரியாகி விடும். தமிழகத்தை சினிமா மாயையில் மூழ்க வைத்து, சாராய சாக்கடையாக்கி, நாசம் செய்துள்ள திராவிடம் வேரோடு அழிக்கப்பட வேண்டும். ஈரோட்டு வெங்காயத் தலையனின் சிலைகள் நமது கோயில்கள் வாசலிலிருந்து என்று தகர்க்கப்பட்டு, நீக்கப்படுமோ அன்றுதான் திராவிடத்தின் இறுதி மூச்சாக இருக்கும்.


SIVA
ஜன 29, 2024 21:35

டாஸ்மாக் மூடும் நேரம் வந்து விட்டது என்று பேசி உள்ளார் , கடையை இன்னக்கி சீக்கிரமா மூட போகின்றார்கள் என்று நினைத்து டாஸ்மாக் இல் ஒரே கூட்டமாக உள்ளது


J.Isaac
ஜன 29, 2024 19:51

வெட்டி பேச்சு. யோக்கியர்கள், இந்தியா முழுவதும் மது விலக்கு அமுலப்படுத்தலாமே. பேசி பேசியே வீணப்போயிடுவார்


K.Ramakrishnan
ஜன 29, 2024 18:37

தன்னைத் தானே மெச்சிக்கிடுமாம் தவிட்டு கொழுக்கட்டை என்று கிராமத்தில் சொல்கிற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை