உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிராமணர்களை திட்டி, கொடுமைப்படுத்தி வில்லனை போல சித்தரித்து விட்டனர்

பிராமணர்களை திட்டி, கொடுமைப்படுத்தி வில்லனை போல சித்தரித்து விட்டனர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவண்ணாமலை: ''பிராமணர்களை திட்டி திட்டி, அவங்க வேலையை செய்ய விடாமல், அவர்களை கொடுமைப்படுத்தி, அவர்களை வில்லனை போல சித்தரித்து, தமிழக களத்தை, தி.மு.க.,வினர் மாற்றி விட்டனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.திருவண்ணாமலை சட்டசபை தொகுதியில், 'என் மண், என் மக்கள்' நடைபயணம் நிகழ்ச்சியில், மக்களிடையே தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:இந்தியாவில் தீர்க்க முடியாத பிரச்னைகளை, 10 ஆண்டுகளில் மோடி தீர்த்து வைத்துள்ளார். காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்பட்டு, இந்தியாவின் ஓர் அங்கமாக காஷ்மீர் மாற்றப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சி ஒரு பக்கம், கலாசார மீட்டெடுக்கும் பணி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.எதிர்காலத்தின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வரும், 2047ம் ஆண்டில், பொருளாதாரத்தில் முதன்மையாக மாற உள்ளது.தி.மு.க., அடாவடி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது. தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர், ஸ்ரீதரன், அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த, ஒரு பெண் போலீஸ் அதிகாரியை கை நீட்டி அடித்தார்.நீதிமன்றம், மூன்று முறை ஜாமின் வழங்காமல் தள்ளுபடி செய்த நிலையில், அவரை ‍இன்னும் போலீசார் கைது செய்யவில்லை. பல் பிடுங்கின பாம்பை போல இங்குள்ள எஸ்.பி., உள்ளார். அவருக்கு ஐ.பி.எஸ்., போட தகுதியிருக்கிறதா.யோகி முதல்வராக இருக்கும் உத்தரபிரதேசத்தில், போலீசார் மீது கை வைத்தால், அவன் கை இருந்திருக்காது. அதனால் தான் உ.பி., வளர்கிறது. நேர்மைக்கான மரியாதையை, தி.மு.க., கொடுக்கவில்லை.திருவண்ணாமலையில், பா.ஜ., வென்றால், அருணாசலேஸ்வரர் கோவில் வளர்ச்சிக்கு, 1,000 கோடி ரூபாய் கொண்டு வருகிறோம். வாரணாசி போல மாற்றி தர முடியும். மோடிக்கு வாக்களியுங்கள். ஹிந்து மதத்திற்கு எதிரான ஆட்சி, தமிழகத்தில் நடக்கிறது.திருமாவளவனின் சனாதன பிரச்னை என்னவென்றால், பிராமணர்கள் மட்டும் தான், கோவில் கருவறைக்குள் போக முடியும். அதனால் தான் எதிர்க்கிறேன் என்றார்.இன்று பிராமணர் அல்லாத மோடி, அயோத்தி கருவறைக்குள் சென்று பிராண பிரதிஷ்டை செய்த பிறகு, அதே திருமாவளவன், அது எப்படி மோடி போகலாம், அவர் சங்கராச்சாரியரா, அவருக்கு யார் அனுமதி கொடுத்தது, வெளியில் தானே உட்காரணும் என்கிறார்.இதுதான், அவங்க பித்தலாட்ட தனம், பிராமணர்களை திட்டி, திட்டி, அவங்க வேலையை செய்ய விடாமல், அவர்களை கொடுமைப்படுத்தி, அவர்களை வில்லனை போல சித்தரித்து, தமிழக களத்தை மாற்றி விட்டனர்.ஸ்டாலின் கூறுவார், 'பா.ஜ., மதவாத கட்சி' என்று. ஆனால், உதயநிதி மேடையேறி, 'நான் ஒரு கிறிஸ்துவன், அந்த வழிமுறையை பின்பற்றுகிறேன். என் மனைவி கிறிஸ்துவர்' என கூறுகிறார்.அது மதவாதம் இல்லையாம். இது என்ன பித்தலாட்டம். 19 நாடுகள், அமைப்புகள், மோடிக்கு உயரிய விருது கொடுத்தன. அதில், எட்டு இஸ்லாமிய நாடுகள் அடங்கும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Noble Noel
பிப் 06, 2024 16:01

உ பி யில் போலீஸ் ஐ அடித்தால் கையை எடுத்து விடுவார்களாம்


sankar
பிப் 05, 2024 06:47

பிராமணர் அல்லாத மோடி, அயோத்தி கருவறைக்குள் சென்று பிராண பிரதிஷ்டை செய்த பிறகு, அதே திருமாவளவன் அதே திருமாவளவன், அது எப்படி மோடி போகலாம், அவர் சங்கராச்சாரியரா, அவருக்கு யார் அனுமதி கொடுத்தது, வெளியில் தானே உட்காரணும் என்கிறார்.... இரட்டைக்குவளை முறை இருக்கவேண்டும் - இருந்தால்தான் இவர்கள் அரசியல் நடத்தமுடியும் என்பதே இவர்கள் நிலை


M Ramachandran
பிப் 02, 2024 19:19

சரியாயாக சொன்னீர்கள்


g.s,rajan
பிப் 01, 2024 21:49

எல்லாம் சரி ,தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கத்தில் அரங்கனுக்கு எதிரே திருஷ்டி பரிகாரமாக உள்ள நாத்திகவாதியான பெரியார் சிலையை எப்போது அகற்றப்போகிறீர்கள்...???


sankar
பிப் 05, 2024 06:48

நீங்களே சொல்லுங்க சார் - எப்போ


g.s,rajan
பிப் 01, 2024 21:42

கோட்டா சிஸ்டத்தால் நமது நாடு ஒழிந்துவிட்டது,பல பிராமணர்கள் தங்களின் தகுதி,திறமையை வளர்த்துக்கொண்டு பிழைப்புத் தேடி எப்போதோ வெளிநாடு சென்று விட்டார்கள்....


V GOPALAN
பிப் 01, 2024 18:32

Unfortunately all non Brahmins will go behind Thiruma, vaiko and Stalin. One day they will also wiped out by missionaries and hardcore Muslims.


HoneyBee
பிப் 01, 2024 17:19

கோழைகளாக பிராமணர்கள் உள்ள வரை இந்த செருப்படி தொடர் கதை தான்.


K V Ramadoss
பிப் 04, 2024 21:22

பிராமணர்கள் வேறு எப்படி இருக்கவேண்டும் என்கிறீர்கள்? யார் எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும் நாங்கள் எங்கள் வழியில் போகிறோம் என்று சாத்வீக வழியில் போவது பிழையா ? அனைவருடன் நட்பாக சகஜமாக பழகி நல் எண்ணத்தை வளர்த்தது வருகிறார்கள். இது போதாதா? ?


Varadarajan Nagarajan
பிப் 01, 2024 16:54

ப்ராம்மணனிடம் இருக்கும் தனி மனித ஒழுக்கம் மிகவும் பாராட்ட வேண்டியது. அவர்கள் எங்காவது எந்த குற்ற செயலிலாவது ஈடுபட்டு தண்டனை பெற்று இருக்கின்றார்களா என்று பாருங்கள். அவர்கள் ஆசிரியர்களாக கல்வி கற்பித்தபோது மாணவர்களிடம் கல்வி அறிவைத்தாண்டி ஒழுக்கமும் இருந்தது. அவர்கள் அரசு பணிகளில் இருந்தபோது நேர்மை இருந்தது, லஞ்சம் இல்லை. அவர்கள் நிறுவனகளை நிர்வகித்தபோது நேர்மையான நிர்வாகம் மற்றும் நியாயமான லாபமும் இருந்தது. அவர்கள் இந்த துறைகளிடமிருந்து வெளியேறியபிறகு மேற்சொன்ன அனைத்தும் விட்டொழித்து போயுள்ளது


Muralidharan S
பிப் 01, 2024 16:22

காஷ்மீரில் நடந்ததை போல, தமிழ்நாட்டில இருந்தும் பிராமணர்களை விரட்ட அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்டு நடந்து கொண்டு இருக்கும் முயற்சியே பிராமின் துவேஷம். பாரபட்சம் இன்றி பேசவேண்டும் என்றால்.. பிராமணர்களில் பலர் இன்று கடனை / உடனை வாங்கி, படித்து நாட்டை விட்டு சென்று நல்ல நிலைமையில் இருந்தாலும், இங்கே சமையல்காரர்களாக, சவுண்டிபிராமிணர்களாக, வருமானமே இல்லாத கோவிலில் பூஜை செய்பவர்களாக ஏழ்மை நிலைமையில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். உயர்ந்த பிரிவை சேர்ந்தவர் என்று பட்டம் கட்டி, எவ்வளவு அதிக மதிப்பெண் வாங்கி இருந்தாலும், அவர்களுக்கு பள்ளிகள் / கல்லூரிகளில் இடம் மறுக்கப்படுகிறது. அவர்களுக்கு எந்த அரசாங்க உதவியும் கிடையாது.. வசதியாக இருக்கும் பிராமிணர்கள் கூட அவர்களில் ஏழைகளுக்கு உதவுவது இல்லை (ஒரு சிலரை தவிர).. காலத்தின் அவலக்கோலம் இது. அப்படியும் பிராமிணர்கள் ஒருவரையும் ஏமாற்றி திருடி பிழைப்பத்தில்லை. (கர்மா'வின் மீது நம்பிக்கை இருப்பதால்). அவர்கள் உண்டு... அவர்கள் வேலை உண்டு.. இப்படி இருந்தும் இங்கே பிராமின் எதிர்ப்புக்கு காரணம்..... பிராமிணனனை முழுமையாக அகற்றி / ஒழித்து விட்டால், மதமாற்றங்கள் வெகு சுலபம். அதன் பிறகு கோவில் சொத்துக்களும் இல்லாமல் போகலாம், கோவில்களும் சிதிலமடைந்து காலப்போக்கில் காணாமல் போகலாம். இது முகலாயர்கள் முதல் பிரிட்டிஷ் காரர்கள் வரை கடைபிடித்த தந்திரம். சுதந்திரம் கிடைத்த பிறகும் இதே மிகவும் / அதை விட தந்திரமாக பல வழிகளில் தொடர்கிறது..(பாலுக்கும் காவல்.. பூனைக்கும் தோழன் என்பது போல..).. மக்கள்தான் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்...


N.Purushothaman
பிப் 01, 2024 14:52

பிராமணர்கள் அரசுத்துறையில் இருந்தவரை அவர்களின் நேர்மை மற்றும் ஒழுக்கத்தால் மற்றவர்களும் அதை பின்பற்றி மிக சிறந்த முன் உதாரணமாக இருந்தார்கள். அரசுப்பள்ளிகளில் அவர்கள் போதித்த ஒழுக்கம் நேர்மையால் அரசு பள்ளியின் கெளரவம் உச்சத்தில் இருந்தது. சமூக நீதி என்கிற பெயரில் அவர்களுக்கு செய்த அநீதியால் இன்று ஒட்டு மொத்த தமிழகம் லஞ்சம் ,ஊழல் ,நேர்மை ஒழுக்கமின்மை எல்லாம் தலையெடுத்து தாண்டவமாடுகின்றன ...அவர்களோ தனியார் துறையில் கோலோச்ச ஆரம்பித்துவிட்டார்கள்.. பிராமணர்கள் என்ற அடையாளம் இங்கு வெறுக்கப்பட அதே அடையாளத்தை கொண்டு இன்று உலகம் முழவதுவும் பறந்து விரிந்து அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு சிறந்த நபர்களாக மாறி உள்ளனர் ...


K.Muthuraj
பிப் 05, 2024 09:00

பிராமணர்கள் தனித்த செயல்பாடுகளுடன் இயங்கினாலும் அவர்களிடம் உள்ள உள்வாங்கும் தன்மை (Receptivity) அலாதியானது. அந்த தன்மையானது அவர்களின் சிறு குழந்தைகளுக்கும் உண்டு. மிகவும் வயதானவர்களிடத்திலும் உண்டு.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை