உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லுாரி கட்டுவது கோவிலுக்கான வேலையில்லை

கல்லுாரி கட்டுவது கோவிலுக்கான வேலையில்லை

கோவில் பணத்தில் கல்லுாரி கட்டுவது கோவில் வேலை இல்லை. இதில், பா.ஜ.,வுக்கு உடன்பாடு இல்லை. அறநிலையத்துறை நிதியில் கல்லுாரி கட்டுவதை நீதிமன்றம் தடை செய்துள்ளது.பழனி கோவில் நிதியில் உள்ள கல்லுாரியில், முஸ்லிம் ஆசிரியர்களை எப்படி நியமிக்க முடியும்? சிவ நாடார், கோடிக்கணக்கில் கொடுத்த பணத்தில், திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தி உள்ளனர். ஆனால், அதில் தனக்கு பெருமை தேடிக் கொண்டிருக்கிறார் சேகர்பாபு. உதயநிதி பாணியில் கேட்க வேண்டும் என்றால், திருச்செந்துாரில் செலவு செய்யப்பட்டது, உங்க அப்பன் வீட்டு பணமா? - ஹெச்.ராஜா பா.ஜ., முன்னாள் தேசிய செயலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

vbs manian
ஜூலை 12, 2025 15:04

கோவில் நிதியில் கோவில்களில் கழிப்பறை குடிநீர் அவசர மருத்துவ உதவி ஏற்பாடு செய்யுங்கள். கோவில் மதில் சுவர் அருகே திறந்த வெளி கழிப்பிடமாக காட்சி அளிக்கிறது. அதை தூய்மை செய்யுங்கள். வெய்யில் நேரத்தில் பிரகாரங்களில் வலம் போகமுடியவில்லை. நிழல் குடை தார்பாய் விரிப்பு ஏற்பாடு செய்யுங்கள். சுற்று சூழல் ஜீவ காருண்யம் பற்றி விளம்பரம் செய்யுங்கள். முதியவருக்கு லிப்ட் வசதி செய்யுங்கள். ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம் தூர் வாருங்கள். ஒரே சகதி கந்தல் துணிகள் இறங்க குளிக்க முடியவில்லை.


Vijayaraghavan L
ஜூலை 12, 2025 09:39

இந்த ஒன்றும் தெரியாத அமைச்சரை என்ன செய்வது.


vbs manian
ஜூலை 12, 2025 08:29

திருமணங்கள் செய்து வைப்பது கோவில் கும்பாபிஷேகம் செய்வதெல்லாம் ஒரு அரசின் வேலை அல்ல. உலகில் வேறு எங்கும் இந்த நகைசுவை காணமுடியாது. ஊழலற்ற நிர்வாகம் தரமான கல்வி குறைந்த செலவில் மருத்துவ சேவை மின் உற்பத்தி வேலை வாய்ப்பு தொழில் வளர்ச்சி இவையே அரசின் தலையாய கடமைகள்.


மூர்க்கன்
ஜூலை 12, 2025 09:46

ஒட்டு மொத்த இந்தியாவில் கல்விக்கு அதிக நிதி செலவிடும் மாநிலம் எது?? ஒட்டு மொத்த இந்தியாவிலும் மருத்துவ சிகிச்சைக்கு அயல் நாட்டினரும் நாடும் மருத்துவ தலை நகரம் எது? ஒட்டு மொத்த இந்தியாவிலும் அதிகம் அளவில் அணு சக்தி உட்பட மின்சாரம் தயாரிக்கும் மாநிலம் தொழில் வேலை வாய்ப்புள்ள மாநிலம் எது?? ஆக இவையெல்லாம் தமிழ் நாடு முன்னணியில் இருக்குமெனில் பெருவாரியான மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆன்மீக பணிகளும் அறப்பணிகளும் செய்வது குற்றமெனில் தவறு எங்கள் பக்கம் அல்ல. ..


R.RAMACHANDRAN
ஜூலை 12, 2025 06:33

கோயில்கள் பூசாரிகள் பிழைக்க காணிக்கை செலுத்துவதன் மூலம் கணக்கில் காட்டாமல் சொத்து சேர்ப்பதற்கு மட்டும் அல்ல .மக்களுக்கு சேவை செய்யும் விதத்தில் அறப்பணிகள் செய்தால் தெய்வம் மகிழும்.அந்த அறப்பணியில் ஊழல் உள்ளதா என பார்க்காமல் எதையோ பேசி மக்களை தன் பக்கம் இழுப்பதில் குறியாக உள்ளனர் அரசியல் வாதிகள்.


முக்கிய வீடியோ