வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நிலத்தின் வழிகாட்டி மதிப்பு அல்லது சந்தை மதிப்பு இவற்றில் எது அதிகம் அதன் மதிப்பில் பதிவு செய்தால் கருப்பு பணத்தை குறைக்கலாம்.
சரி இங்கும் டிரம்ப்
சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதற்கு காண என்ன அளவுகோல் உள்ளது. அதை குறிப்பிட்டு வழிகாட்டு மதிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் எந்த சட்டப்பிரிவு வாய்மொழி உத்திரவு அளிக்க அதிகாரம் வழங்கியுள்ளது. மதிப்பு குறித்த சந்தேகத்தின் பேரில் நிறுத்தி வைக்கப்படூம் இனங்களில் 47எ மூலம் மறு மதிப்பீடு செய்யப் படுகிறது. அதையே 47எ அதிகாரம் பெற்ற அதிகாரிகளிடம் சான்று பெற்றுவர அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம். எப்படியானாலும் கையூட்டு குறையப் போவதில்லை. இதை வழக்காக யாரும் கொண்டு போகவில்லை போல் தெரிகிறது. 2026 தேர்தலுக்குமுன் அனுபவிக்க வேண்டிய துன்பப் பட்டியலில் இதுவும் இணைகிறது.
இந்த கொள்ளை கும்பல் ஆட்சிக்கு வந்தாலே இப்படி எல்லாம் நடக்கும்.. தமிழக மக்கள் எப்போது புரிந்துகொண்டு இந்த கூட்டத்தை வேரோடு தூக்கி இருக்கிறார்களோ அப்போது தான் தமிழ் நாடு உருப்படும்
வாய்மொழி உத்தரவு சட்டமாக முடியாது? சட்டமன்றத்தில் சட்டம் போட வேண்டும் .இல்லை என்றால் லஞ்சம் அதிகம் ஆகும் .
Govts are MegaLooting People for Providing NIL Services Only Entering in Regn Records-Not Even RevenueRecords for Feeding OverFattened Govt Officials
தமிழக முதல்வர் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையின் புற நகர் பகுதியில் ஒரு sq.ft ரேட் Rs.27 என்று 2002-இல் மதிப்பிடப்பட்டது. அதே மதிப்பீட்டு வழி காட்டி 2017-இல் Rs. 1005 per sq.ft என்று உயர்த்தப்பட்டது. 2025-il அந்த பகுதியில் Rs.1650 per sq.ft என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இதனால் incometax act-il மூலதன வரியும் உயர்ந்து விட்டது. நடுத்தர மக்கள் அவசர தேவைகளுக்காக சொத்தை வித்தால் வரியே நிறைய கட்ட வேண்டியிருக்கிறது.
நிலங்களின் சந்தை மதிப்பு அரசின் அபிவிருத்தி பணிகளுக்கு ஏற்ப உயரும். தனிப்பட்ட தேவைகளுக்காக, வழிகாட்டி மதிப்பை விட, கூடுதல் மதிப்பில் பத்திரங்களை பதிவு செய்ய முடியுமா? வழிகாட்டி மதிப்பு ஒரு நிர்வாக குளறுபடி. மறு விற்பனையில் அதிக மோசடி. தேவைக்கு தான் நிலம், வீடு வாங்குவர். மறு விற்பனை அனுமதியை நிறுத்த வேண்டும் அல்லது அரசு வழிகாட்டு விலையில் கிரயம் பெற்று, ஏலம் விட்டு, அதிக பணத்தை கருவூலத்தில் சேர்க்க வேண்டும்.
பக்கத்தில் உள்ள கேரளாவில் வழிகாட்டு முறையில் உள்ள மதிப்பில் தான் விற்க படுகிறது. அங்கு கறுப்பு பணம் என்பதும் இல்லை பதிவாளர்களுக்கு லஞ்சம் என்பதும் இல்லை. உம். தமிழ்நாட்டில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்படுகிறது வாங்கப்படுகிறது. இரண்டு திருடர் கட்சிகளும் பதிவுத்துறை அலுவலகத்தை பணத்தை கொட்டும் ஒரு காமதேனுவாக மாற்றி விட்டார்கள்.
நகராட்சி ,மாநகராட்சிகளில் வழிகாட்டி மதிப்பிடுவதை நிறுத்தவேண்டும் .விற்பனைவிலைக்கே பதிவுகள் செய்யவேண்டும் .விற்பனை விலைக்கு குறைந்து பதிவு செய்யும் சொத்துக்களை பறிமுதல் செய்து போது ஏலத்தில் விடப்படும் என்ற சட்டம் இயற்றவேண்டும் .அப்படி சட்டம் இயற்றும் போது பதிவு கட்டணத்தை பாதியாக குறைக்கவேண்டும் .செய்தால் பதிவுத்துறை வருமானம் பலமடங்கு கூடும் .மக்களுக்கு சொத்துக்களின் மதிப்பு கூடும்