உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாத யாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி விபத்து; 3 பேர் பலி

பாத யாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதி விபத்து; 3 பேர் பலி

கடலூர்: விருதாசலத்தில் பாத யாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதிய விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வரதராஜன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த இருதயசாமி, ஸ்டெல்லா மேரி, சகாயமேரி, அமுதன், சார்லஸ் லுவாங்கோ, ரோஸ்லின் மேரி, ஆகியோர் தங்களது ஊரிலிருந்து மேல் நாரியப்பனூர் கிராமத்தில் உள்ள அந்தோனியார் கோவிலுக்கு நேற்று இரவு பாதயாத்திரை சென்றனர்.அவர்கள் விருத்தாசலம் சேலம் புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே நடந்து செல்லும் பொழுது, விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற கார் அவர்கள் மீது மோதியது. இதில், இருதயசாமி, அவரது மகள் சகாயமேரி, ஸ்டெல்லா மேரி ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.அமுதன், சார்லஸ் லுவாங்கோ, ரோஸ்லின் மேரி, ஆனந்தி ஆகிய நான்கு பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனந்தி மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதயாத்திரையாக சென்றவர்கள் மீது கார் மோதி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Rathna
ஜூன் 11, 2025 20:15

நல்ல பணம் புரளும் மதம். சுய தொழில் சிறப்பாக நடக்கிறது. ஆனால் ஏழைகள் தான் பாதிக்கப்படுகின்றனர்.


Tiruchanur
ஜூன் 11, 2025 17:54

பீர் சாப்பிட போயிட்டாரோ?


Natchimuthu Chithiraisamy
ஜூன் 11, 2025 16:52

இந்து முறையை கிருத்துவத்தில் செய்யாதீர்கள் பொங்கல் வைப்பதும் தவறு.


sridhar
ஜூன் 11, 2025 16:40

பாத யாத்திரை எல்லாம் கிருத்துவத்தில் கிடையவே கிடையாது . எதற்கு இந்த வீண் வேலை . தமிழக கிறிஸ்துவர்கள் யேசுவையே ஹிந்து மதத்துக்கு மாற்றுகிறார்கள் .


nagendhiran
ஜூன் 11, 2025 15:41

உபியில் நடந்திருந்தா பாஜக சதினு சொல்லியிருப்போம்? நடந்தது விடியல் ஆட்சியில்? அதனால் வாயையும் சேர்த்து பொத்திட்டு இருக்கோம்?


முக்கிய வீடியோ