உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு : ஸ்டாலின்

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு : ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தர்மபுரி: மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என தர்மபுரி பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.லோக்சபா தேர்தலையொட்டி தர்மபுரி , கிருஷ்ணகிரி தி.மு.க., கூ்டடணி வேட்பாளர்கள் ஆ.மணி, கோபிநாத் ஆகியோரை ஆதரித்து தி.மு.க, தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பேசியது,நடக்கவிருப்பது இந்திய வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல். இதனை மக்கள் உணர வேண்டும். தர்மபுரி தி.மு.க, வேட்பாளர் ஆ.மணி ஆற்றல் மிகு தொண்டர், கிருஷ்ணகிரி காங்., வேட்பாளர் கோபிநாத் உங்களுக்கு தெரிந்தவர். சமத்துவம் என்றால் என்ன என கேட்கும் கட்சி பா.ஜ., சமூகநீதி பேசக்கூடிய ராமதாஸ் பா.ஜ.வுடன் கூட்டணி யில் இணைந்தது ஏன் ? சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் உத்தரவாதம் பெற்றாரா? ராமதாஸ். வன்னியர் இட ஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்தியது தி.மு.க., மக்களின் நலனுக்காகவே பாடுபடும் கூட்டணி ‛‛ இந்தியா கூட்டணி ''.

நான் நடத்தும் 2-வது உலகப்போர்

நான் நடத்தும் 2-வது உலகப்போர் இது இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கும் ஓட்டு ஜனநாயகத்திற்கு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு அளிக்கும் வாய்ப்பு நீங்கள் அளிக்கும் ஓட்டு ஜனநாயகத்திற்கும், தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் அளிக்கும் வாய்ப்பு, இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட பா.ஜ.,வை வீட்டு அனுப்பி, இண்டியா கூட்டணியை நீங்கள் ஆட்சியில் அமர வைக்க வேண்டும்.தி.மு.க. அரசு தான் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தது. சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் கட்சி பா.ஜ., அரசியமைப்பு சட்டம் காக்கப்பட வேண்டும் என்றால் பா.ஜ.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நாட்டை சாதி, மத. இன, மொழி அடிப்படையில் பிளவு படுத்தி குளிர்காய நினைப்பது பா.ஜ., கட்சி தான். சாதிவாரி கணக்கெடுப்புக்கு முட்டு போட்டது பா.ஜ., . தன்னை சாமானியனாக அறிவித்து சாமானியருக்காக ஆட்சி நடத்தியவர் கலைஞர் கருணாநிதி. மகளிர் உரிமை தொகையை தாய்வீட்டு சீதனம் என பெண்கள் கொண்டாடுகின்றனர். அரசின் திட்டத்தால் பள்ளி குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை பயனடைகின்றனர். பா.ஜ.வை போல யாரும் விவசாயிகளுக்கு கொடுமை செய்திருக்கமுடியாது. மாநிலங்களின் அதிகாரங்களை அழிக்க துடிக்கிறார் மோடி. மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுக்கு ஒரு முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். ஒசூரில் விமான நிலையம், கிருஷ்ணகிரியில் ரயில் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னதை செய்த பெருமையோடு உங்கள் முன் நிற்கிறேன். சமூகநீதியை காப்பாற்றுகின்றன அரசை அமைக்க இண்டியா கூட்டணியை வலுவாக அமைத்துள்ளோம். சமூக நீதி காக்க, சமுத்துவம் தழைக்க நீங்கள் இண்டியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.. இந்த தேர்தலில் மக்கள் பா.ஜ.,வை ஒதுக்கத்தான் போகிறார்கள். நாற்பதும் நமதே. தேர்தலில் போட்டியிட பணம் இல்லைஎன நிதியமைச்சர் கூறி வருகிறார் தேர்தல் பத்திரம் மூலம் கிடைத்த பணத்தை தர முடியாது என பா.ஜ. கூறி விட்டதா? மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பது தெரிந்து நிர்மலா சீதாராமன் தப்பித்து விட்டார். தேர்தலுக்காகத்தான் பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளார் பிரதமர். மாநிலங்களின் அதிகாரத்தை அழிக்க நினைக்கிறார் பிரதமர். பிரதமர் மோடி எஜமானர் அல்ல. மக்கள் தான் பிரதமருக்கு எஜமானார்கள். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

NACHI
மார் 30, 2024 05:31

ஆணியே புடுங்கவேணாம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 30, 2024 05:29

பிரதமர் தேர்தலுக்காகவாவது பெட்ரோல் விலையை குறைத்தார் திமுகவின் திராவிட மாடல் தேர்தலுக்காகவாவது சிலிண்டர் விலையை குறைத்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய இருக்கலாம் நீங்களும் பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியை குறைத்து மக்களுக்கு உதவியிருக்ககலாமே தேர்தலுக்காகவாவது மனசு வேண்டும் மனம் இருந்தால் மார்க்கம் உண்டு


somasundaram alagiasundaram
மார் 29, 2024 22:29

சமூக நீதி பேசுற உங்களுக்கு எதுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு


ஆரூர் ரங்
மார் 29, 2024 22:03

கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் மத்திய ஆளும் கூட்டணியில் இருந்த போது நடத்தாத சாதிவாரிக் கணக்கெடுப்பை இனிமேல் ஜெயித்தால் நடத்துவாராம்?. புருடா மன்னனின் ரீல் அறுத்து போச்சு.


ஆரூர் ரங்
மார் 29, 2024 22:01

உலகத்திலேயே பெண்களுக்கு பவுடர் கிரீம் வாங்க 1000 ஓஷி கொடுப்பது? திமுக ஆட்சி மட்டுமே. எப்பேர்ப்பட்ட சாதனை?


adalarasan
மார் 29, 2024 21:52

athaikku meesai mulaicha?" enbhathupol pokaatha oorukku vazhi solraaru? pala vakkuruthikalai adichu vidaraaru?? bihar, karnatakaa vil maanila arase saathivari kanakku eduthauvittaarkale? en ungalaala mudiyavillai?mathiyin meethu pazhi podukiraarkale? adhe samayam, jaathivaari kanakku eduppu thavaraanathu enbhathu en karuthu?


panneer selvam
மார் 29, 2024 21:45

Caste wise census could be done by state government You do not need to shift that responsibility to Central


r ravichandran
மார் 29, 2024 21:44

அமைந்தால் தானே அது கனவில் தான் நடக்கும்


hariharan
மார் 29, 2024 21:21

அத்தைக்கு மீசை முளைக்கட்டும் கொமாரு. அப்புறம் பார்க்கலாம்.


Anbuselvan
மார் 29, 2024 21:02

Let INDI Alliance announce rupees one lac per citizen every month as they are not going to come to power after all INDI koottani aatchikku vandhaal maadham ovvoruvarukkum oru laksham roobai koduppen endru sollungal varave varaadhu engira nambikkaiyi


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை