உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 18 மாவட்டங்களில் சி.இ.ஓ.,க்கள் பணியிடம் காலி; காலாண்டு கடந்தும் கவலைப்படாத கல்வித்துறை

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் சி.இ.ஓ.,க்கள் பணியிடம் காலி; காலாண்டு கடந்தும் கவலைப்படாத கல்வித்துறை

மதுரை: இக்கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வு முடிந்த நிலையிலும், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பள்ளி ஆய்வுகளுடன் நிர்வாகப் பணிகளும் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.கல்வித்துறையில் பள்ளிகள் ஆய்வு, கற்றல் கற்பித்தல் தொடர்பான கண்காணிப்பு, மாணவர்களுக்கான நலத் திட்டங்கள் வினியோகம் ஆகியவற்றில் மாவட்ட சி.இ.ஓ.,க்கள் பங்கு முக்கியம். ஆனால் இக்கல்வியாண்டு துவக்கம் முதல் பல மாவட்டங்களில் சி.இ.ஓ.,க்கள் பணியிடம் காலியாக உள்ளன. கிருஷ்ணகிரியில் ஓராண்டாக காலியாக உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jjzm38ru&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதுதவிர தஞ்சை, மயிலாடுதுறை, தேனி, திருப்பூர், நாகபட்டினம், நீலகிரி, ராணிப்பேட்டை, வேலுார் என 18 மாவட்டங்களில் இரண்டு மாதங்களாக சி.இ.ஓ.,க்கள் இல்லை. காலாண்டு தேர்வுகள் முடிந்த நிலையிலும் பணியிடம் நிரப்புவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.இதனால் சி.இ.ஓ.,க்கள் பணிகளை டி.இ.ஓ.,க்கள் கூடுதலாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவர்கள் இரட்டைப் பணிச்சுமையில் சிக்கி தவிக்கின்றனர். இதன் விளைவு மாணவர்கள் கற்றல் அடைவுத் திறன் (சிலாஸ்) தேர்வில் எதிரொலித்துள்ளது. பல மாவட்டங்கள் பின்தங்கியுள்ளன.

அமைச்சர் உத்தரவு காற்றில்...

இது குறித்து ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கல்வித்துறையில் ஆசிரியர், மாணவர்கள், அரசு பள்ளிகள் நலன்சார்ந்த எந்த கோரிக்கைகளையும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. சங்கங்கள் தொடர்ந்து போராடும் நிலை தான் உள்ளது. இத்துறை அமைச்சர் மகேஷ், மதுரையில் நடந்த கல்வித்துறை ஆய்வுக் கூட்டத்தில் 'துறை தொடர்பாக நாளிதழ்கள் செய்திகள் வெளியாகும் போது அதுகுறித்து உடன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டார். ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் உத்தரவை அதிகாரிகள் காற்றில் பறக்கவிடுகின்றனர்.முக்கியமாக ரூ.பல கோடிகளில் மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படுவதில் சி.இ.ஓ.,க்கள் பங்கு முக்கியமானது. ஆனாலும் 50 சதவீதம் சி.இ.ஓ., பணியிடம் காலியாக உள்ளன. பள்ளி ஆய்வுகள், உதவிபெறும் பள்ளிகளுக்கு அங்கீகாரம், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குதல், மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணப்பலன்கள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் முடங்கிக் கிடக்கின்றன.அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் டி.இ.ஓ.,க்கள் நியமனத்தில் இனச்சுழற்சியை முறையாக பின்பற்றவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனால் சி.இ.ஓ., பதவி உயர்வு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் அதற்கும் தீர்வு கிடைத்து பின்னரும் சி.இ.ஓ.,க்கள் நியமனத்தில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாதது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும். எனவே காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முன் இப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Muthukumar G
செப் 27, 2025 18:19

அரசு உதவி பெறும் பள்ளிகளில் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பபடாமல் இருக்கின்றன.238ஜுவோவை போட்டு அன்று அதிமுக கெடுத்து இன்று திமுக கெடுத்துள்ளது.இவங்க இரண்டு பேரும் சரியில்லை.நீதிமன்றமும் தூங்குகிறது


Sivaram
செப் 27, 2025 15:04

நானும் அன்பில் மகேஷும் பிரிக்க முடியாத உடன்பிறப்புகள் எல்லாம் போக போக சரி செய்யப்படும் திராவிட மாடல் அரசு பெரியார் வாழ்க உடன்பிறப்பே


கல்யாணராமன் சு.
செப் 27, 2025 14:49

CEO க்கள் இல்லேனா என்ன, அதான் அந்த விழாவுக்கு வந்த நடிகர்கள், தற்குறி இயக்குனர்கள், அடிவருடி பத்திரிக்கையாளர்கள் பள்ளி போறதுக்கு ரெடியா இருக்கிற தொகுப்பாளரை CEO க்களா நியமிக்கவேண்டியதுதானே


கல்யாணராமன் சு.
செப் 27, 2025 14:32

இப்படி ஆயிரம் ஓட்டைய வெச்சுக்கிட்டு, தனக்குத் தானே பாராட்டுவிழா நடத்தறது திமுக திருடர்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அதன் அல்லக்கைகளால்தான் முடியும் . ... மத்தவங்களுக்கு சுட்டுக் போட்டாலும் வராது ....


Nanchilguru
செப் 27, 2025 13:17

ஏங்க டீச்சரே இல்லையாம் அப்புறம் சி.ஏ.ஓ மட்டும் எதற்கு


karthik
செப் 27, 2025 09:12

அதுதான் கல்வியில் சிறந்த தமிழ்நாடு படம் ஓட்டிட்டோம்ல.. அப்பறம் என்ன? தமிழர்களுக்கு படம் காமிச்சா போதும்


T.Senthilsigamani
செப் 27, 2025 08:46

உண்மையை உரக்க சொன்னதுக்கு வாழ்த்துக்கள் . கடந்த இரு நாட்களாக கல்வியில் சிறந்த தமிழகம் என சமூக ஊடக ,டிவி விவாதங்களில் பாராட்டு மழை பொழிந்து விட்டனர். ஆனால் உண்மை என்பதை மட்டுமே சொல்லும் .டிவி விவாதங்களை பார்க்கும் சாமானியர் அகில உலகிலே தமிழகம் தான் கல்வியில் முன்னணி என நினைப்பர் .திராவிட மாடல் உருட்டுகளில் இதுவும் ஓன்று


KOVAIKARAN
செப் 27, 2025 08:17

சி.இ.ஓ.,க்கள் நியமனத்தில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாதது அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் எனபது செய்தி. என்னவோ, தமிழகத்தில் மாணவர்களின் கல்வித்திறன் மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்று நினைப்பா?அல்லது அரசுக்கு இனிமேல்தான் கெட்டபெயர் ஏற்படுமா? தமிகத்தில் பள்ளிக்கல்வியின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று பல வித குறைகளைக் குறிப்பிட்டு, தினமலர் அடிக்கடி சுட்டிக்காட்டுவது தெரியாதா? என்றைக்கு ஒரு தரம் கேட்ட நடிகர் துணை அமைச்சர் ஆகி, அவரது ரசிகர் மன்றத்தலைவர் மிகவும் முக்கியமான பொறுப்புள்ள பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சரானாரோ, அன்றே தமிழகத்தில் கல்வியின் தரம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. ஆசிரியர் பற்றாக்குறை, அதிகாரிகள் பற்றாக்குறை, பள்ளிக்கட்டிடங்கள் பற்றாக்குறை, மரத்தடியில் வகுப்புகள் நடத்துவது, பள்ளிகளில் மாணவர்களிடையே ஜாதி கலவரங்கள் மற்றும் வெட்டு குத்து சம்பவங்கள், குட்கா போன்ற போதை வஸ்துக்களை கொண்டு வருவது, ஆசிரியர்களால் பாலியல் தொல்லைகள், அரசு விற்கும் சாராயத்தை காலையிலே குடித்துவிட்டு ஆசிரியர்கள் வகுப்புக்கு வருவது, போன்ற இழிவான செயல்கள் தானே தமிழக பள்ளிக்கல்வியின் இன்றைய நிலைமை. இப்படி இருக்க, அப்பாவும் மகனும் தமிழகத்தில் கல்வி மிகச் சிறப்பாக உள்ளது என்று சாராய போதைகளில் மிதக்கும் மக்களிடம் அன்றாடம் அறிக்கை வேறு விடுகின்றனர்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 27, 2025 08:13

விடியலுக்கு ஓட்டுப்போட்டவனுங்களுக்கு தண்டனை


VENKATASUBRAMANIAN
செப் 27, 2025 08:10

நான்கு பேரை வைத்து பாராட்டு விழா மட்டுமே. இதுதான் திராவிட மாடல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை