உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெல்டாவில் பிப்., 2 வரை மழைக்கு வாய்ப்பு

டெல்டாவில் பிப்., 2 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: நாளை மறுதினம் முதல், பிப்., 2 வரை டெல்டா மாவட்டங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இரண்டு வாரங்களாக எந்த பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்யவில்லை. பனி மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில், நள்ளிரவு மற்றும் அதிகாலையில் உறைபனி நிலவுகிறது.இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை மறுதினம் முதல், பிப்., 2 வரை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.அதேநேரம், நாளை மறுதினம் வரை, தமிகம், புதுச்சேரியில் பகலில் வறண்ட வானிலையும், இரவு மற்றும் அதிகாலையில் குளிரும் நிலவும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை