வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம்; பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா
சிவகங்கை: உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா
கொடியேற்றத்துடன் துவங்கியது. மூஷிக வாகனத்தில் உற்சவர் விநாயகர்
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்;சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே
உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சதுர்த்தி பெருவிழா இன்று
(ஆக.,18) கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை சண்டிகேசுவரர்
சந்நிதியில் இருந்து கொடி புறப்பாடாகி கோயிலை வலம் வந்தது. தொடர்ந்து கொடி
மரம் அருகே உற்சவ விநாயகர், அங்குசத்தேவர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளல்
நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.