உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்போலோவில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிகிச்சை: மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்!

அப்போலோவில் முதல்வர் ஸ்டாலினுக்கு சிகிச்சை: மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்!

சென்னை: நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, முதல்வர் ஸ்டாலினுக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்கள் ஓய்வில் இருப்பது அவசியம் என, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qevu6qrl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், 72, தினமும் காலையில், அடையாறு போட் கிளப் மைதானத்தில் நடைபயிற்சி செய்வது வழக்கம். நேற்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு உள்ளது.அதை சமாளித்தபடியே நடைபயிற்சியை முடித்து வீடு திரும்பினார்; பின், வழக்கமான பணிகளை தொடர்ந்தார்.அண்ணா அறிவாலயத்தில், அ.தி.மு.க., முன் னாள் அமைச்சர் அன்வர் ராஜா, தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தொடர்ந்து தலைசுற்றல் இருந்ததால், சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப் பல்லோ மருத்துவமனையில், ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார்.இதய நோய் நிபுணர்கள் உள்ளிட்ட பல்துறை டாக்டர்கள், முதல்வரை பரிசோதித்து, ஆரம்பகட்ட சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, சில பரிசோதனைகளும் முதல்வருக்கு மேற் கொள்ளப்பட்டு உள்ளன.அவரது மனைவி துர்கா, மகனும், துணை முதல்வருமான உதயநிதி உடன் இருந்தனர். அமைச்சர்கள் துரைமுருகன், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று முதல்வரிடம் நலம் விசாரித்தனர்.பிரதமர் நரேந்திரமோடி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், நடிகர் ரஜினி மற்றும் அரசியல் தலைவர்கள், தொலைபேசி வாயிலாக முதல்வரிடம் நலம் விசாரித்தனர்.இதற்கிடையே, அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ சேவை இயக்குநர் பி.ஜி.அனில், நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில், 'முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சியில் ஈடுபட்டபோது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.'தலைசுற்றல் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய, தேவையான பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.அப்பல்லோ மருத்துவமனை நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், 'மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், டாக்டர்களின் அறிவுரைப்படி, மேலும் மூன்று நாட் களுக்கு ஓய்வில் இருப்பது அவசியம்.'கூடுதலாக சில மருத்துவ பரிசோதனைகளும் அவருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. மருத்துவமனையில் இருந்தபடியே, அரசு அலுவல்களை அவர் வழக்கம்போல மேற்கொள்வார்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி, ராகுல் நலன் விசாரிப்பு

முதல்வர் ஸ்டாலினை பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி., ராகுல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலன் குறித்து கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 78 )

Murugesan
ஜூலை 26, 2025 18:25

தமிழக மக்களுக்கான பணத்த கொள்ளையடித்து வாழுகின்ற அனைத்து திராவிட அயோக்கியனுங்களே, செய்த பாவம் சும்மா விடாது


V GOPALAN
ஜூலை 24, 2025 13:44

Stalin requires total rest hereafter.


DHAMOTHARAN U
ஜூலை 24, 2025 07:39

அரசு ஆஸ்பத்திரியில் நல்ல மருத்துவர்கள் இல்லை


DHAMOTHARAN U
ஜூலை 24, 2025 07:38

அப்போ அரசு ஆஸ்பத்திரி


velusamy dhanaraju
ஜூலை 22, 2025 12:24

இரண்டு இட்லி கெட்டி சட்னி பார்சல்.


Shekar
ஜூலை 22, 2025 10:46

கடவுளே காப்பாற்று


Kalyanaraman
ஜூலை 22, 2025 10:30

கடந்த நான்கு வருடங்களாக இரவு பகல் பாராது ஓயாமல் தமிழ்நாட்டுக்காக "உழைத்ததில்" வந்த வருமானத்தில் தன் பங்கையும், கட்சியின் பங்கையும் பார்த்து- வியந்து தலைசுற்றி விட்டதோ.


SENTHIL NATHAN
ஜூலை 22, 2025 10:09

தலைமை செயலர்/கட்சி பொதுச் செயலாளர் தான் அறிக்கை வெளியிட வேண்டும். அப்போலோ இயக்குனர் செய்தியறிக்கை தருகிறார். என்ன???????


பிரேம்ஜி
ஜூலை 22, 2025 09:55

ஓயாமல் உழைத்த உத்தமர்! ஓய்வு எடுக்க விடுங்களேன்! ஒரு மூன்று மாதங்கள் கழித்து வந்து இரண்டு மடங்கு வேகமாக உழைப்பார்! அநாவசிய கவலை வேண்டாம்! 2031 வரை அவர்தான் முதல்வர்!


Padmasridharan
ஜூலை 22, 2025 09:16

Get Well Soon


முக்கிய வீடியோ