உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு ரூ.5 கோடி பரிசு!

உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு ரூ.5 கோடி பரிசு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரர் குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்' என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.செஸ் உலகின் இளம் சாம்பியன் ஆகி புதிய சாதனை படைத்தார் இந்தியாவின் குகேஷ். இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச போட்டிகளில் விளையாடி, உலக சாம்பியன் என்ற பட்டத்தை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக, உலக சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் தற்போது பெற்றுள்ளார்.சரித்திரம் படைத்துள்ள செஸ் வீரருக்கு, நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து லோக்சபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kv12dl7p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் நேற்று நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வென்று சாதனை படைத்தார். மிக இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று உலக செஸ் சாம்பியனாக வாகைசூடி சாதனை படைத்து, இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த குகேஷ்க்கு 5 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Palanisamy T
டிச 14, 2024 03:41

தமிழகத்தை சேர்ந்த குகேஷ் அவர்களுக்கு முதல்வர் பாராட்டு. ஆந்திர முதல்வர் அவர்கள் எங்கள் இனத்தை சேர்ந்தவ ரென்று தனிப் பட்டமுறையியில் தன் வாழ்த்து மடலில் குறிப்பிட்டுள்ளார் , " Hearty congradualation to our own Telegu boy" என்று பாராட்டி யுள்ளார் . இதேப் போன்று தமிழக முதல்வரும் தன் வாழ்த்துமடலில் இப்படியும் பாராட்டியிருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மேலும் ஆந்திர முதல்வருக்கு இன்னொரு செய்தியையும் சொல்லவேண்டியுள்ளது . அன்று ஆந்திரர்களென்ற தனிப்பட்ட இனமில்லை . முன்பு தமிழர்களாக இருந்தவர்கள் இப்போது ஆந்திரர்களாக பிரிந்து விட்டார்கள். இன்றைக்கும் தமிழக மக்களுக்கு ஏது மொழிப் பற்று. அது அன்று இருந்திருந்தால் இன்று இப்படி யெல்லாம் பிரிவினைகள் இப்போது வந்திருக்குமா? இங்கே ஆந்திர முதல்வரின் இனப் பற்றையும் மொழிப் பற்றையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.


தாமரை மலர்கிறது
டிச 13, 2024 22:07

மக்கள் பணத்தை வாரி இறைப்பது மிகப்பெரிய தவறு. முதல்வர் அழைத்து கௌரவித்தாலே போதும். பணம் இருப்பவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பது இமாலய தவறு. நல்லவேளையாக மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.


RAAJ68
டிச 13, 2024 22:07

பணம் படைத்த ஒருவருக்கு ஐந்து கோடி கொடுப்பது கொஞ்சம் கூட நியாயமே இல்லை. குளிரில் வீடு இல்லாமல் சாலை ஓரங்களிலும் ரயில்வே நடை மேடைகளிலும் படுத்து உறங்கும் பலருக்கு போர்வை வாங்கி கொடுக்கலாம் உணவு வாங்கி கொடுக்கலாம் . உங்கள் முடிவு சரியானது அல்ல


என்றும் இந்தியன்
டிச 13, 2024 17:26

Well Done குகேஷ் ஆசீர்வாதங்கள் இப்படியே ஜெயித்துக்கொண்டிருக்க


முதல் தமிழன்
டிச 13, 2024 16:04

முதலைமைச்சர், யார் வீட்டு பணம்? மக்கள் தவிக்கிறார்கள், நீங்கள் 5 கோடி கொடுக்கறீர்கள்? ஏன்?


Narasimhan
டிச 13, 2024 18:55

அவர் ஒண்ணும் அதை வைத்து டாஸ்மாக்கே கதி என்று இருக்கப்போவதில்லை


Sivak
டிச 13, 2024 19:32

ஓட்டுக்காக ஓசி ல மாசம் 100 பெண்களுக்கு குடுக்கறானுங்களே... யார் வீட்டு பணம் ??? நம்ம வரி பணம் .... வருஷம் 12000 கோடி ... அப்ப எவருமே கேட்கல.. 5 கோடிக்கு ஏன் முந்திகிட்டு வர்றீங்க ???


Pandi Muni
டிச 13, 2024 16:02

கள்ள சாராயும் குடிச்சி செத்தவனுக்கே 5 லட்சம் கொடுக்கும் போது 16 கோடி ஆட்டைய போட்ட பாலம் தண்ணியில போகும் போது உலக செஸ் சாம்பியனுக்கு 5 கோடி பெரிசில்லைதான்


ngopalsami
டிச 13, 2024 15:18

இது ரொம்ப ஓவர் அண்ணே , தமிழகமே மழையில் தண்ணீரில் மிதக்குது. உணவும், ஒதுங்க இடமில்லாமல் தவிக்கும் மக்களுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டுங்கள் . பிறகு இதை செய்யலாம்.யாரும் தடுப்பதில்லை. யாரை திருப்தி படுத்த இந்த வேலை.


Duruvesan
டிச 13, 2024 15:58

அதாமிலே கேலோ இந்தியா வுக்கு உதயமிதி சன்மானம்.


Kavitha Sivakumar SG
டிச 13, 2024 14:45

Congratulations, Gukesh. Proud moment for India TamilNadu and family, especially your parents


Krishnamurthy Venkatesan
டிச 13, 2024 14:24

பள்ளிகளில் செஸ் carrom டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை மாணவர்களுக்கு சிறு வயதிலேயே பயிற்றுவித்தால் தமிழகம் மேலும் பல சாதனைகளை உலக விளையாட்டு துறைகளில் சாதிக்கும்.


SANKAR
டிச 13, 2024 15:42

we are doing.


சம்ப
டிச 13, 2024 13:55

ஒருவேளை உணவுக்கு அல்லாடுபவர் இருக்க இது திமிர் பிடிச்ச வேலை எவனாவது நீதி மன்றத்துக்கு போகவும்


chennai sivakumar
டிச 13, 2024 15:02

அரசின் கொள்கை முடிவில் நீதி மன்றம் தலையிடாது


SANKAR
டிச 13, 2024 15:42

think how much cricket players get just for plaing.rishab pant paid 27 crores to play in ONE IPL season.bcci pays crores as match fee.what is paid to others ? if there is no organization to pay chessmeen that too winner of highest honor then govt must step in.any state would have done this if gikesh belongs to that state


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை