உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.177 கோடியில் 18 மாவட்டங்களில் 34 பாலங்கள் கட்ட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு; எங்கு எல்லாம் தெரியுமா?

ரூ.177 கோடியில் 18 மாவட்டங்களில் 34 பாலங்கள் கட்ட முதல்வர் ஸ்டாலின் உத்தரவு; எங்கு எல்லாம் தெரியுமா?

சென்னை: கோவை, கடலூர், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள் அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ரூ.177.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாலங்களின் கட்டுமானப்பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஊரகப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதே தமிழக அரசின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, ஊரகப் பகுதிகளில் அடிப்படைத் தேவைகளான சாலைகள், உயர்மட்ட பாலங்கள், தெருவிளக்குகள், குடிநீர் வழங்குதல் மற்றும் சுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்தி, உட்கட்டமைப்புகளான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஊரகச் சந்தைகள், உணவு கிடங்குகள் போன்றவற்றை ஏற்படுத்தி, புதிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கி அதனைத் திறம்படச் செயல்படுத்தி, தமிழக அரசு நாட்டிலேயே முன்னோடியாக விளங்கி வருகிறது. கோவை, கடலூர், திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 34 உயர்மட்ட பாலங்கள் அமைக்க, ரூ.177.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 18 மாவட்டங்களில் எங்கு எல்லாம் பாலம் கட்டப்பட உள்ளன. அதன் விபரம் பின்வருமாறு:* 2 கோடியே 83 லட்சம் செலவில், கோவை மாவட்டம் காரமடை வட்டத்தில் சிக்காரபாளையம் - கருப்பராயன் நகர் சாலை ஏலருமல்பள்ளம் ஆற்றில் பாலம் கட்டப்பட உள்ளது.* கடலூர் மாவட்டம். பண்ருட்டி வட்டத்தில் மலட்டாறு ஆற்றில் திருவாமூர் ஊராட்சியில் ரூபாய் 8 கோடியே 13 லட்சத்து 44ஆயிரம் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் குடகனாறு ஆற்றில் மணலூர் ஊராட்சியில் சித்தரேவு தாண்டிக்குடி சாலையில் ரூபாய் 8 கோடியே 52 லட்சத்து 69ஆயிரம் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டத்தில் நலுங்கு பாறை ஆற்றில் வாச்சாத்தி அரசநத்தம் இடையில் ரூபாய் 3 கோடியே 83 லட்சம் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* ஈரோடு மாவட்டம். அந்தியூர் வட்டத்தில் செல்லபூரம்மன் ஓடையில் ரூபாய் 5 கோடியே 12 லட்சத்து 20ஆயிரம் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் கொரட்டி ஆற்றில் ரூபாய் 5 கோடியே 57 லட்சம் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்தில் பாம்பாறு ஆற்றில் ரூபாய் 4 கோடியே 32 லட்சத்து 20 ஆயிரம் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டத்தில் வேப்பனப்பள்ளி தீர்த்தம் சாலை கத்திரிபள்ளியில் ரூபாய் 7 கோடியே 1 லட்சத்து 40 ஆயிரம் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டத்தில் ஒட்டப்பள்ளி பட்டிபடுகு சாலையில் ரூபாய் 3 கோடியே 59 லட்சத்து 90 ஆயிரம் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் பதினெட்டாம்குடி ஓடையில் 1 கோடியே 42 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் வட்டத்தில் புதுபட்டி கெடமலை சாலையில் 3 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* புதுப்பட்டி அதே சாலையில் 2 கோடியே 68 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் மற்றொரு பாலம் கட்டப்பட உள்ளது.* சேலம் மாவட்டம், பி.என்.பாளையம் வட்டத்தில் வில்வனூர் மாயவன் கோவில் சாலையில் வசிஸ்டர் ஆற்றில் 3 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* ஆத்தூர் வட்டத்தில் துலுக்கானூரில் வசிஸ்டர் ஆற்றில் 4 கோடியே 27 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* கங்கவள்ளி வட்டத்தில் வேப்படி பாலக்காடு சாலையில் 1 கோடியே 74 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* அயோத்தியா பட்டினம் வட்டத்தில் திருமணிமுத்தாரில் 1 கோடியே 99 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* பி.என்.பாளையம் வட்டம் வைத்திய கவுண்டன் புதூர் ஏத்தாப்பூர் சாலையில் வசிஸ்டர் ஆற்றில் 5 கோடியே 89 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* அதே பி.என்.பாளையம் வட்டம் இடையாப்பட்டி ஊராட்சியில் வசிஸ்டர் ஆற்றில் குறுக்கே 3 கோடியே 76 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* நீலகிரி மாவட்டம், உதகை வட்டத்தில் தாவணி மல்லிக்கோரை சாலையில் 3 கோடியே 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* திருப்பூர் மாவட்டம், குண்டடம் வட்டத்தில் தாராபுரம் வெள்ளக்கோவில்சாலை அமராவதி ஆற்றில் 14 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டத்தில் பட்டுவனாச்சி ஓடையில் 4 கோடியே 10 இலட்சத்து 6 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் வட்டத்தில் ஆறுமுக மங்களம் சாலையில் 3 கோடியே 36 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டத்தில் டி.புதுபட்டி சின்னையபுரம் சாலையில் 3 கோடியே 97 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் உப்பாறு ஆற்றில் குறுக்கே இரத்தினகுடிசாலை ஆர்.வளவனூர் ஊராட்சியில் 10 கோடியே 91 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* திருச்சி மாவட்டம், லால்குடி வட்டத்தில் களத்தில் வென்றார் பேட்டை சாலையில் நந்தியூர் கால்வாயில் 10 கோடியே 19 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் புல்லம்பாடி வைக்கல் புரந்தகுடி - ரெத்மாங்குடி சாலையில் குறுக்கே 2 கோடியே 81 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* திருநெல்வேலி மாவட்டம், மானூர் வட்டத்தில் வெங்கடாசலபுரம் பிரான்சேரி சாலையில் சித்தாறு ஆற்றில் 10 கோடியே 63 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம் பெருமாள்கோவில் அருகே பேயாற்றின் குறுக்கே 2 கோடியே 28 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* வேலூர் மாவட்டம், அதே அணைக்கட்டு ஒன்றியத்தில் பெருமாள் கோவில் அருகே பேயாற்றின் குறுக்கே 2 கோடியே 36 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* வேலூர் மாவட்டம், அதே அணைக்கட்டு ஒன்றியத்தில் பொய்கை கிராமத்தில் சதுப்பேரி கால்வாய் குறுக்கே 1 கோடியே 65 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* விழுப்புரம் மாவட்டம், மரக்கானம் வட்டம், அன்னம்புதூர் ஓமந்தூர் சாலையில் நரசிம்மனாறு ஓடையின் குறுக்கே 5 கோடியே 51 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், சிறுவாடியில் செஞ்சி ஆற்றில் குறுக்கே 6 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பாலம் கட்டப்பட உள்ளது.* விழுப்புரம் மாவட்டம், வள்ளம் வட்டத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கொங்கராபட்டு -மணியம்பட்டு இடையே 9 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.* விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கணக்கநேந்தல் ஜோகில்பட்டி இடையே குண்டாறு ஆற்றின் குறுக்கே 9 கோடியே 89 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mani . V
டிச 20, 2024 05:52

ம், எத்தனை மாதத்துக்கோ? அப்புறம் அனைத்தும் தற்கொலை செய்து கொள்ளும்.


அப்பாவி
டிச 19, 2024 19:17

ஒரு பாலத்துக்கு 5 கோடி. 18 கோடில கட்டுன பாலமே மூணுமாசத்தில் புட்டுக்கிச்சு. விடியலோ விடியல்.


என்றும் இந்தியன்
டிச 19, 2024 17:47

3 பாலங்கள் கட்டிய ஒரு வருடத்திற்குள் தண்ணீரில் அடித்துக்கொண்டு போய்விட்டது அதாவது இடிந்து விழுந்து விட்டதாம் ஆகவே எதிர்பாருங்கள் இன்னும் 34 பாலங்களின் கதியை திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசில். காரியம் நடந்தது என்றால் காரணம் இருக்குமே- 45% திமுக கமிஷன் தான் காரணம், கட்டுமான பொருளில் குறை பாடு


Shunmugham Selavali
டிச 19, 2024 17:44

பாலம் வெள்ளத்தில் உடைந்து தண்ணீரில் கரைந்து போனால் யார் பொருப்பு என்பதை முதலில் முடிவு செய்துவிட்டு பாலத்தை கட்டவும். அதைத்தும் மக்கள் வரிப்பணம். பாலத்தை கட்டிய ஒப்பந்தக்காரர் மற்றும் அரசு துறை பொருப்பு பொறியாளர் இவர்களுடைய பெயரையும் பாலத்தின் முகப்பில் வைக்கவும். பாலம் உடைந்தால் இவர்கள் பொருப்பு ஏற்க்கவேண்டும் என்ற வாசகமும் எழுத வேண்டும்.


ganesh
டிச 19, 2024 17:08

பாலங்கள் பாத்து கட்டடிவும். ?


angbu ganesh
டிச 19, 2024 14:22

திருவண்ணாமலை பலம் என்னவாச்சு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை