உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் 3 கேள்விகள்!

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் 3 கேள்விகள்!

சென்னை: தமிழகம் ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்? என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழக மக்கள் கேட்கும் கேள்வி மூன்று தான்.1. தமிழகம் ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், மத்திய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்ட போதும், தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?3. பத்தாண்டுகால பா.ஜ., ஆட்சியில் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?. திசை திருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர். பதில் சொல்லுங்க பிரதமர் மோடி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

தத்வமசி
ஏப் 01, 2024 22:49

மக்கள் செலுத்தும் ஒரு ரூபாய் வரியில் ஐம்பது பைசா மாநிலத்திற்கும், ஐம்பது பைசா மத்திய அரசுக்கும் செல்கிறது நீங்கள் அந்த ஐம்பது பைசாவில் என்ன செய்துள்ளீர்கள் ? அவர் உங்களிடம் நேரடியாக கொடுத்தது இருபத்தொன்பது பைசா, திட்டங்கள் மூலம் கொடுக்கப்பட்டது மேலும் முப்பதொரு பைசா ஆக ஒரு ரூபாய் கணக்கு வந்து விட்டது மற்றது இயற்கைப் பேரிடருக்கு முன்னமே உங்களுக்கு வழங்கப்பட்ட நாலாயிரம் கோடி என்னவாயிற்று ? கடைசி: உங்களின் தோழர்களால் போராட்டம் மூலம் தடுக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை ? நீங்கள் ஸ்டிக்கர் ஒட்டிய திட்டங்கள் எத்தனை ? அனைத்தும் மோடி அரசாங்கம் தமிழகத்திற்கு தந்தது


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 01, 2024 22:27

கச்சத்தீவு குறித்த செய்தியில் இருந்து தப்பிக்க மூன்று கேள்விகளா? இப்போது சுமார் வயதை எட்டியவர்களுக்கும் அதைக்கடந்தவர்களுக்கும் கச்சத்தீவு காவு கொடுக்கப்பட்ட கதை நன்றாகவே தெரியுமே


R Kay
ஏப் 01, 2024 22:24

முதலில் அண்ணாமலை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் மக்களை திசை திருப்ப வேண்டாம்


Balasubramanyan
ஏப் 01, 2024 22:05

Your father as he did on littered single army fight and prabakaran death kept quiet on Indira Gandhi direction on giving katchateevu because that was emergency period How can யு Uand congress ask Modi what he did for getting back for the past ten years CMcan give free GPSto all fishermen and ask them not to cross the international maritime linehowmodi get back the island Chidambaram gifted Pakistan the currency printing machine with blocks which facilitate pak To print counterfeit not That is why demonitising Chidambaram must be admonished Nehru gave km of Ladakh to his friend China


Ramesh Sargam
ஏப் 01, 2024 21:28

உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி மத்திய அரசின் பல திட்டங்களுக்கு, உங்கள் படத்தை ஒட்டி, மாநில அரசு செய்வதுபோல மக்களை ஏமாற்றி பிழைப்பது உங்களுக்கே அசிங்கமாக இல்லை?


sankaranarayanan
ஏப் 01, 2024 20:44

மூன்று கேள்விகளுக்கும் அண்ணாமலை அவர்கள் வெகு விளக்கமாக விரைவிலேயே பதில் கொடுப்பார் பிறகு மூஞ்சியை தொங்கவிட்டுக்கொண்டு செல்ல வேண்டியதுதான்


Ramesh
ஏப் 01, 2024 20:38

எதே எனக்கு கேக்க தான் தெரியும் நான் கேக்குற கேள்விக்கு உனக்கே பதில் தெரியாது


Saravanan Ganapathy
ஏப் 01, 2024 20:07

அவர் போட்ட டிவிட்டுக்கு இது பதில் இல்லையே முதல்வரே


Rathinakumar KN
ஏப் 01, 2024 19:47

மக்கு பய்யன் தான் கேட்ட கேள்விகளை திரும்ப திரும்ப தான் கேட்பான் இது சம்பந்தமாக மத்திய நிதி அமைச்சர் பதில் ஏற்கனவே சொல்லி ஆகிவிட்டது மேலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மேதாவி ப சி இடம் இது பற்றி ஒரு அறிக்கை விட சொல்லவும் கட்ச தீவு விஷயத்தை திசை திருப்பும் கேள்விகளே இது மத்திய அரசு எங்களுக்கு புயல் நிதி தரவில்லை என்று உச்ச நீதி மன்றம் நாடவும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ