உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டி.ஐ.ஜி. வந்திதா பாண்டே டிரான்ஸ்பர்! மத்திய அரசு பணிக்கு மாற்றம்

டி.ஐ.ஜி. வந்திதா பாண்டே டிரான்ஸ்பர்! மத்திய அரசு பணிக்கு மாற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திண்டுக்கல் டி.ஐ.ஜி., வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். திண்டுக்கல் டி.ஐ.ஜி.,யாக அண்மையில் நியமிக்கப்பட்டவர் வந்திதா பாண்டே. கறார் மற்றும் கடும் நடவடிக்கைக்கு பெயர் போனவர். இவரை போன்றே இவரது கணவர் வருண்குமாரும் (இவர் திருச்சி எஸ்.பி.யாக இருந்தவர். அண்மையில் அதே திருச்சி டி.ஐ.ஜி.,யாக பணி உயர்த்தப்பட்டார்).கண்டிப்பான அதிகாரி. இருவரும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளால் இணையத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்டவர்கள். அதன் காரணமாக நாம் தமிழர் நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட, அதற்கு சீமான் கண்டனம் தெரிவித்ததால் விவகாரம் பெரிதாக மாறியது. இந்நிலையில் திண்டுக்கல் சரக டிஐ.ஜி.யாக அண்மையில் தான் வந்திதா பாண்டே மாற்றப்பட்டார். தற்போது அவர் அங்கிருந்தும் மாற்றப்பட்டு உள்ளார். மத்திய அரசு பணிக்கு, மாற்றப்பட்டு உள்ள வந்திதா பாண்டே, இளைஞர் விவகாரத்துறை இயக்குநராக பணி அமர்த்தப்பட்டு உள்ளார். அதற்கான உத்தரவை உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. 5 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை இயக்குநராக அவர் அந்த பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Palanivel
பிப் 10, 2025 16:35

அப்படியே கணவரையும் மாற்றி ஒரு நல்லதொரு வேலை செய்யவைக்கலாம்


Mahendran Puru
பிப் 08, 2025 22:59

கண்டிப்பான அதிகாரியை மாற்றியுள்ளது மத்திய அரசு, அதுவும் சம்பந்தமில்லாத துறைக்கு. நிச்சயம் சங்கி வேலைதான்.


V GOPALAN
பிப் 08, 2025 15:15

Governor should request President to dissolve this Assembly immediately. In the world only state that is tamilnadu is even handed over the Call Taxi and Auto to Ganja and Rowdy net work. Ola and Uber are not allowed to operate in tamilnadu. Rs.200 is demanded after 10 pm just for half km. Passengers are abused in filthy languages by automen who are all benamies of local councilors, MLA s Ministers


Anantharaman
பிப் 08, 2025 11:59

காவல் துறை, நாட்டின், மாநிலங்களின் பாதுகாப்பு போன்ற முக்கிய துறைகள் மத்திய அரசு வசமே இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் நேர்மையானவர்கள் ஒழுங்காகப் பணியாற்ற இயலும். சில்லறைப் பசங்கள் சின்னச்தனமான தலைவர்கள் இஷ்டப்படி இடமாற்றம் செய்ய முடியாது.


Udhaya Sankar
பிப் 08, 2025 07:47

பிஜேபி பி டீம் சீமான் அன்னாமலையிடம் சொல்லி இது நடந்து இருக்கலாம்


Laddoo
பிப் 08, 2025 06:28

அண்ணாமலை ஆட்சியில் ஸ்ட்ரிக்ட் ஆன ஆபிசர்கள் அதிகம் பேர் தேவையிருக்கு.தமிழகதிற்கு வர இன்னும் 17 மாதங்கள் காத்திருங்க.


Mahendran Puru
பிப் 08, 2025 22:55

ஒரே சிரிப்பு.


தேவராஜன்
பிப் 08, 2025 06:25

நேர்மையான அதிகாரிகளை வைத்துக் கொண்டு எப்படி திராவிஷ மாடல் ஆட்சியை நடத்துவது? அதனால் தான் இந்த அம்மணிக்கு டிரான்ஸ்பருங்களா?


பாலா
பிப் 07, 2025 22:45

அப்ப ...ன் நிலை ?


பாலா
பிப் 07, 2025 22:45

அப்ப மாமுவின் நிலை ?


subramanian
பிப் 07, 2025 22:15

தமிழகத்தின் சாபக்கேடு.


சமீபத்திய செய்தி