உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி: நீதிமன்றம் உத்தரவு

செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி: நீதிமன்றம் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் வங்கி ஆவணங்களை வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மூன்று புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த மனுக்கள் இன்று(ஜூலை 08) விசாரணைக்கு வந்தது.வங்கி தொடர்பான ஆவணங்களை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார். கரூர் சிட்டி யூனியன் வங்கி கிளையின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவில், செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணையை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

காவல் நீட்டிப்பு

இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 44வது முறையாக, ஜூலை 10ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

rama adhavan
ஜூலை 10, 2024 06:28

இந்தியாவில், தமிழ் நாட்டில் மிக அதிகமாக ஜாமீன் நிராகரிக்கப்பட்டது யாருக்கு என்ற விவரத்தை வெளியிட்டால் சுவாரசியமாக இருக்கும்.


VR. Muthiah
ஜூலை 09, 2024 19:05

தமிழக முன்னாள் அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் தப்பே செய்யாதவர் போலவும் எவ்வளவு பணம் சேர்த்தார் என்பதும் சின்னம் சிறு குழந்தைக்கூட தெரியும். அத்துடன் எவ்வளவு நாளுக்கு தான் இந்த வழக்கை இழுத்து அடிப்பார். நீதிபதிக்கே போர் அடித்திருக்கும் இப்படி இருக்கையில் நண்பர் அவருக்கு வக்காலத்து வாங்குவது விந்தை யாக உள்ளது. நாட்டை கடவுள் தான் காப்பாற்றனும்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 09, 2024 14:01

ஏழை பாழைகள் வயிற்றில் அடித்து 10 ரூபாய் பலவந்தமாக புடுங்கின பாவம் இன்னும் அணிலை வாட்டனும். வெளியே வந்தாலும் செல்லாக்காசு தான்.


naranam
ஜூலை 09, 2024 11:34

இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்குவான் போல!


Kesavan
ஜூலை 09, 2024 09:24

பிஜேபியில் இருக்கிற குற்றவாளிகளை விடவா செந்தில் பாலாஜி குற்றம் இழைத்து விட்டார் பாலாஜிக்கு இவ்வளவு நாள் சிறைவாசம் என்றால் பிஜேபி உள்ள தலைவர்கள் சிக்கினால் ஆயுள் முழுவதும் சிறையில் தான் இருக்க வேண்டும் ஆனால் அப்போது நீதிமன்றம் இம்மாதிரி நடந்து கொள்ளாது


rau
ஜூலை 09, 2024 10:33

Are U supporting the crime committed by the accused, people like U supporting the politicians give more confidence and strength to them to continue doing corruption in public life.


Kesavan
ஜூலை 09, 2024 09:22

செந்தில் பாலாஜி கேட்ட ஆவணங்களை கொடுப்பதற்கு நீதிமன்றத்திற்கு அல்லது வங்கிக்கோ என்ன பிரச்சனை குற்றச் சாட்டப்பட்டவர் தன்னை நிரபராதி என்னை நிரூபித்துக் கொள்ள அனைத்து உரிமையும் உள்ளது அவர் கேட்கும் ஆவணங்களை கொடுப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது இது வேண்டும் என்று இம்மாதிரியான மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்ன இன்னும் ஒரு இருபது வருஷத்துக்கு மனுவை தள்ளுபடி பண்ணுவாங்களா ஒருத்தன் குற்றவாளியா இல்லாமலேயே சிறையில் பல மாதங்களாக சிறையில் இருப்பது என்ன மாதிரியான நீதி கொலை செய்தவனுக்கு கூட 90 நாளில் ஜாமீன் கிடைக்கிறது என்னை பொறுத்தவரை இது மிக மிக அநியாயம் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்தை அவர் மறைக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் எப்போதோ மறைத்திருக்கலாம் ஆனால் இப்போது வெளியில் விட்டால் அவர் ஆவணங்களுக்கு வழக்கிற்கு எதிராக செயல்படுவார் என்பது நீதிபதி எவ்வாறு நம்புகிறார் என்று எனக்குத் தெரியவில்லை


K V Ramadoss
ஜூலை 09, 2024 11:47

ஓ மறைக்கவே இல்லையா ?


VR. Muthiah
ஜூலை 09, 2024 19:15

நண்பர் கேசவன் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். முன்னாள் அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் தப்பே செய்யவில்லையா?. அப்படி இருந்தால் ஏன் இந்த வழக்கு இவ்வளவு நாள் நீடித்துக்கொண்டிருக்கிறது. உங்கள் கருத்துபடி நீதி அரசர்கள் எல்லோரும் அவர்க்கு எதிராக வா சொல்லகிறார்கள். திரு செந்தில் பாலாஜி அவர்களிடம் உள்ள அதி மீரியா பணத்தினால் வழக்கை இழுத்து அடிக்கிறார் என்பதை யாவது புரிந்து கொண்டு அவர்க்கும் நல்ல யோஜனை களை சொல்லி வழக் கை முடிக்க சொல்லுங்கள்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 09, 2024 08:09

சின்ன அணிலு சிக்கும் வரை ஜாமீன் கிடையாது. கொடுக்க கூடாது தமிழக போலீஸ் ஆளும் கட்சி அடியாள் ஆகி விட்டது. மானம் கெட்ட திமுக அரசு.


ராமகிருஷ்ணன்
ஜூலை 09, 2024 07:53

சின்ன அணிலு சிக்கும் வரை ஜாமீன் கிடையாது. கொடுக்க கூடாது தமிழக போலீஸ் ஆளும் கட்சி அடியாள் ஆகி விட்டது. மானம் கெட்ட திமுக அரசு.


Balakrishnan karuppannan
ஜூலை 08, 2024 21:17

இன்னும் ஆறு முறை ஜாமீன் மறுக்கப்பட்டால் அறை சதம் ? அடித்த பெருமை கிடைக்கும் ?


கூமூட்டை
ஜூலை 08, 2024 20:24

விதை விதைத்து பலன்கள் கிடைப்பது எல்லாம் வல்ல இறைவன் செயல் எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழவேண்டும்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ