நாளை தி.மு.க., எம்.பி.,க்கள் கூட்டம்
சென்னை: 'முதல்வர் ஸ்டாலின் தலைமையில், நாளை தி.மு.க., - எம்.பி.,க்கள் கூட்டம் நடக்க உள்ளது' என, அக்கட்சி பொதுச்செயலர் துரைமுருகன் அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் கூட்டம், நாளை காலை 10:00 மணிக்கு, சென்னை அறிவாலயத்தில் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில், எம்.பி.,க்கள், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.