உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக எப்போதும் பெண்களை மதிப்பதில்லை: அமைச்சர் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு

திமுக எப்போதும் பெண்களை மதிப்பதில்லை: அமைச்சர் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''திமுக எப்போதுமே பெண்களை மதிப்பதில்லை'' என வட இந்திய பெண்கள் குறித்து திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் பேச்சுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.சென்னையில் நிருபர்கள் அண்ணாமலை, டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு, நயினார் நாகேந்திரன் கூறியதாவது: இந்த கேள்வி ரொம்ப, நீண்ட நெடிய கேள்வி. ஒரு 4 மாதங்களாக தினமும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது இந்த கேள்வியை தான் கேட்டு கொண்டே இருக்கிறீர்கள்.ஒருவரை ஒருவர் சந்திப்பது நல்ல விஷயம் தானே. சந்திப்பதால் நல்ல முடிவுகள் வந்து சேரும். எங்கள் கூட்டணிக்கு அனைவரையும் வரவேற்க தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் நானும் சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

பெண்களை மதிக்காத திமுக

வட இந்திய பெண்கள் குறித்து திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசியது குறித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது: திமுக எப்போதும் பெண்களை மதிப்பதில்லை. திமுகவோடு கூட்டணியில் இருந்த கட்சி சார்ந்த தலைவர் தான் பிரதமர் மோடியின் தாயாரை விமர்சித்தார். அப்போது கூட திமுக தலைவர் ஸ்டாலின் அதை கண்டிக்கவில்லை. அவர்கள் வடக்கு மற்றும் தெற்கைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள். அது நடக்காது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

பேசியது என்ன?

''தமிழகத்தில் உள்ள பெண்களுக்கும், மற்ற மாநிலத்தில் இருக்கும் பெண்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பாக, பெண்களை மனிதர்களாக கூட கருதாமல் இருந்துள்ளனர். இன்றைக்கும் கூட வட இந்தியாவில் அதே நிலை நீடிக்கிறது'' என திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசியது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத் தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Padmasridharan
செப் 30, 2025 17:35

இலவச பேருந்து பயணம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா சாமி. பெண் சுதந்திரமென்றால் என்ன?


மோகனசுந்தரம்
செப் 28, 2025 01:02

அண்ணாமலையை ஒதுக்கி வைத்து விட்டு அரசியல் செய்யும் தமிழக திராவிட பாஜக விளங்கினால் போல் தான். திராவிட பாசறையில் இருந்து வந்த நைனாரால் தமிழக பிஜேபி நோட்டாவிற்கு கீழ் செல்வது 100% உறுதி.


Sivakumar
செப் 27, 2025 17:26

தமிழிசையை மேடையில்வைத்து ஆள்காட்டிவிரலால் மிரட்டியது ரொம்பவே மதிப்பு. குஜராத் கற்பழிப்பு குற்றவாளிகளை விடுவிக்க பிஜேபி அரசாங்கம் எடுத்த எல்லா முயற்சிகளும் ரொம்பவே பெண்களை மதிச்சதுதான்.


Oviya Vijay
செப் 27, 2025 16:35

அப்போ எப்படிங்க நைனா... உங்க கட்சிக்கு ஜல்ஸா கட்சின்னு பேரு வந்திச்சு?...


KumaR
செப் 27, 2025 18:31

நீங்க முட்டு குடுக்குற கட்சில ஒருத்தர் டீவில செய்தி வசிக்குற பெண்ணை தூக்கிட்டு போனது எல்லாம் உங்களுக்கு தெரியுமா. . தமிழ்நாட்டுக்கே தெரியும். முதல்ல உங்க முதுகுல இருக்குற அழுக்கை நல்ல துடைங்க


Ravi
செப் 27, 2025 16:06

ஆனால் பெங்களூரு மற்றும் சென்னையில் கலாச்சாரம் சீரழிய வட மாநில பெண்கள் தான் காரணம்னு ஒரு பேச்சு இருக்கே


சாமானியன்
செப் 27, 2025 15:39

நயினார் சொல்வது தவறு . மூதல்வர் கடந்த ஒருவருடமாக மகளிர் உரிமைத் தொகை பற்றி மட்டுமே பேசியுள்ளார். அவ்வளவு பயம். பிங்க் பஸ் இலவசம். பயத்தின் உச்சகட்டம். மகளிர் ஓட்டு போட்டால்தான் திமுக ஜெயிக்கும் என்று நம்புகிறார். ஆண்களை ஸ்டாலின் நம்புவதில்லை.


P. SRINIVASAN
செப் 27, 2025 14:21

ஏதோ பேசணுமேன்னு பேசாதீங்க... பெண்களை பத்தி பேசவேண்டாம்..


GMM
செப் 27, 2025 14:15

திமுக எப்போதும் இரு சிறுபான்மை பெண்களை மதிக்கும். நாடு முழுவதும் உள்ள இந்து பெண்களை மட்டும் மதிக்காது. ஓட்டை விலைகொடுத்து வாங்க முடியும்? வட இந்திய பெண்கள் அந்நியர் ஆக்கிரமிப்பில் அடைந்த துயர் ஏராளம். தென் மாநில பாதிப்பு குறைவு. வடமாநில பெண்கள் இன்னும் கலாச்சாரம் பின் பற்றி வாழ்கிறார்கள். திராவிடம் இந்தி அறியாது. வட இந்திய பெண்கள் பற்றியும் அறிய முடியாது.


angbu ganesh
செப் 27, 2025 14:13

ஒரு பொருட்டாவே மதிக்கிறது இல்ல


pakalavan
செப் 27, 2025 14:04

ரேவன்னா மாதிரி ஆளுங்கறுக்கு பிரச்சாரம் பன்னுனாங்க


ஆரூர் ரங்
செப் 27, 2025 15:07

இளம் விதவைகள் அதிகமாக உள்ள மாநிலம் எது?


புதிய வீடியோ