உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., இல்லாமல் போகும்: ஜெயராமன் கணிப்பு

தி.மு.க., இல்லாமல் போகும்: ஜெயராமன் கணிப்பு

திருப்பூர் : “அ.தி.மு.க., என்ற வெள்ளத்துடன் இணைபவர்கள், ஆட்சி என்ற கடலில் சேர்வர்; ஒதுங்கி செல்பவர்கள் அனைவரும் காலி டப்பா தான்,” என, பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.திருப்பூரில், அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த பேட்டி:வரும் 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., உறுதியாக ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க., ஆளுங்கட்சியாகவும், எங்கள் கூட்டணியிலுள்ள ஒரு கட்சி எதிர்க்கட்சியாகவும் வரும். அனைத்து தரப்பினரும், அ.தி.மு.க., ஆட்சியை எதிர்பார்க்கின்றனர்.எங்களுடன் கூட்டணியில் வரும் கட்சி தான் பிரதான எதிர்க்கட்சியாக வரும். இதில் எந்த சந்தேகமும் கிடையாது. எவ்வகையிலும் தகுதியில்லாமல் துணை முதல்வர் ஆனது உதயநிதி மட்டுமே. அ.தி.மு.க., ஜனரஞ்சகமான மக்கள் இயக்கம்; சாமானியரான பழனிசாமியின் அலை தமிழகத்தில் வீசத் துவங்கிவிட்டது.அ.தி.மு.க., என்ற வெள்ளத்துடன் இணைபவர்கள் ஆட்சி என்ற கடலில் சேர்வார்கள்; ஒதுங்கி செல்பவர்கள் அனைவரும் காலி டப்பாதான். தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியே வரும் கட்சிகள் அனைத்துக்கும், அ.தி.மு.க., ஆதரவு கொடுத்து, வாழ்வும் கொடுக்கும். சிறிய கட்சிகளாக இருந்தாலும் பல கட்சிகளுக்கு சின்னம் பெற்றுக் கொடுத்ததே ஜெயலலிதா தான். வரும் 2026 சட்டசபைத் தேர்தலுக்கு பின், தி.மு.க., என்ற கட்சி இல்லாமல் போகும். இது ஜோதிடம் அல்ல; என் எதார்த்த கணிப்பு.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

veeramani
நவ 20, 2024 09:30

அடாடா என்ன ஒரு விமர்சனம் .. ஆ தி மு க கட்சி எப்படி உருவாயிற்று மக்கள்திலகம் எம் ஜி ஆர் எப்படி பிரச்சினைகளை எதிர்கொண்டார். அவர் எப்படி இயற்கை ஏய்தினார் ஆர் எம் கே வி கட்சியை காப்பாற்ற என்ன காரியங்கள் செய்தார் ஜெயாவை முதல்வர் ஆகியவர்களின் இன்றைய என்ன நால்வர் கூட்டணி திருநாவுக்கரசு, விருதுநகர் ராமச்சந்திரன், பண்ருட்டி ராமசந்திரன் செங்கோட்டையன் பின்னர் பதவி வந்தவுடன் இவருடன் அணி சேர்ந்த மன்னர்குடி குடும்பம். இவை எல்லாம் பற்றி எதுவும் தெரியாமல் ஜெயராமன் பேசுகிறார். கட்சியின் வரலாறு தெரிந்து பேசுங்கள். நின்களையெல்லாம் ஜெயா ஆட்கள். உங்களுக்கு பதவி சுகம் மட்டும் தான் தெரியும். எம் ஜி ஆர் காலத்து தலைவர்கள் மண்டபம் அன்வர் ராஜா, செங்கோட்டையினின் இன்றைய நிலை குறித்து வருந்துகிரோம் . முதலில் உங்களால் மனம் வெதும்பி மற்ற கட்சிக்கு சென்றவர்களை திரும்ப கொண்டுவாருங்கள். உங்களது சகாக்கள் நம்ப இயலாத பொது இளைஞர்கள் எப்படி கட்சியில் இணைவார்கள். பகல் கனவு காண்கிறீர்கள் .எம் ஜி ஆர் உருவாக்கிய கட்சியை சீரழிக்காதீர்கள்


V RAMASWAMY
நவ 20, 2024 08:19

“அ.தி.மு.க., என்ற வெள்ளத்துடன்" வெல்லம் என்பதற்கு பதிலாக வெள்ளம் என்று சொல்லிவிட்டாற்போல் தெரிகிறது. அதிமுக என்பது வெல்லம் போல் கரைந்துகொண்டிருக்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை