உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக்கொலை; 5 தனிப்படைகள் அமைப்பு

ஈரோட்டில் வயதான தம்பதி அடித்துக்கொலை; 5 தனிப்படைகள் அமைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஈரோடு: ஈரோடு, சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tmynslgb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஈரோடு, சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி ராக்கியப்பன் (75), பாக்கியம் (60) வசித்து வந்தனர். தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்து விட்டு தப்பியோடினர்.மூதாட்டியிடம் இருந்த 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து விட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தம்பதியரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

A.Gomathinayagam
மே 02, 2025 13:59

தங்கம் விலை உயர்வும் ஒரு காரணம்


lana
மே 02, 2025 13:48

இது நகைக்காக நடந்த கொலை. அதாவது சங்கிலி பறிப்பு. இதுக்கும் சட்டம் ஒழுங்கு க்கும் சம்பந்தம் கிடையாது. கடந்த ஆட்சியில் இது போல நடந்தது என்று இப்ப முட்டு முரட்டு முட்டு குடுப்பாங்க பாருங்க. எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி உள்ளது. 234 க்கு 236 தொகுதியில் வெற்றி பெற்று 2.0 இன்னும் பிரகாசமாக இருக்கும்


Sivakumar
மே 02, 2025 13:45

There is no safety for common people looks like election expenses and money for vote being paid out by the parties this way in every election. Hmmm...


Murugan Guruswamy
மே 02, 2025 12:48

வடக்கன்ஸ் வருகையை கட்டுப்படுத்தா விட்டால் நிலைமை மோசமாகும். போலீஸ் யே மேலேயே தாக்குதல் நடுத்துகிறார்கள்


Anantharaman Srinivasan
மே 02, 2025 12:23

ஈரோடு, சிவகிரி தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி அடித்துக் கொலை.. அப்பா.. அப்பா இன்னும் பத்து மாதம் உன் ஆட்சி தான் அப்பா.. தற்பெருமை பேசியே தூள் கிளப்பு.


India our pride
மே 02, 2025 12:07

சில வெளி மாநிலம் மற்றும் வங்க நாட்டினரின் ஊடுருவல் மிக பெரிய சேதத்தை தமிழகத்திற்கு உண்டாக்கும். உதாரணமாக கல்கத்தா நகரில் சில பகுதிகளில் ஆண்கள் மற்றும் பெண்களின் உடையை கூட கொடியில் போட முடியாத நிலைமை உள்ளது. பங்களாதேஷிகள் ஜன்னல் வழியாக துணியை திருடும் கேவலமான நிலைமை உள்ளது. பங்களாதேஷிகள் மூலம், பல திருட்டு திடுக்கிடும் கொலை சம்பவங்கள் வங்காளம், ஜார்க்கன்ட் போன்ற மாநிலங்கள் மிக மோசமான சட்ட ஒழுங்கு நிலைமையில் உள்ளன.


chandrakumar
மே 02, 2025 11:51

கண்டிப்பாக இது பல்லடம் சேமலைகவுண்டன்பாளையத்தில் கொலை செய்த கும்பலுக்கு தொடர்பு இருக்கும் ஒரே மாதிரியான சம்பவம்..... திராவிட மாடல் கேடுகெட்ட ஆட்சிக்கு இதுவே சாட்சி.....


sridhar
மே 02, 2025 11:31

அப்பா , நல்லா கவுந்தடிச்சு தூங்கு. வேற எதுவும் உனக்கு வராது. நல்லா வந்து வாச்சிது பார் நமக்கு .


Nallavan
மே 02, 2025 10:57

குஜராத் மாநிலம் வதோதராவின் பழைய பத்ரா சாலைப் பகுதியில் புதன்கிழமை மாலை சுற்றுலா டாக்ஸி மோதியதாகக் கூறப்படும் விபத்தில் 70 வயது பைக்கில் சென்ற நபர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர், மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் உமேஷ் படேல் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர் சாஹில் படேல் என்றும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இது என்ன மடல் ?


Keshavan.J
மே 02, 2025 11:55

சாலை விபத்தும் கோலையும் ஒன்றாக பார்த்தாய் பாரு உனக்கு ட்ராவிட அரசு அவார்ட தரும். மாடல் க்கு பதில் மடல் என்று சொல்கிறாய். போயி 200 ரூபாய் பெற்று கோள்


kamal 00
மே 02, 2025 12:02

என்ன எழவு கேள்வி கேக்குற? என்ன வேனும் உனக்கு?


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 02, 2025 10:57

கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற கொலைகள் அடிக்கடி நடக்கின்றது. நமது அத்தியாவசிய தேவையான விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் முதிய, அனுபவம் மிக்க விவசாய தம்பதிகள் இப்படி கொலை செய்யப்பட்டால் அவர்களின் பல்லாண்டுகளாக அனுபவ அறிவு, உற்பத்தி திறன் அடுத்த தலைமுறைக்கு கிட்டாமல் போகும். அவர்கள் கவனித்து வந்த நிலம் தரிசாகும், கால்நடைகள் ஆதரவின்றி கசாப்பு கடைகளுக்கு விற்கப்படும். விவசாயம் சீரழியும். உண்மையின் நம் அனைவருக்குமான நஷ்டம். அரசு இந்த விவகாரத்தை மிகமிக கடுமையாக அணுகவேண்டும். இல்லாவிடில் இது தேசத்தின் வீழ்ச்சியாகும். சன் டிவி, ரெட் ஜெயன்ட், திமுக இல்லாமல் வாழ்ந்துவிடலாம். ஆனால் விவசாயம் இல்லாமல் ஒருவரும் பிழைக்க முடியாது.