உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருமானவரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து மற்றவர்களுக்கு உரிமைத்தொகை: நிதித்துறை ஒப்புதல்

வருமானவரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து மற்றவர்களுக்கு உரிமைத்தொகை: நிதித்துறை ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மகளிர் உரிமைத் தொகை கோரி, புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களில், வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, மற்றவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க நிதித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு 2023 செம்டம்பரில் துவக்கியது. இந்த திட்டத்தில் பயன்பெற, தகுதியான நபர்களை தேர்வு செய்ய, ஒன்பது வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், 1.15 கோடி மகளிர் மட்டும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்கள், அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், அவர்கள் குடும்ப ஓட்டுகள், எதிர்க்கட்சிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. இதை தடுக்க, மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு முடிவெடுத்துள்ளது. 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' வாயிலாக, மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி, புதிதாக 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு, டிசம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என, துணை முதல்வர் உதயநிதி சட்டசபையில் அறிவித்தார். அதன்படி தகுதியான பயனாளிகளை இறுதி செய்யும் பணிகளில், வருவாய் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, மற்ற குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு, மகளிர் உரிமைத் தொகை வழங்க, தமிழக நிதித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. எனவே, புதிய பயனாளிகளுக்கு, டிசம்பரில் மகளிர் உரிமைத் தொகை விடுவிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

C.SRIRAM
அக் 24, 2025 13:11

இது யாருடைய உரிமை தொகை ?. ஏன் வருமானவரி செலுத்துபவரை தவிர்க்கிறார்கள் ?.


Rajarajan
அக் 24, 2025 12:49

ஆளும் கட்சி எதிர்கட்சியானால், நிதிநிலை வெள்ளை அறிக்கை கேட்பதோடு சரி. அதே எதிர்க்கட்சி, ஆளும்கட்சியானால், இதே இலவசம், வீண் செலவுகள், ஊழல் தொடரும். அப்போது எதிர்க்கட்சி நிதிநிலை வெள்ளை அறிக்கை கேட்கும். அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா. எப்படியும், நிதிச்சுமையை சுமப்பது திருவாளர் தனியார் ஊழியர்/ ஏழை பாழை / அன்றாடம் காய்ச்சிகள் தானே. அவர்களிருக்க கவலை ஏன் ?


chinnamanibalan
அக் 24, 2025 11:55

1967 வரை, தமிழகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியில் கடன் பெறாமல் வரவுக்குள் செலவு செய்து பொற்கால ஆட்சி என்று போற்றும் அளவுக்கு நல்லாட்சி நடந்தது. அதன் பின்னர் ஏறத்தாழ 60 ஆண்டுகளாக நடைபெற்று வரும் திராவிட கட்சிகள் ஆட்சியில் 2021 முற்பகுதி வரை அரசின் கடன் தொகை ரூபாய் ஐந்து லட்சம் கோடியாக மட்டுமே இருந்தது. 2021 ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், அரசின் கடன் தொகை ஏறத்தாழ பத்து லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு செலுத்தும் மாத வட்டி மட்டும் ரூபாய் ஐம்பதாயிரம் கோடி என்று கூறப்படுகிறது. தற்போது அரசு செலுத்தும் வட்டி காரணமாக தொலை நோக்கு திட்டங்கள் அனைத்தும் காணாமல் போய் இலவச திட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. மகளிருக்கான உரிமைத் தொகை என்பது ஏழை எளிய மக்களுக்கு மட்டும் எனில், அது வரவேற்க தக்கதே. ஆனால் ஒருபக்கம் வரம்பு மீறி கடன் பெற்று வட்டி கட்ட இயலாமல், அரசு நிர்வாகம் அல்லல்படும் நிலையில், வாக்கு வங்கி என்ற ஒன்றை மட்டும் கருதி, வசதி படைத்த மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்குவது, அரசின் கடன் சுமையை மேலும் அதிகரிக்கவே செய்யும். தமிழகத்தை ஆண்டவன்தான் இனி காப்பாற்ற வேண்டும்!


Shankar C
அக் 24, 2025 11:28

கட்சி பாகுபாடின்றி நாடு முழுவதும் பரவி வருகிறது இந்த பழக்கம். குறுகிய கண்ணோட்டம். நிதி நெருக்கடி உண்டாக்கும். மக்களுக்கு நீண்ட கால முன்னேற்ற திட்டங்கள் செயல் படுத்த தடையாக இருக்கும்.


Modisha
அக் 24, 2025 11:00

அதாவது எங்க பணத்தை பிடுங்கி தானம் பண்ணுரே .


kjpkh
அக் 24, 2025 10:03

மகளிர் எல்லோருக்கும் உரிமை தொகை 5000 ரூபாய்க்குள் கடன் வாங்கிய எல்லோருக்கும் நகை கடன் ரத்து என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு பிறகு தகுதி உள்ளோருக்கு என்று ஒரு பட்டியல் போடுவார்கள் அதை உடனே தர மாட்டார்கள். மக்கள் புலம்பித் தவித்த பிறகு தருவார்கள். கடனுக்கு மேல் கடனை வாங்கி கண்டபடி செலவழித்து விட்டு எதைக் கேட்டாலும் மத்திய அரசு நிதி தரவில்லை என்று கதை விடுவார்கள்.


V Venkatachalam, Chennai-87
அக் 24, 2025 09:22

சம நீதி கொள்கையின் படி எல்லாருக்கும் ரூ 1000. நோ பார்ஷியாலிடி. அதாவது ஆண்களுக்கும் ரூ 1000. எவன் அப்பன் வூட்டு பணம். அள்ளி வுடு. அள்ளி வுடு.. டமில் நாடு நம்பர் ஒன் மாநிலம்.


Krishna
அக் 24, 2025 09:06

Recover Entire Freebies-Concessions 90% Not Due VoteBriberies Despite HigherPerCapitaIncome, Making People Lazy-Luxury Inhumans from All Ruling-Alliance-Opposition Parties/Leaders & RulerOfficialBiased Judges. Sack& Punish them Besides DeRecognition Until Recovery


duruvasar
அக் 24, 2025 08:52

தலைமை செயலகம், அரசு நிறுவனங்கள், வங்கிகளில் வேலைசெய்யும் பெண்களும் பிரீ பஸ் சவாரி செய்கிறார்கள். அவர்களெல்லாம் தகுதியுள்ளவர்களா? முதலில் அதை ஒழுங்குபடுத்துங்கள். யார் அப்பன் வீட்டு பணம்.


V Venkatachalam, Chennai-87
அக் 24, 2025 11:11

ஒரே ஒரு கண்டிஷனர் தான். மகளிர் மட்டும். பஸ் கண்டக்டர் பஸ்ஸில் ஏறும் பெண்களை எதுவுமே கேட்பதில்லை.‌ஒன்லி சமாசாரம் அவிங்க மகளிர் ஆக இருக்கணும். மத்தபடி நோ கேள்வி. ஆண்கள் பெண்கள் வேஷத்தில் போனாலும் ஃப்ரீ டிக்கட் உண்டு. பஸ் ஸில் ஏறியவுடன் ஃப்ரீ டிக்கட்டை கையில் திணித்து விடுவார்கள்.‌ ஒரு சில கண்டக்டர்ஸ் ஒருத்தருக்கே இரண்டு மூன்று டிக்கெட் குடுத்து விடுவார்கள்.அதெல்லாம் பிளான் பண்ணிய திருட்டு கணக்கில் சேர்ந்துடும்.


SIVA
அக் 24, 2025 08:42

இவர்கள் கொடுப்பார்கள் தேர்தலுக்கு பின் தப்பி தவறி ஆட்சியை பிடித்தால், இவர்களே அவர்கள் ஆட்கள் மூலமாக வழக்கு போட்டு உரிமைத்தொகை கொடுக்க தடை வாங்குவார்கள் பின் கோர்ட் உத்தரவு ஆர் எஸ் எஸ் சதி பிஜேபி பாசிசம் பாயசம் என்று வழக்கம் உருட்டுக்கடை அல்வா கொடுப்பார்கள் கடந்த தேர்தலில் துப்புரவு பணியாளர் பணி நிரந்தரம் என்று வாக்குறுதி கடைசியில் அவர்கள் இரவு பகலாக பனியில் குளிரில் தான் போராட்டம் நடத்தினார்கள் விடியல் மாடல் அவர்களுக்கு கொடுத்த பனி நிரந்தரம் இது தான், இவர்களை எப்படி கோர்ட் உத்தரவு என்ற பெயரில் போராட்டம் கூட நடத்த முடியாதபடி செய்தார்களோ அதே போன்று இதிலும் செய்வார்கள் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை