உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டாசு ஆலை வெடி விபத்துகளை தடுக்க ஆறு மாதங்களில் புதிய திட்டம் தீயணைப்பு துறை இயக்குனர் தகவல்

பட்டாசு ஆலை வெடி விபத்துகளை தடுக்க ஆறு மாதங்களில் புதிய திட்டம் தீயணைப்பு துறை இயக்குனர் தகவல்

திருச்சி : ''பட்டாசு ஆலை மற்றும் கிடங்குகளில் வெடி விபத்துகளை தடுக்க, ஆறு மாதங்களுக்குள் புதிய திட்டங்கள் வகுக்கப்படும்,'' என, தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ்குமார் தெரிவித்தார்.திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கான மாநில விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி, அவர் கூறியதாவது:தீயணைப்பு துறையில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்படும். தமிழக தீயணைப்பு நிலையங்களுக்கு புதிதாக ரோபோ, பைபர் படகு, ஜே.சி.பி., உட்பட நவீன இயந்திரங்கள், உபகரணங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.பட்டாசு ஆலை மற்றும் கிடங்குகளில் ஏற்படும் தொடர் விபத்துகள் கவலை அளிக்கின்றன. இது தொடர்பாக, தலைமை செயலருடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பட்டாசு கிடங்குகளை ஆய்வு செய்வது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.பெரிய வெடி மருந்து கிடங்குகள் மற்றும் நிறுவனங்களுக்கு, மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் தான் உரிமம் வழங்குகிறது. தீயணைப்பு துறை சார்பில், சிறிய கடைகளுக்கும், நிறுவனங்களுக்கும் மட்டுமே உரிமம் வழங்கப்படுகிறது.பட்டாசு ஆலை மற்றும் கிடங்குகளில் வெடி விபத்துகளை தடுக்க, ஏற்கனவே பல முன்னெச்சரிக்கை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், கலெக்டர், எஸ்.பி., மற்றும் தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளை ஒருங்கிணைத்து, ஆறு மாதங்களுக்குள் புதிய திட்டங்கள் வகுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

ஆலைகளில் தொடரும் விதிமீறல்

பட்டாசு ஆலைகளில் விதிகளை மீறினால் விபத்து ஏற்படும் என தெரிந்தும், சில ஆலைகளில் உற்பத்தி நடக்கிறது. உரிமம் பெற்ற ஆலைகளில் குறிப்பிட்ட அளவு மணி மருந்து வைத்து பட்டாசு தயாரிக்க வேண்டும். சில ஆலைகளில் அதிக மருந்து பயன்படுத்துகின்றனர். ஆலை அறை அளவை பொறுத்து அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே பணிபுரிய வேண்டும். சில ஆலைகளில் நெருக்கமாக அதிக ஆட்கள் அமர்ந்து பட்டாசு தயாரிக்கின்றனர்.நேற்று முன்தினம் சாத்துார் அருகே ராமுதேவன்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்துக்கு விதி மீறலே காரணம். இங்கு ஒரே அறையில் அதிக ஆட்கள் மருந்துகளை வைத்து பட்டாசு தயாரித்துள்ளனர். இதனால் உயிர் பலி அதிகமாகியுள்ளது.விதிமீறி பட்டாசு தயாரிப்பவர்கள் மீது போலீஸ், வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட நிர்வாகம் ஆலைகளில் ஆய்வு செய்ய அமைத்துள்ள நான்கு குழுவினர், மெயின் ரோட்டில் உள்ள ஆலைகளை கண்துடைப்பாக சோதனை செய்கின்றனர். நகருக்கு வெளியே காட்டுப்பகுதிகளில் இயங்கும் ஆலைகளை இவர்கள் கண்டுகொள்வதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி