உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேர்தல் வாக்குறுதி முழுமையா நிறைவேற்றனும்: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

தேர்தல் வாக்குறுதி முழுமையா நிறைவேற்றனும்: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: தேர்தல் வாக்குறுதி முழுமையாக நிறைவேற்ற கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தி உள்ளது.மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தாலும், நிறைவேற்றப்படாத பல முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டுமென மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.குறிப்பாக, சொத்துவரி, மின்கட்டண உயர்வுகளால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.சிறு-சிறு தொழில் முனைவோர்கள் மத்தியில் பெரும் பிரச்னையாக உருவாகி உள்ள மின் நிலைகட்டணத்தை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்துகிறார்கள்.நீதிமன்ற தீர்ப்புகளை காரணம் காட்டி ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராடுகின்றனர்.கோவில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்களும் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்போடு உள்ளனர்.இந்த அறிவிப்புகள் ஏதும் கவர்னர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.இந்நிலையில், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற, தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மார்க்சிஸ்ட் செயற்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Yes your honor
ஜன 06, 2025 22:47

அனைத்து வாக்குறுதிகளையும் ஒருவேளை நிறைவேற்றாவிட்டால் கமியூனிஸ்டுகள் கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுகவுடன் சேருவார்களா இல்லை காலையில் காப்பி சாப்பிட்டவுடன் மொத்தத்தையும் மறந்து விடுவார்களா? அண்டிப் பிழைப்பவர்களுக்கு எதற்கு வெட்டி பம்மாத்து.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை