உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.54 ஆயிரத்தை கடந்தது

தொடர்ந்து உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.54 ஆயிரத்தை கடந்தது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று (ஏப்.,12) ஆபரண தங்கத்தின் விலை, பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு பவுன் தங்கம் ரூ.54,440க்கு விற்பனையானது.சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துக்கொண்டே செல்கிறது. இதனால் நகை வாங்க நினைக்கும் மக்கள் கலக்கமடைந்தனர்.இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.54,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.6,805க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.0.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.90க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.500 உயர்ந்து, ரூ.90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ