உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை காலையில் உயர்வு மாலையில் குறைவு 

தங்கம் விலை காலையில் உயர்வு மாலையில் குறைவு 

சென்னை:தமிழகத்தில் நேற்று காலை, ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்த நிலையில், மாலையில் 1,120 ரூபாய் சரிவடைந்தது. சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில், கடந்த ஒரு வாரமாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 174 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 11,540 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 92,320 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து, 171 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மாலையில் தங்கம் விலை கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து, 11,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 1,120 ரூபாய் சரிவடைந்து, 91,200 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து, 170 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை