உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆபரண தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,480 உயர்வு 

ஆபரண தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,480 உயர்வு 

சென்னை : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு 1,480 ரூபாய் அதிகரித்தது.சர்வதேச நிலவரங்களால் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை, தமிழகத்தில் கடந்த வாரத்தில் சற்று குறைந்தது. கடந்த ஐந்து நாட்களில், 22 காரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 2,680 ரூபாய் குறைந்திருந்தது. நேற்று முன்தினம் தங்கம் கிராம் 8,225 ரூபாய்க்கும், சவரன் 65,800 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 102 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று காலை தங்கம் விலை, கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து, 8,290 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்து, 66,320 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. மதியம் திடீரென தங்கம் விலை கிராமுக்கு மேலும் 120 ரூபாய் அதிகரித்து, 8,410 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, 67,280 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு 185 ரூபாய், சவரனுக்கு 1,480 ரூபாய் அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து, 104 ரூபாய்க்கு விற்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ