உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பஸ் டயர் கழன்று ஓடியது: பயணிகள் 56 பேர் தப்பினர்!

அரசு பஸ் டயர் கழன்று ஓடியது: பயணிகள் 56 பேர் தப்பினர்!

திருப்புவனம்: திருப்புவனம் அருகே அரசு பஸ் டயர் கழன்று ஒடிய விபத்தில், பயணிகள் 56 பேரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில், ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தட்டான்குளம் என்ற இடத்தில் டயர் வெடித்து 100 மீட்டர் தூரம் கழன்று ஓடியது. பஸ்சில் சென்ற 55 பயணிகளும் உயிர் தப்பினர்.அரசு பஸ் டயர் கழன்று ஓடும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது.டயரின் தரம், தேய்மானம், பராமரிப்பு பற்றாக்குறை ஆகியவை இதற்க்கு முக்கிய காரணங்களாகும். டயர் கழன்று ஓடும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் சில நேரங்களில், டிரைவரின் திறமையான செயல்களால் விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. வாராந்திர பராமரிப்பு பணி, சோதனை ஓட்டம் நடத்தப்பட வேண்டும். இதனால் டயர் கழன்று ஓடும் சம்பவங்களை தடுக்கலாம். அரசு போக்குவரத்து கழகங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்வதன் மூலம் இத்தகைய விபத்துகளுக்கு தீர்வு காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பல்லவி
மே 19, 2025 20:16

அரசு சத்தம் இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது அதில் டயர் எங்கே ஒடியது


Sundaran
மே 19, 2025 19:32

பார் புகழும் எமது அரசு மீது காழ்ப்புன்ஸர்ச்சியால் குறை கூறினால் கஞ்சா வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவோம். ஜாக்கிரதை.


நாஞ்சில் நாடோடி
மே 19, 2025 16:34

எலவசத்துக்கு ஆசைப்பட்ட மக்கள் உயிரின்மீது விளையாடும் விடியா அரசு ...