உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆவணங்கள் ஆய்வுக்கு பின் முன்ஜாமின் கொடுங்க; நீதிபதியை அழைத்து அறிவுரை கூறிய ஐகோர்ட்

ஆவணங்கள் ஆய்வுக்கு பின் முன்ஜாமின் கொடுங்க; நீதிபதியை அழைத்து அறிவுரை கூறிய ஐகோர்ட்

சென்னை: 'ஆவணங்களை முறையாக ஆய்வு செய்த பின்னரே முன்ஜாமின் வழங்க வேண்டும்' என, கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், ச.செல்லம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிபாலா. இவர், சங்கராபுரம் காவல் நிலையத்தில், கடந்த மாதம் 25ல் அளித்த புகாரில், 'ச.செல்லம்பட்டு பஞ்சாயத்து தலைவி அறிவழகி, அவரது கணவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர், என் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் ஈடுபட்டனர்.'அதுகுறித்து கேட்டபோது, வீட்டுக்குள் நுழைந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்' என கூறியிருந்தார். எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சுமிபாலா வழக்கு தொடர்ந்தார்.விசாரணை இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமின் வழங்கியது குறித்து, கள்ளக் குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி இருசன் பூங்குழலி நேரில் ஆஜரானார்.கண்டனம் அப்போது அவரிடம், ''காவல் துறையின் எழுத்து பூர்வமான மனுவை சரிபார்த்தீர்களா; மருத்துவமனையில் இருந்து, 'டிஸ்சார்ஜ் சம்மரி' பெற்று ஆய்வு செய்தீர்களா; இதை சரிபார்க்காமல் எப்படி முன்ஜாமின் வழங்கப்பட்டது,'' என, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதி பி.வேல்முருகன், ''எதிர்காலத்தில் இதுபோல செயல்படக்கூடாது,'' என எச்சரித்தார்.மேலும், அமர்வு நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திய காவல் துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, மனுதாரரின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய, அரசு மருத்துவமனை டீனுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Mani . V
ஜூலை 30, 2025 03:51

ஆவணங்கள் என்றால், காந்தி புகைப்படம் போட்டு நாசிக்கில் பிரிண்ட் செய்த அந்த ஆவணம்தானுங்களே?


Rajan A
ஜூலை 29, 2025 18:20

பணம் மெஷின்ல போட்டு ஓகே ஆனபின் தான் ஜாமீன் கொடுக்கிறார்கள். என்ன ஆவணம் இன்னும் வேணும்


Balaa
ஜூலை 29, 2025 16:01

இந்த இருசன் பிராமணர் இல்லையே. இருந்திருந்தால் வாஞ்சிநாதன் , வீரமணி, வில்சன் எவனாவது குற்றச்சாட்டு கூறியிருப்பான்.


Ramkumar Ramanathan
ஜூலை 29, 2025 12:06

if it was the mistake of police, concerned officials should be suspended


T. சங்கரநாராயணன் ஈரோடு
ஜூலை 29, 2025 11:48

சபாஷ் சரியான நடவடிக்கை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை