உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சதுரகிரி மலையில் கனமழை; பக்தர்களுக்கு அனுமதியில்லை

சதுரகிரி மலையில் கனமழை; பக்தர்களுக்கு அனுமதியில்லை

ஸ்ரீவில்லிபுத்தூர் : சதுரகிரி மலையில் கனமழை பெய்து வருவதால் புரட்டாசி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.இக் கோயிலில் இன்று (அக்.15) புரட்டாசி மாத பிரதோஷம், அக். 17ல் பவுர்ணமி வழிபாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று முதல் நான்கு நாட்கள் மழையை பொருத்து பக்தர்கள் மலையேற அனுமதிக்க வனத்துறை திட்டமிட்டிருந்தது. ஆனால் நேற்று மதியம் 3:00 மணி முதல் முதல் சதுரகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்துள்ளதாலும், தொடர்ந்து மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாலும் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை