நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டால் குண்டாஸ் பாயும் தமிழக அரசு முடிவுக்கு ஐகோர்ட் பாராட்டு
மதுரை:'நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டால், இனி குண்டர் சட்டம் பாயும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.தமிழகத்தில் பல நிதி நிறுவனங்கள், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகக்கூறி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். ஏலத்தில் விற்பனை
நிறுவன நிர்வாகிகளுக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும். நிறுவன சொத்துக்களை ஏலத்தில் விற்பனை செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தொகையை வழங்க வேண்டும். இவ்விவகாரத்தில் ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாத பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மீது, நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என, சில வழக்குகள் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கலாகின.ஏற்கனவே விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி, 'பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தாமதம் ஏன்? அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன?' என கேள்வி எழுப்பி, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.மீண்டும் நீதிபதி புகழேந்தி முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு பல்வேறு அரசாணைகளை தற்போது வெளியிட்டுள்ளது. தவிர்க்க முடியும்
இதன் மூலம் எதிர்காலத்தில் மோசடிகளை தவிர்க்க முடியும். எம்.ஆர்.டி.டி., நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களில், 5,138 பேருக்கு, 25 கோடி ரூபாய் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு வாதிட்டார்.அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி தாக்கல் செய்த பதில் மனு:நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் தொடர்ச்சி 3ம் பக்கம்