உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் தடுக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் தடுக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் மாரியம்மன் கோயிலை திறந்து வழிபாடு நடத்த அனுமதிக்க மற்றும் அறங்காவலர்கள், கோயிலுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக்கோரி வன்னியகுல சத்திரியர் நல அறக்கட்டளை தலைவர் முருகன் மனுதாக்கல் செய்தார். பாகுபாடின்றி குறிப்பிட்ட பிரிவு மக்கள் உள்பட அனைவரும் வழிபட அனுமதிக்கக்கோரி மாரிமுத்து என்பவர் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் வித்யா, கோகுல்ராஜ் ஆஜராகினர்.அறக்கட்டளை தரப்பில்,'கோயிலில் பாகுபாடு பார்க்கப்படுவதில்லை,' எனவும், மாரிமுத்து தரப்பில்,' கோயிலில் குறிப்பிட்ட சமூக மக்களை அனுமதிப்பதில்லை,' எனவும் தெரிவிக்கப்பட்டது.கலெக்டர் தரப்பில், 'கோயில் 2018 முதல் மூடப்பட்டுள்ளது. திருவிழா நடத்தவில்லை. பூஜை மட்டும் நடைபெறுகிறது. ஜாதி பதட்டம், சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. கோயில் மூடப்பட்டுள்ளது,' என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கலெக்டரின் பதில் கண்டனத்திற்குரியது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை என்ற பெயரில் ஒரு பொது கோயிலை ஆண்டு கணக்கில் மூடி வைத்திருப்பது சரியல்ல. பிரச்னை ஏற்படும் எனக்கூறி தனது கடமையிலிருந்து அவர் தப்பிக்க முடியாது. அச்சுறுத்தல் இருந்தால், அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி கையாள வேண்டியது கலெக்டரின் கடமை.போலீசாரின் செயல்பாடும் சரியாக இல்லை. அமைதியை நிலை நாட்ட ஒரே வழி கோயிலுக்குள் யாரையும் நுழைய விடாமல் இருப்பதே என போலீசார் கருதுகின்றனர். இது தவறானது. கோயிலுக்குள் அனைவரையும் அனுமதிப்பதை தடுப்பது அமைதியை நிலை நாட்டுவதற்கான வழியல்ல. உரிமைகள் பாதுகாக்கப்படுவது, சட்டத்தை மீறுவோரை உரிய முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வது போலீசாரின் கடமை. எதிர்ப்பவர்கள், எதிர்ப்பை சந்திப்பவர்களை சமமாக கருத முடியாது.சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் ஜாதியின் பெயரில் மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது அதிர்ச்சியளிக்கிறது. பக்தர்களிடையே பாகுபாட்டை சட்டம் அனுமதிக்கவில்லை. கடவுள் எந்த ஒரு ஜாதியையும் சேர்ந்தவர் அல்ல. கடவுள் பாகுபாடு காட்டுவதில்லை. மனிதர்கள் மட்டுமே பாகுபாடுகளுடன் செயல்படுகின்றனர்.கோயில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. அனைவரும் வழிபட அனுமதிப்பது, ஜாதி அடிப்படையில் பாகுபாடு இல்லை என்பதை அறநிலைத்துறை உறுதி செய்ய வேண்டும்.இதுபோன்ற சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் கண்டதேவி கோயில் வழக்கு. ஜாதி பதட்டம் காரணமாக கண்டதேவி கோயிலில் 17 ஆண்டுகளாக திருவிழா நிறுத்தப்பட்டிருந்தது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அனைத்து சமூகத்தினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியது. அனைவரின் பங்களிப்புடன் திருவிழா அமைதியாக நடந்தது. அதுபோல் இங்கும் செய்திருக்கலாம். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.தற்போது கோயிலை நிர்வகிப்பது யார், அனைத்து சமூகத்தினரும் வழிபட அனுமதிக்கப்படுகிறார்களா, அரசு மேற்பார்வையில் ஒருங்கிணைந்த வழிபாட்டுக்கு ஏன் ஏற்பாடு செய்யவில்லை என்பது குறித்து அறநிலையத்துறையும், 2018 முதல் கோயில் மூடப்பட்டிருப்பது ஏன், போலீஸ் பாதுகாப்புடன் வழிபாட்டை அனுமதிக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, வழிபாட்டை மீட்டெடுக்க, சமத்துவத்தை உறுதிப்படுத்த எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து கலெக்டர், சட்டம்- ஒழுங்கு நிலைமை, வழிபாடு நடத்த போதிய பாதுகாப்பு வழங்க முடியுமா குறித்து எஸ்.பி., பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.ஒரு பொதுக் கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் யாரும் தடுக்க முடியாது. இதில் யாராவது பிரச்னை உருவாக்க நினைத்தால், ஜாதி அடிப்படையில் மரியாதை கோர முயன்றால் அவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைளை எதிர்கொள்ள நேரிடும்.இரு தரப்பினரும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் அமைதி, நல்லிணக்கத்தை பராமரிக்க வேண்டும். யாரும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

தமிழ்வேள்
ஜூலை 19, 2025 19:56

இதே நீதி தீர்ப்பை சர்ச் மற்றும் மசூதிகளுக்கு தர இயலுமா? ஒரு சர்ச்/ மசூதி சார்ந்தவன் அடுத்த சர்ச்/மசூதியில் நுழையவே முடியாதே? வற்புறுத்தினால் கலவரம் வருமே?...ஒரு இனத்தின் குலதெய்வ கோவிலில் யார் வேண்டுமானாலும் வணங்கி செல்லலாம்.. ஆனால் முதல் மரியாதை மண்டகப்படி மரியாதை என்பனவற்றை உரிமை கோர முடியாது.... இங்கு பிரச்சினை கிளப்புவது இந்த வகையில் தான்.. நீதியரசர்கள் பெரும்பாலும் கான்வென்ட் படிப்பு பெருநகர மேட்டுக்குடி வாழ்க்கை என்று இருப்பதால், மற்ற ஊர்களில் வாழ்க்கை முறை வழிபாட்டு முறை பற்றி புரிதல் இன்றி தீர்ப்பு தருகிறார்கள்.. கஸ்டம்ஸ் யூசேஜ் அன்ட் டிரெடிஷன்ஸ் என்பவை மாற்ற இயலாதவை.. சட்டம் என்பது இவற்றோடு ஓரளவுக்கு தான் பொருந்தும்...


கோபிநாத்
ஜூலை 19, 2025 10:43

நீதிமன்றத்தின் இவ்வாறான கருத்துக்கள் நாட்டில் நிலவும் உண்மையான பிரச்சினைளான ஜாதி கட்சிகள், ஜாதி சங்கங்கள் மத மாற்ற கும்பல்கள், போலி மதச்சார்பின்மை ஆகியவற்றில் இருந்து நீதிமன்றத்தின் கவனத்தை மாற்றுகிறது.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 19, 2025 08:42

சாதிகளைக் கடந்து ஹிந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்த பாஜக எப்போது நடவடிக்கை எடுக்கும் ?


மூர்க்கன்
ஜூலை 24, 2025 12:22

வாய்ப்பு இல்ல ராஜா ?? வாய்ப்பு இல்ல


Jack
ஜூலை 19, 2025 08:25

மசூதிக்குள் பெண்கள் நுழைய நீதிமன்றங்கள் ஆணையிடுமா ?


Kasimani Baskaran
ஜூலை 19, 2025 08:01

எங்கள் குல தெய்வ கோவில்களில் வேறு சமூகத்தை எப்படி அனுமதிக்க முடியும்?


praveen S
ஜூலை 19, 2025 10:18

indhu otrumai athu ithunu vesham podura...


மூர்க்கன்
ஜூலை 21, 2025 10:28

கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் இது கூட புரிந்து கொள்ள முயலாமல் இருக்கும் இவர்கள் எல்லாம் ஆன்மீக வாதிகள் அல்ல


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 19, 2025 07:27

கட்டிடங்களின் பெயர்கள், தெருக்களின் பெயர்களில் உள்ள ஜாதியை ஒழித்ததாக பெருமைக்கொள்ளும் இந்த திராவிடன்கள் பிறந்த குழந்தைக்கு கொடுப்பது ஜாதி சர்டிபிகேட், பள்ளியில் சேர, கல்லூரியில் சேர, வேளையில் சேர, வேலை உயர்வு பெற, அரசு உதவிகள் பெற, கட்சியில் சேர கேட்பது ஜாதி சர்டிபிகேட். என்று அரசு ஜாதியை தனிப்பட்ட மனிதனின் சுதந்திரம் என்று புரிந்துகொண்டு, அரசாங்கத்திலிருந்து ஜாதியை விலக்கி வைக்கிறதோ அன்றுதான் இந்த ஜாதி பிரச்சனை முடிவுக்கு வரும். ஒருவன் ஏழை என்றால் உதவி செய்வது மட்டுமே சமூக நீதியாக இருக்கமுடியும். மற்றபடி பணம் இருக்கும் எவனும் தனக்கு வேண்டியதை தானே கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் நடைமுறைதான் மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும், அதுவே நாட்டிற்கும் நல்லது. அம்பேத்கரையும், பெரியாரையும் ஒதுக்கி வைக்கும் நாள் நெருங்குகிறது.


மூர்க்கன்
ஜூலை 19, 2025 07:10

தினமும் பலர் பசியால் சாகும் போது அந்த படைத்த பரமன் படியளக்க வில்லையா? என்று கேட்கவில்லை???. கோடி கணக்கான மக்களிடம் மனதில் இருந்த சாதி என்கிற நச்சு செடியை பிடிங்கி இருந்தவர் வெங்காய விவசாயி ஆனாலும் நல்ல பயிர்கள் தோற்றத்தில் அங்கொன்றும் இங்கொன்றும் உன்னை போன்ற சில களைகள் விடுபட்டு இருக்கின்றன அவைகளும் கூடிய விரைவில் பிடுங்கி எறியப்படும் நாள் வெகுதொலைவில் யில்லை.


raja
ஜூலை 19, 2025 06:32

அப்போ அந்த திருட்டு திராவிட கும்பலின் தலைவன் ஈரோட்டு வெங்காயம் இன்னும் ஜாதியை ஒழிக்கலையா


naranam
ஜூலை 19, 2025 05:45

திராவிடத் தமிழன் என்று தான் இந்த ஜாதி வெறியை விட்டு ஒழிப்பானோ? 21ம் பக்க புகழ் ராமசாமி அப்படி என்னதான் சீர்திருத்தம் செய்து கிழித்து விட்டார்? தமிழன் தினம் ஒரு ஜாதிச் சண்டையிலும் ஆணவக் கொலைகளிலும் ஊறித் திளைத்துக் கொண்டிருக்கிறான்!


முக்கிய வீடியோ