உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீக்கியவர்களை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்க...மாட்டேன் :ஒற்றுமை பேச்சுக்கு பழனிசாமி முற்றுப்புள்ளி

நீக்கியவர்களை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்க...மாட்டேன் :ஒற்றுமை பேச்சுக்கு பழனிசாமி முற்றுப்புள்ளி

சென்னை:'கட்சி ஒன்றிணைய வேண்டும்' என்ற ஒற்றை குறிக்கோளோடு, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கொடுக்கும் பல முனை அழுத்தங்களையும் மீறி, தன் முடிவில் தீர்க்கமாக இருப்பதை, தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி. அதில், நீக்கியவர்களை மீண்டும் சேர்க்கவே மாட்டேன் என்பதையும், சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால், ஒற்றுமை பேச்சுக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளதாக அ.தி.மு.க.,வினர் கருதுகின்றனர். அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டதால், தனிக்கட்சி நடத்தும் அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சசிகலா, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை ஒன்றிணைத்து, மீண்டும் ஒன்றுபட்ட அ.தி.மு.க., உருவாக வேண்டும் என, பொதுச்செயலர் பழனிசாமிக்கு, சமீப நாட்களாக பல முனைகளில் இருந்தும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது.அதற்கு கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் தோல்விகள் காரணமாகவும் காட்டப்படுகின்றன. ஆனாலும், பழனிசாமியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. 'ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு நிற்க முடியாது' என, தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் காட்டமாக குறிப்பிட்டு, கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை, மீண்டும் சேர்ப்பதற்கான வாய்ப்பே இல்லை என்பதை, சூசகமாக தெரிவித்துள்ளார்.

சீர்குலைப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, கட்சியினருக்கு பழனிசாமி எழுதியுள்ள கடிதம்:எப்போது தேர்தல் வரும்; ஜெயலலிதா அரசை மீண்டும் அமைக்க எப்போது வாய்ப்பு கிடைக்கும் என மக்கள் காத்திருக்கின்றனர். பெண்களுக்காகவும், ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும், ஜெயலலிதா கொண்டு வந்த அற்புதமான திட்டங்களை எல்லாம், தி.மு.க., அரசு சீர்குலைத்து நிறுத்தி விட்டது.தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி மத்திய அரசு, நிதி நெருக்கடியை கொடுத்தும், மாநில அரசின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டும், இம்சை அரசாக இருந்ததை அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.ஜெயலலிதா அரசை நிதி நெருக்கடிக்கு தள்ளி, நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற கெடுமதியுடன், தி.மு.க., அங்கம் வகித்த மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டது.எனினும், தன் நிர்வாகத் திறமையால், அனைத்து சவால்களையும் சமாளித்து, ஏராளமான நலத்திட்டங்களை, ஜெயலலிதா தமிழக மக்களுக்கு வழங்கினார்.

வாய்ப்பூட்டு

இன்று தி.மு.க., அரசு, இரு மொழி கொள்கையை காப்பாற்ற திறனற்றதாக உள்ளது. தமிழகம் முழுதும், பெண் குழந்தைகள், தாய்மார்கள், பெண் காவலர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறியபடி உள்ளன. சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.உண்மைகளை எடுத்து சொல்வோருக்கு வாய்ப்பூட்டு போடப்படுகிறது. இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ வேண்டும். தமிழகம் பொருளாதார வளர்ச்சி அடைந்து, மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இதற்கு ஒரே தேர்வு, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும்.இன்று கொள்கை வீரர்களின் கூடாரமாக அ.தி.மு.க., திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும், கட்சியை காட்டிக் கொடுக்க தயாராக இருந்த, திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும், காகித ஓடம் போல கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன.ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியாது. களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகாது. விசுவாசியும், துரோகியும், தோளோடு தோள் நிற்க முடியாது. அ.தி.மு.க., தலைமையில் சிறப்பு மிக்க வெற்றிக்கூட்டணி அமையப் போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப் போகிறோம். அதற்கேற்ப அயராது உழைப்போம்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

வார்த்தை ஜாலம் எடுபடாது!

சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், அ.தி.மு.க.,வில் பிரிந்து கிடக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது, தமிழக மக்களின் எண்ணமாக உள்ளது. தேர்தலின் போது, பா.ஜ.,வுடன் கூட்டணி பற்றி பேசுவதற்கு முடிவு செய்யப்படும். அ.தி.மு.க.,வில் உள்ள துாய்மையான தொண்டர்கள் எந்த காலத்திலும் மாற்று கட்சிக்கு செல்ல மாட்டார்கள். முன்னாள் முதல்வர் பழனிசாமியின் பேச்சு மற்றும் கருத்துக்கள், வார்த்தை ஜாலத்திற்கு மட்டுமே பயன்படும்; நடைமுறை அரசியலுக்கு எடுபடாது. - பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்

ஓரணியாக திரளுவோம்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அ.ம.மு.க., உள்ளது. தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி பலப்படும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஓரணியாக திரண்டு, 2026 சட்டசபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவோடு, தி.மு.க., ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம். - தினகரன், பொதுச்செயலர், அ.ம.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 51 )

Sivakumar
பிப் 24, 2025 23:23

To me, EPS approach is truly a genuine one to save ADMK party from onslaughts from both BJP and other infidels expelled from the erstwhile Jayalalitha ruled party. Look no further than Maharashtra where Eknath Shinde is struggling now to save his party from BJP's Fadnavis. ADMK cadre should unite under EPS's leadership and work for the party's return to theTN Assembly with good margin.


Vijay D Ratnam
பிப் 24, 2025 22:45

ஜெயலலிதாவுக்கு இரண்டு உதவியாளர்கள் இருந்தார்கள் ஒருவர் அரசு நிர்வாகத்திற்கு ஷீலா பாலகிருஷ்ணன். மற்றோருவர் வீட்டு நிர்வாகத்திற்கு சசிகலா. அரசு நிர்வாகம், மாநிலத்தின் வளர்ச்சி, திட்டங்கள், செயல்பாடுகள், அரசு உயர்பதவி அதிகாரிகளை வழிநடத்துவது போன்றவற்றை கவனிக்க ஜெயலலிதாவுக்கு உதவியாக இருப்பவர் ஷீலா பாலகிருஷ்ணன். அது போல ஜெயலலிதாவின் வீட்டு நிர்வாகம், சமையல் துணிதுவைப்பது, தோட்டத்தை கவனிப்பது, வீட்டுக்கு வருபவர்களை கவனிப்பது, ஓட்டடை அடிப்பது, வீடு கழுவி விடுவது இதற்கு சசிகலா. மன்னார்குடி குடும்பத்தை சேர்ந்த யாரையும் ஜெயலலிதா கட்சிக்குள் அண்டவிடவே இல்லை. தள்ளியேதான் வைத்து இருந்தார். இப்போதும் சசிகலா அரசியலில் இல்லை. ஜெயலலிதாவால் கட்சியை விட்டு துரத்திவிடப்பட்ட டிடிவி தினகரன் ஜெ மறைவுக்கு பிறகு சசிகலாவுடன் அட்டை போல் ஓட்டிக்கொண்டே கட்சிக்குள் நுழைந்தார். சசிகலா சிறைக்கு சென்றவுடன் அதிமுகவினர் இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் சேர்ந்து டிடிவியை கட்சியை விட்டு துரத்திவிட்டார்கள். அப்போதே மன்னார்குடி குடும்ப சகவாசம் முடிந்துவிட்டது. டிடிவி தினகரன் தனியாக கட்சி ஆரம்பித்து நடத்திக்கொண்டு இருக்கார். அதன் பிறகு அதிமுக கூடவிருந்தே குழிபறித்துக்கொண்டு இருந்த ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு துரத்திவிட்டுவிட்டார்கள். இப்போதுதான் அதிமுக சரியான ஃபார்முக்கு வந்து இருக்கிறது. இனி நடப்பது யாவும் நன்மைக்கே. இனி அதிமுகவினர் தைரியமாக அமித்ஷா கனிமொழி கள்ளக்கூட்டணியை, பாஜக திமுக கள்ள உறவை, டீலிங்க்ஸை மேடையில் போட்டு பொளக்க வேண்டும்.


V வைகுண்டேஸ்வரன்
பிப் 24, 2025 22:12

இ பி எஸ், அதிமுக வுக்கு ஆப்பு அடிக்கிறாரோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் இவரது நடத்தையால் தமிழ்நாடு பாஜக வுக்கு ரிவெட் அடிக்கறார். நெம்பக் கூட முடியாது. இனி ரெயிடு, இரட்டை இலை சின்னம் முடக்குவது என்று பாஜக ஏதாச்சும் ட்ரை பண்ணும். மசிய மாட்டார். எப்படியாவது அதிமுக முதுகில் ஏறி தேர்தல் குளத்தில், சாரி, களத்தில் இறங்கத் தவிக்கும் பாஜக பாவம்.


hariharan
பிப் 24, 2025 19:43

பழனி ஆட்சியில் இருக்கும்பொழுது திமுக எதற்கெடுத்தாலும் குறை கூறினர். எடுபிடி அரசு, கையால் ஆகாதவர் பழனிச்சாமி, ஆமாம் சாமி என்றும் அவருடைய பிறப்பை கொச்சைப் படுத்தியும் பலவாறாக விமர்சனம் செய்தனர். அரசியல் பண்ணாமல் அவியலா பண்ணுவோம் என்றனர். இதுபோன்ற சுடுகணைகள் எதுவுமே இவருக்கு பெரிதாகப்படவில்லை. ஆனல் தன் கட்சியிலுள்ளோரிடம் எதற்கு இத்தனை கடுப்பாக இருக்கிறர். ஜெயலலிதா இருந்திருந்தால் இது போன்ற நிகழ்வுகள் நடக்குமா? பழனி எதோச்சதிகாரத்துடன் முடிவுகள் எடுப்பது அதிமுக மைய்யத்தையும் விட குறைவான செல்வாக்குடன் இருக்கிறது. இரு மொழிக்கொள்கை, புதிய கல்வித்திட்டம் போன்ற பல பிரச்சினைகளை திமுகவும் பாஜகவும் கையிலெடுத்து தினமும் செய்திகள் கொடுத்துக்கொண்டு இருக்கின்றர். இந்த பழனி எங்கே இருக்கிறர் என்றே தெரியவில்லை. ஒருவேளை கொடநாடு குடைச்சலால் அமைதியாக இருக்கிறரோ என எண்ணத் தோன்றுகிறது. உண்மையான அதிமுக தொண்டர்கள் விரக்தி அடைந்திருக்கின்றனர்.


Nava
பிப் 24, 2025 18:20

இந்த நபரின் தவறான கணிப்புகளினாலும் வழிநடத்தலாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் இவரும் காணாமல் போவது உறுதி


kr
பிப் 24, 2025 17:53

In his letter to cadres, it is unacceptable that EPS addresses Jayalalithaa by her name without any honorifics like Puratchi Thalaivar. Completely unacceptable


visu
பிப் 24, 2025 17:40

MGR உருவாக்கி வளர்த்த கட்சி EPS வயது 70 க்கு மேலாகிவிட்டது அவருக்கும் தெரியும் இதுதான் தனது கடைசி வாய்ப்பு என்று அதர்க்கு பின் கட்சி இருந்தாலென்ன போனாலென்ன என்று முடிவெடுத்து விட்டார்


Narayanan
பிப் 24, 2025 16:48

கட்சியை அழிக்கத்தொடங்கிவிட்டார் இந்த பழனிசாமி . ஆண்டவனால் கூட இனி அதிமுகவை காப்பற்ற முடியாது.


jayvee
பிப் 24, 2025 16:31

அதிமுக .. அ - அட்டகாசம் செய்த தினகரன் கட்சி ..தி - மக்களை துன்புறுத்திய திருடிய சசிகலா கட்சி மு - முரட்டு EPS கட்சி க - கையாலாகாத OPS கட்சி என்று மாறிவிட்டது


Muthu Kumar
பிப் 24, 2025 14:33

கண்டிப்பாக கட்சியை அழிக்காமல் விடமாட்டேன் என்பதில் உறுதியாக எடப்பாடி உள்ளார். யாரோ ஆரம்பித்து, யாரோ வளர்த்தெடுத்த கட்சியை, இன்று பல உள்கூத்து வேலை பார்த்து, அபகரித்து ஆட்டம் போடும் எடப்பாடிக்கு 2026 தேர்தல் ஒரு பாடமாக அமையும். அவர் சொல்லும் ஆட்கள் ஒன்றும் தனி நபர்கள் இல்லையே. அவர்களுக்கு என்று ஒரு கூட்டம் உள்ளது என்பதை எடப்பாடி மறந்து விடக்கூடாது.


Haja Kuthubdeen
பிப் 24, 2025 17:30

யாரோ ஆரம்பித்தது அல்ல..புரட்சிதலைவரால் உண்டாக்கியது.எடப்பாடி முதல் அனைவரும் எம் ஜி ஆரால் மட்டுமே வளர்ந்தார்கள்.இடையில் பல துரோகிகள் கட்சியை விட்டு வெளியேறினாலும் இன்றும்எடப்பாடி தலைமையில்தான் கட்சி நிக்குது.ஓபிஎஸ்..டிடிகே போன்றவர்கள் ஒரு தேசிய கட்சியின் தூண்டுதலில்தான் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது அஇஅதிமுகவினருக்கும் தெரியும்.கர்மயுத்தம் என்ற பெயரில் முதலில் கலகத்தை தொடங்கியவரே ஓபீஸ்தான்.தாமரை கட்சியினரின் கணவு பலிக்காது.உண்மையாவே அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் ஆர்வம் இருந்தால் உட்கட்சி விவகாரத்தில் தலையிடாமல் உங்க கட்சிய வளர்க்கும் வேலய பாருங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை