உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமித் ஷா முடிவெடுத்தால் வெற்றியில் முடியும்: நிர்வாகிகளிடம் மகிழ்ச்சியை பகிர்ந்த இ.பி.எஸ்.,

அமித் ஷா முடிவெடுத்தால் வெற்றியில் முடியும்: நிர்வாகிகளிடம் மகிழ்ச்சியை பகிர்ந்த இ.பி.எஸ்.,

மதுரை: “சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி என் தலைமையில் அமையும். அமித் ஷாவே முடிவெடுத்து அறிவித்து விட்டார்,” என மதுரை அ.தி.மு.க., நிர்வாகிகளிடம், அக்கட்சியின் பொதுச்செயலர் இ.பி.எஸ்., மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், தமிழகம் முழுதும் இ.பி.எஸ்., பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். நான்காம் கட்ட பயணத்தில் செப்., 1 முதல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். மதுரை ரிங் ரோட்டில் உள்ள ஹோட்டலில் மூன்று நாட்கள் தங்கியிருந்த அவர், கட்சி நிர்வாகிகளையும், பா.ஜ.,வினரையும் சந்தித்து பேசினார். மதுரையில் முகாமிட்டிருந்தபோதுதான் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பன்னீர்செல்வமும், தினகரனும் விலகுவதாக அறிவித்தனர். இது இ.பி.எஸ்.,க்கு உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் கட்சியினரும், பா.ஜ.,வினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அ.தி.மு.க., கூட்டணியில் தன்னையும், பன்னீர்செல்வத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என பாடுபட்ட தினகரனுக்கு, பா.ஜ., தரப்பில் இருந்தும் பச்சைக்கொடி காட்டப்படாததால், கூட்டணியில் இருந்து தினகரன் விலகி உள்ளார். இதற்கிடையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இ.பி.எஸ்., செயல்பாட்டை விமர்சிப்பார் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், மதுரையில் தங்கியிருந்த இ.பி.எஸ்., கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம், அடுத்த கட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர்களிடம் பேசிய இ.பி.எஸ்., “பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துக் கொண்டபோதே, நான் தான் முதல்வர் வேட்பாளர் என பேசி முடிக்கப்பட்டது. ஆனாலும், பா.ஜ.,வைச் சேர்ந்த தலைவர்கள் சிலர், அதில் குழப்பம் விளைவிக்க முயன்றனர். ''ஆனால், இந்த விஷயத்தில் அமித் ஷா தெளிவாக இருந்து விட்டார். நான் தான் முதல்வர் வேட்பாளராக இருப்பேன் என்று உறுதியாக தெரிவித்து விட்டார். ஒரே நெருடலாக இருந்த அண்ணாமலை வாயாலும், நான் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை அமித் ஷா சொல்ல வைத்து விட்டார். ''அமித் ஷா முடிவால், எல்லா குழப்பங்களும் தீர்ந்து விட்டன. அமித் ஷா முடிவு செய்தால், அது வெற்றியில் தான் முடியும்,” என உற்சாகமாக பேசி உள்ளார். இது, கட்சி நிர்வாகிகளையும் உற்சாகமடையச் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

T.sthivinayagam
செப் 05, 2025 16:58

நூலை நம்பி உயரத்தில் பறக்கும் பட்டமாக திரு பழனிச்சாமி அவர்கள் உள்ளார் என மக்கள் கூறுகின்றனர்


Tamilan
செப் 05, 2025 16:41

சா வந்தாலும் சோ வந்தாலும் இவர்களின் திட்டம் எதுவும் நிறைவேறாது


Vasan
செப் 05, 2025 15:02

I think ADMK will have alliance with DMK, to fight against BJP.


Sridhar
செப் 05, 2025 14:00

நீங்க முதல்வர், ஆனா அமித் ஷா தான் பாஸு? இந்த காம்பினேஷன் பிஜேபிக்கு நல்லா இருக்கும் போலருக்கே?? ஜெயிச்சா.


venugopal s
செப் 05, 2025 13:54

இ பி எஸ் பகல் கனவு காண்கிறார், அமித்ஷா மட்டும் முடிவு செய்து விட்டால் போதாது. தமிழக மக்கள் தான் யார் அடுத்த தமிழக முதல்வர் என்பதை முடிவு செய்வார்கள்!


Barakat Ali
செப் 05, 2025 13:39

இரண்டில் எது உண்மை?


Bala
செப் 05, 2025 13:04

TTV illana neenga ADMK+BJP katham


திகழ்ஓவியன்
செப் 05, 2025 12:54

பாவம் இதற்கு மேல் DETAILED என்றா சம்பந்தி பெங்களூர் CONTRACT விஷயத்தில் மகன் மற்றும் சம்பந்தி தலையில் கத்தி அவர் என்ன செய்வர், அவர் சென்ற யார்திரை பேர் மகனை காப்பேன் சம்பந்தியை மீட்பேன்


Tamilan
செப் 05, 2025 12:30

முன்மொழிகிறார்


pakalavan
செப் 05, 2025 11:58

மக்கள் உனக்கு ஓட்டு போட்டாதான


சமீபத்திய செய்தி