வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கழிவுகளை சுமக்கும் ஆறாக பவானி மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
பிணம்களை சுமக்கும் ஆறாக மாறுகிறதா கங்கை
1 DOMESTIC கழிவுகளை நதிகளில் கலப்பதை கண்டிப்பாக தடை செய்யுங்கள் 2 அதேபோல் ஆலை கழிவுகள் தடை செய்யுங்கள் 3 நதிக்கரைகளில் சோப்பு போட்டு குளிப்பதையும், துணிதுவைப்பதையும் தடை செய்யுங்கள் 4 ரசாயன விவசாயத்தை தடை செய்து பசு ஆதார விவசாயத்தை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இந்த 4 நான்கு விதி முறைகளை தீவிரமாக கடைபிடித்தாலே நமது நாட்டு நதிகள் தேவாம்ருதம் ஆகிவிடும்.
பவானி நதி மட்டுமில்லை. தமிழ் நாட்டில் இன்று ஓடிக்கொண்டிருக்கும் அனைத்து நதிகளும் அந்த நிலைக்கு மாறி அரை நூற்றாண்டு ஆகி விட்டது. அறுபதுகளில் காவிரியில் இருந்து நேரடியாக குடிக்க நீர் எடுப்போம். இன்று குளிக்கவே யோசனை செய்ய வேண்டும். நீர் நிறம் மாறி இருக்கும். தமிழ் நாட்டில் நீர் நிலை பாதுகாப்பு என்பது பூஜ்யம். அவர்களுக்கு நதிகள் என்பது கழிவுகளை கொட்டும் இடம். குளம், ஏரிகள் வீடு கட்ட பிளாட் போடும் இடம். நமது தர்ம சாஸ்திரம், நதியில் துணி துவக்கக் கூடாது, இயற்கை அழைப்புகளை செய்யக்கூடாது, என்று ஒரு பெரிய பட்டியலையே கொடுத்திருக்கிறது. இன்று எவரும் அவைகளை கடை பிடிப்பதில்லை. சரி. இவர்கள் கொட்டும் குப்பைகளாவது அடித்துச் சென்று கடலில் கலக்கிறதா என்றால் அதுவும் இல்லை. அளவுக்கு மீறிய மணல் எடுத்ததால் நாணலும் காட்டாமணக்கும் புதராக வளர்ந்து நதி சிற்றொடையாக அவைகளுக்கு இடையில் ஓடுகிறது. கொட்டும் குப்பைகள் புதர்களில் தடுக்கப் படுகிறது. இன்று கடுமையாக திட்டங்கள் தீட்டினால் நாம் மீண்டும் நதிகளை ஐம்பது வருடங்களில் மீட்கலாம்.
நமது முன்னோர்கள் - நதிகளையும் - நீர் நிலைகளையும் கடவுளாக கருதி கும்பிட்டனர். நமது முன்னோர்கள் படித்தவர்கள் அல்ல - ஆனால் நன்கு கற்றவர்கள். இந்தக்காலத்தில் படிப்பு என்ற பெயரில் - நம்மை கல்வி கற்கவிடாமல் செய்துவிட்டார்கள். மாணவர்களின் கல்வி திட்டத்தில் யோகா, பிராணாயாமம், சூரியநமஸ்காரம், த்யானம், தமிழர்களின் இயற்கை சித்த வைத்தியம், தமிழர்களின் இயற்கை விவசாயம் - போன்ற விஷயங்களை கட்டாய பாடமாக்க வேண்டும்.