உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாழ்ப்பாணம் மையத்திற்கு வள்ளுவர் பெயர்: கவர்னர் நெகிழ்ச்சி

யாழ்ப்பாணம் மையத்திற்கு வள்ளுவர் பெயர்: கவர்னர் நெகிழ்ச்சி

சென்னை: 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் பெருமையை பரப்பும் பிரதமரின் பணியில் மற்றொரு மைல்கல்' என, கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, இந்தியாவின் உதவியுடன், யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாசார மையம் கட்டப்பட்டது. இதற்கு, 'திருவள்ளுவர் கலாசார மையம்' என மறு பெயரிட்டிருப்பது, உலகம் முழுதும் பழம்பெரும் வாழும் மொழி மற்றும் கலாசாரமான, தமிழின் பெருமையை பரப்புவதற்கான, பிரதமரின் தொடர்ச்சியான பணியில் மற்றொரு மைல் கல்லாகும்.இது, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான கலாசாரம் மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mohan Loganathan
ஜன 20, 2025 09:43

வள்ளுவர் பெயர் வைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவிக்கம் ஆளுநர் வள்ளுவர் கூறியபடி ஆட்சி நடத்துகிறாரா குறைந்த பட்சம் அவர் சொன்னபடி வாழ்கிறாரா


raja
ஜன 20, 2025 03:09

ஆனால் பார் தமிழா இங்கோ ஊழலின் விங்யானி கட்டுமரத்தின் பெயர் அனைத்திற்கும்...கேவலம்..


முக்கிய வீடியோ