உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட முதல்வர் ஸ்டாலின்!

கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்ட முதல்வர் ஸ்டாலின்!

தஞ்சை: காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் நீர் திறந்து வைத்தார்.மேட்டூர் அணையில் இருந்து காவிரியாற்றில் 2 நாட்கள் முன்பு முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். அந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக கல்லணை வந்து சேர்ந்தது. இந் நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின் சாலை மார்க்கமாக கல்லணை சென்றார். சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் அவர் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை திறந்து வைத்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை சென்றார். பின்னர் சுற்றுலா மாளிகையில் இருந்து 2 கி.மீ., தூரம் சாலை வழியாக மக்களை சந்தித்தபடியே நடந்து சென்றார். அங்கு மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஜூன் 16, 2025 11:59

முதலில் மேட்டூரில் தண்ணீர் திறப்பு ,பிறகு கல்லணையில் தேனீர் திறப்பு , கொஞ்சநாளில் கிளை ஆறுகள் , வாய்க்கால்கள் போற்றவற்றில் தண்ணீர் திறந்து விடுவார் ...முதல்வரின் போட்டோ சூட் மோகம் இன்னும் குறையவில்லை


சி ரதி
ஜூன் 15, 2025 21:08

தட்டை தூக்கி எறியவில்லையா?


Oviya Vijay
ஜூன் 15, 2025 20:44

விடியல் சொம்பு ஒருவரும் இங்கு கருத்து கூற வர மாட்டார்கள்...


Ramesh Sargam
ஜூன் 15, 2025 19:48

எப்படி மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக அரசின் ஸ்டிக்கர் ஒட்டி பெருமை தேடிக்கொள்வாரோ, அதுபோல வருண பகவான் கொடுத்த மழைக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெருமை தேடிக்கொள்கிறார். வித்தியாசம் அவ்வளவுதான்.


sundarsvpr
ஜூன் 15, 2025 19:31

நீரை கொடுப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அல்ல. இறைவன் நீரை மழையாய் பொழிகிறான். இதுதான் திறப்புவிழா. ஸ்டாலின் அவர்கள் நிச்யம் வானில் உள்ள தெய்வத்தை மனப்பூர்வமாய் வணங்கியிருப்பார். இதனை ஊடக பத்திரிகைகள் கூறஇயலாது. தமிழ்நாட்டு தலைமை அமைச்சர் செய்தது நல்ல பணி பாராட்டவேண்டும். ..


புதிய வீடியோ