உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிட்னி முறைகேடு வழக்கு; தமிழக அரசு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு

கிட்னி முறைகேடு வழக்கு; தமிழக அரசு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கிட்னி முறைகேடு தொடர்பான வழக்கில், தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து, சட்டவிரோதமாக சிறுநீரகத்தை தானம் பெற்றனர். திருச்சி, பெரம்பலுாரில் இரு தனியார் மருத்துவமனைகள் இதில் ஈடுபட்டன. ஆளுங்கட்சி பிரமுகருக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால், தமிழக அரசு முறையாக விசாரிக்க வாய்ப்பில்லை. வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7cosptc7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ''கிட்னி விற்பனை முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசு வாதம்

இந்த வழக்கு இன்று (அக் 10) சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சரியா அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ''சிறப்பு புலனாய்வுக்குழுவை எதிர்க்கவில்லை, அதிகாரி நியமனத்தை மட்டுமே எதிர்க்கிறோம். நாங்கள் தரும் அதிகாரிகள் பட்டியலில் தகுதியானவர்களை நீதிமன்றம் நியமிக்க வேண்டும்'' என கோரிக்கை வைக்கப்பட்டது.

நிராகரிப்பு

இந்த வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை சுப்ரீம்கோர்ட் நிராகரித்தது. கிட்னி முறைகேடு குறித்து சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்த ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை என சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் கூறி வழக்கு விசாரணையை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

மணிமுருகன்
அக் 10, 2025 23:42

அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுகா கூட்டணியில் யாராவது ஒருத்தர் ஒழுங்கானவனா மக்களுக்கு ஏற்படும் சீர்கேடுகளை அவரடகள் உயிரிக்கு உத்தரவாதத்தை கொடுக்க விசாரணை அமைப்பதில் கூட எதிர்ப்பா எதற்கு ஆட்சிக்கு வந்தார்கள் குடுமப சொத்து சேர்த்து அதை பாதுகாக்க மட்டும் தான் மக்களே இனி இந்தக் கூட்டத்திற்கு ஓட்டு போடாதீர்கள்


sankaranarayanan
அக் 10, 2025 21:06

தமிழகத்தில் திராவிட மாடல் அரசின்போது ஆட்டை கடிச்சு மாட்டை கடிச்சு கடைசியாக மனிதனின் கிட்னியை கடிக்கும்படி இந்த ஆட்சியில் விட்டது இனி என்னதான் பாக்கி இருக்கிறது மக்களிடம் இந்த ஆட்சியில் கடிக்க


Modisha
அக் 10, 2025 19:10

…… தான் வராரு , கிட்னி திருட போறாரு ….. 2026 தேர்தலுக்கு பிரச்சார பாட்டு .


Modisha
அக் 10, 2025 18:46

வீணாப்போன ஆசிர்வாதம் தலைமையில் விசாரிக்க நினைத்த திமுக அரசு ஆசையில் மண் .


rama adhavan
அக் 10, 2025 17:56

கிட்னி சட்னி ஆனாலும் பரவாயில்லை அவர்களுக்கே நடக்க முடியவில்லை என்றாலும் அவர்களுக்கே ஓட்டு என்று தமிழன் 58 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்து விட்டான். இனி இருதயம் போனாலும் ஓட்டு அங்கேதான்.


Field Marshal
அக் 10, 2025 17:44

கிட்னி முறைகேடு வழக்கு ..திருட்டா ? முறைகேடா ? கொலை மற்றும் கர்பழுப்புக்கு என்ன வார்த்தை வெச்சுருக்கேள் ?


Sivaram
அக் 10, 2025 16:58

2021 தேர்தல் பிரசாரம் "" ஸ்டாலின் தான் வாராரு விடியல் தர போறாரு "" உடன்பிறப்பே தமிழனே விழித்து எழு அடங்க மறு அத்து மீறு உங்களில் ஒருவன் நான் என்னால்தான் இந்தியாவே வளருகிறது வாழ்க விடியல் வளர்க குடும்பம் இப்படிக்கு என்றென்றும் உங்கள் கொத்தடிமைகள்


என்றும் இந்தியன்
அக் 10, 2025 16:37

கிட்னி விற்பனை முறைகேடு???அப்போ கிட்னி விற்பனை முறையாகக்கூட நடக்குமா என்ன??? இந்த வழக்கு இன்னும் 6 மாதம் நடந்தால் திமுகவிலிருந்து பலர் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும், ஏன்னா அப்போ ஆளும்கட்சியிலிருந்து எதிரிகட்சியாக மாறிவிடும் திருட்டு திராவிட அறிவிலி சங்கம்


சாமானியன்
அக் 10, 2025 15:26

ஒவ்வொரு சின்னபிரச்னைக்கும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று அலைகிறார்கள். தற்போது விசாரணை அதிகாரியையே மாற்ற மனு. தங்கள் கட்சி காரர்களை காப்பாற்ற எந்த லெவலுக்கும் போவார்கள் திமுக ஸ்டாலின். மக்கள் வெறுத்து போய் உள்ளனர்.


ஆரூர் ரங்
அக் 10, 2025 15:01

இனிமே மாடல் கட்சிகார இடங்களுக்கு (ஆஸ்பத்திரிக்கு) சென்று வர நேர்ந்தால் வேறு இடத்தில் FULL SCAN எடுத்து செக் செய்து கொள்ளவும். உஷாராக விழித்துக் கொண்டிருக்கும் போதே உள்ளேயிருப்பதை லவ்ட்டி விடுவார்கள். பிறவி கிராதகர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை