உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுபான ஆலைகள் எதிர்ப்பை மீறி கணினிமயம்; முறைகேடுகளை தடுக்க அறிமுகமாகிறது

மதுபான ஆலைகள் எதிர்ப்பை மீறி கணினிமயம்; முறைகேடுகளை தடுக்க அறிமுகமாகிறது

சென்னை : மதுபான ஆலை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் எதிர்ப்பை மீறி, ஆலை முதல் கடை வரை, மது வகை விற்பனையை எங்கிருந்தபடியும் கணினியில் கண்காணிக்கும் திட்டத்தை, காஞ்சிபுரம், ராமநாதபுரம் உட்பட, 12 மாவட்ட மதுக் கடைகளில், 'டாஸ்மாக்' நிறுவனம் செயல்படுத்தியுள்ளது.டாஸ்மாக் நிறுவனம், 4,830 கடைகள் வாயிலாக பீர் மற்றும் மதுபானங்களை விற்கிறது. 11 நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளையும், ஏழு நிறுவனங்களிடம் இருந்து, பீர் வகைகளையும் கொள்முதல் செய்கிறது. ஆலைகளில் இருந்து மதுபான வகைகள், டாஸ்மாக் கிடங்கிற்கு லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன; அங்கிருந்து, மதுக் கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன. கடைகளில் மது வகை இருப்பு, தேவைப்படும் மது வகை உள்ளிட்ட விபரங்களை மேற்பார்வையாளர்கள், மேலாளர்களுக்கு தெரிவிக்கின்றனர். அதற்கு ஏற்ப, மது வகைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகளுக்கு முன்னுரிமை அளிப்பது, அரசு நிர்ணயம் செய்திருக்கும் விலையை விட கூடுதலாக விற்பது உள்ளிட்ட முறைகேடுகள் நடக்கின்றன. இவற்றை தடுக்க, கிடங்குகளில் இருந்து, 'குடி'மகன்களுக்கு விற்பது வரை கணினிமயமாக்க, துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார். அதன்படி, இதற்கான பணி ஆணை, மத்திய அரசின் 'ரெயில்டெல்' நிறுவனத்திடம் டாஸ்மாக் நிர்வாகம் வழங்கியது; திட்டச்செலவு 294 கோடி ரூபாய். இந்நிறுவனம், கணினிமய கண்காணிப்பு மென்பொருள் உருவாக்கம், அனைத்து கடைகளுக்கும் கையடக்க 'ஸ்கேனர், பிரின்டர்' கருவிகள் வழங்கி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பு பணிகளை பராமரிக்க வேண்டும். இது தவிர, ஆலையில் மதுபான பாட்டில், 'கன்வேயரில்' செல்லும் இடத்தின் மேல், ஸ்கேன் செய்யும் இயந்திரம் அடங்கிய கட்டமைப்பை, மதுபான நிறுவனங்கள் சொந்த செலவில் ஏற்படுத்த வேண்டும். இதற்கு, ஆலைகள் எதிர்ப்பு தெரிவித்தன. எனவே, 'கணினிமய வசதியை ஏற்படுத்தவில்லை எனில், மது கொள்முதல் நிறுத்தப்படும்' என, டாஸ்மாக் எச்சரித்தது. இதையடுத்து, கணினிமய கட்டமைப்பை ஏற்படுத்தின. இதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக அரக்கோணம், ராமநாதபுரம் மாவட்ட மதுக் கடைகளில் கையடக்க வடிவில், 'பார்கோடு ரீடர்' கருவிகளும், பிரின்டர் கருவிகளும் வழங்கப்பட்டன. கருவியில் மது பாட்டில் மேல் உள்ள க்யூ.ஆர்., குறியீடை 'ஸ்கேன்' செய்ததும், பாட்டில் வகை, விலை, விற்பனை நேரம் உள்ளிட்ட விபரங்கள் பதிவாகின்றன. அதிலிருந்து பிரின்ட் கொடுத்ததும் வரும் ரசீது, 'குடி'மகன்களிடம் வழங்கப்படுகிறது.இதன் வாயிலாக, கடையில் மது விற்பனை விபரங்களை, கணினியில் அதிகாரிகள் எங்கிருந்தபடியும் அறிய முடிகிறது. தற்போது, காஞ்சிபுரம் தெற்கு மற்றும் வடக்கு, திருவள்ளூர் மேற்கு, திருப்பூர், திருச்சி, சிவகங்கை, கரூர், விருதுநகர், திருநெல்வேலி, புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்ட மதுக் கடைகளில் கணினிமய திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

'விற்பனை விபரத்தை துல்லியமாக அறியலாம்'

இது குறித்து, மது விலக்கு ஆயத்தீர்வை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு பெட்டியில் உள்ள பாட்டில்களில், 9 லிட்டருக்கு மது வகைகள் இருக்கும். அதில், இ.என்.ஏ., அதாவது, 'எக்ஸ்ட்ரா நியூட்ரல் ஆல்கஹால்' அளவு, 4 லிட்டர் இருக்க வேண்டும். கணினிமய திட்டத்தால், ஆலைகளில் இருந்து மது பெட்டிகளை லாரிகளில் ஏற்றும் போதே, அதன் மேல் உள்ள, 'பார் கோடை ஸ்கேன்' செய்வதால், இ.என்.ஏ., அளவு உள்ளிட்ட விபரங்களை அறிய முடிகிறது.ஆலையில் மது பாட்டில் மேல், 'ஹாலோகிராம் ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது. எத்தனை பாட்டில் மது வாங்கப்படுகிறதோ, அதனுடன் சேர்த்து கூடுதலாக, 0.15 சதவீத அளவு ஸ்டிக்கர் வழங்கப்படும். தற்போது, கணினிமய திட்டத்தால், எத்தனை ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்பட்டன; பயன்படுத்தப்படாதவை எவை என்ற விபரங்களை அறிய முடிகிறது. மதுக் கடைகளில் நடக்கும் விற்பனை விபரத்தை துல்லியமாக அறிய முடிகிறது. இரவில் கடை மூடிய பின் விற்பனை கணக்கை சரிபார்க்க, ஊழியர்களுக்கு இரண்டு மணி நேரமாகும். இந்த பணி தற்போது 10 நிமிடங்களில் நடக்கிறது. இம்மாத இறுதிக்குள் மற்ற அனைத்து மாவட்டங்களிலும், அத்திட்ட பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

suruthika kamal
ஜன 10, 2025 21:51

அரசு மதுபானக் கடைகள் அதை சரி வர பயன் படுத்துவது இல்லை . மது பிரியர்கள் தற்போது வரை பல இன்னல்கள் சந்தித்து தான் வருகிறார்கள். டாஸ்மாக் கடை ஊழியர்கள் அந்த பகுதி காவல் துறை மற்றும் ரவுடிகளுக்கு கமிஷன் கொடுத்து தங்களை பாதுகாத்துக் கொள்கின்றனர். இதனால் மது பிரியர்களுக்கு தான் இழப்பு. அரசு, சட்ட மன்றத்தில் சொல்வது போல் நடை முறையில் இல்லை. எப்படி நடத்துவது என்று அண்டை மாநிலமான ஆந்திராவை பார்த்து கற்றுக் கொள்ளலாம்


Karthik
ஜன 10, 2025 14:20

ஒரு சின்ன திருத்தம்.. நாம் நினைப்பது போல், பின்னாளில் தீர்வை அவர்கள் தேடப்போவதில்லை. கண்கட்டு வித்தைக்கான தீர்வை அமைச்சர் கண்டுபிடுத்த பின்னரே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அந்த தீர்வை நாம் கண்டுபிடிக்கத்தான் பல ஆண்டுகள் தேவைப்படும். அந்த கொடுமையையும் பார்க்கத்தானே போறோம்.


Varadarajan Nagarajan
ஜன 10, 2025 11:54

எல்லா பொருட்களையும் பில் போட்டுட்டுதான் விற்பனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விற்பனைவரிச்சட்டம் கூறுகின்றது. டாஸ்மாக்கில் இது பின்பற்றப்படுகின்றதா? சாலையோர கரும்பு ஜுஸ் கடைமுதல் இளநீர் கடை உள்பட அனைத்திலும் பணம் செலுத்த இன்று பேடியம் முதல் ஜீபே வரை அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளில்மட்டும் முறைகேடு செய்ய வசதியாக இவற்றை வைக்கவில்லை. இப்பொழுது இவற்றை செய்தாலும் விஞ்ஞானபூர்வமாக அதையும்தாண்டி ஊழல்செய்ய விரைவில் தீர்வு கண்டுபிடித்துவிடுவார்கள் .


Sampath Kumar
ஜன 10, 2025 11:36

digitalaised kiquid போல AI வைத்து விற்பனை செய்வார்கள் போல பாவம் குடிமகன்கள்


visu
ஜன 10, 2025 10:40

இதெல்லாம் ஒரு பிரச்சினையா இதை ஏமாற்ற சில நாளில் ஒரு வழி கண்டு பிடிப்பார்கள் அரசு இதை நடத்தும் நிறுவனத்திடம் இதில் ஏற்படும் குளறுபடிகளை அவர்கள் பொறுப்பு என்றால் வேலை விரைந்து நடக்கும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 10, 2025 10:17

திருட்டடையும், கொள்ளையையும் தொழில் சுத்தமாகச் செய்யக் கூடியது திராவிட மாடலு ....


ராமகிருஷ்ணன்
ஜன 10, 2025 09:21

டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது அதிக வருமானத்தை வெவ்வேறு விதமான வழிகளில் சுருட்டி எடுத்துச் செல்வார்கள். நடப்பது விடியல் அரசு. கள்ளசாராயம் டாஸ்மாகில் விற்று காசு பார்க்கலாம். பார் வருமானம் கூட்ட பல வழிகளிலும் முயற்சி செய்வார்கள்


Minimole P C
ஜன 10, 2025 07:54

There is no transperency in this. All are monitered by corrupted official. They will see that there is always a scope for looting. This is something like online govt.services. Maximum you can file the application for some service and for the rest you have to meet the concered official in person and grease his/her palm. I used many different Govt. websites of various purposes, but TN Govt. websites wont work fully as specified. Best websites of Govts. are GOI, Karnataka, even Kerala.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 10, 2025 07:06

ரேஷன் கடையில் இன்றும் பில் போட முடியவில்லை, பொருட்களை பாக்கெட் மூலம் விநியோகம் செய்ய முடியவில்லை.


Bye Pass
ஜன 10, 2025 06:14

கொத்தமல்லி கட்டு முதல் தங்கக்கட்டி வரை ஆன்லைன் நிறுவனங்களும் மால்களும் விற்பனை செய்யும்போது அரசாங்கம் மதுக்கடை பார்கள் நடத்தவேண்டியாக வேண்டுமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை