உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "ஊழலை பற்றி பேச திமுக.,வுக்கு தகுதியில்லை": எல்.முருகன் சாடல்

"ஊழலை பற்றி பேச திமுக.,வுக்கு தகுதியில்லை": எல்.முருகன் சாடல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: 'ஊழல் குறித்து பேசுவதற்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் தகுதியற்றவர்கள்' என கோவையில் நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.இது குறித்து எல்.முருகன் கூறியிருப்பதாவது: பிரதமரின் தமிழக வருகை பா.ஜ.,வை வலுப்படுத்துவதோடு, பொது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும் தேசத்திற்கு எதிரானவர்கள். தேசிய வளங்களை கொள்ளை அடித்து ஊழல் செய்யும் கட்சிகள். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் மிகப்பெரும் ஊழலை தி.மு.க.,வின் ஆ.ராசா செய்துள்ளார். இந்த வழக்கில் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த நல்லாட்சியை பிரதமர் வழங்கி வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dtztlsv4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது தான் பிரதமரின் ஒரே எண்ணமாக இருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பா.ஜ.,வுக்கு தமிழகத்தில் ஆதரவு இருப்பதை காண முடிகிறது. தி.மு.க., அவர்களின் அமைப்புகளை ஏவி விட்டு தான் தேர்தல் பத்திரங்களை பெற்றனரா?. ஊழல் குறித்து பேசுவதற்கு தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் தகுதியற்றவர்கள். நீலகிரி தொகுதியில் அதிகமான வேலைகளை செய்திருக்கிறோம். லோக்சபா தேர்தலில் அந்த தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை கூறினால் அதன்படி செயல்படுவேன். கோவை பா.ஜ.,வின் கோட்டையாக உள்ளது. லோக்சபா தேர்தலில் பா.ஜ., கோவையில் போட்டியிடுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

DARMHAR/ D.M.Reddy
மார் 19, 2024 03:16

மறந்து போச்சா? மறைந்த மஞ்சள் துண்டுகாரர் கருணாநிதியார் என்ன சொன்னார் என்று? கொடுப்பதை கொடுத்து வாங்க வேண்டியதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று . அப்படி அவர் சொல்லி இருக்கும்போது எப்படி ஊழலை தடுக்க முடியம் ? தகப்பன் சொன்னபடி தட்டாமல் செய்வைது தான் தனயது கடமை.


Ramesh Sargam
மார் 18, 2024 22:26

ஊழலை பற்றி பேச திமுக.,வுக்கு தகுதி அதிகம் இருக்கிறது. ஆமாம், ஊழல் செய்வதில் மாமன்னர்கள் இந்த திமுகவினர். அவர்களுக்குத்தான் ஊழலைப்பற்றி நன்றாக தெரியும். அவர்கள்தான் ஊழலைப்பற்றி நன்றாக பேசுவார்கள்.


முருகன்
மார் 18, 2024 22:07

உன்மை தான் ஊழல் செய்பவர்கள் பலர் உங்களுடன் கூட்டணியில் இருக்கும் போது அவர்கள் மனம் புன்படும் அல்லவா


T.sthivinayagam
மார் 18, 2024 21:27

தமிழக கட்சிகளுக்கு தகுதி இல்லை சரி பஜாகவின். தேர்தல் பத்திர ஊழலை பற்றி மக்கள் பேசலாமா


Sakthi Parthasarathy
மார் 18, 2024 20:42

நீங்க செஞ்சது தப்பா, சரியா அத சொல்லுங்க ..உங்களை குறை சொன்னா அவர் சரியில்லை இவர் சரியில்லை , நேரு சரியில்லை, காந்தி சரியில்லை என பிதற்றுவது பிஜேபிக்கு வழக்கமா இருக்கு


M Ramachandran
மார் 18, 2024 20:30

தீ மு க்கா. அவர்கள் அறிந்த ஒன்றை பற்றி தானெ அவர்கள் பேசமுடியும்


நல்லவன்
மார் 18, 2024 18:52

""ஊழலை பற்றி பேச திமுக.,வுக்கு தகுதியில்லை": எல்.முருகன் சாடல்..." உங்களுக்கு (பி.ஜே.பி ) மட்டுமே சொந்தமானதை பற்றி தி.மு.க பேசியது குற்றமே.


K.n. Dhasarathan
மார் 18, 2024 18:02

ஊழலை பற்றி பேச பொய் ஜே பி இங்கு மிகவும் தகுதி இருக்கு, எம் பி கலில் பாதி பேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கி உள்ளார்கள் , இன்னும் பல கிரிமினல்கள் வந்து அடைக்கலம் ஆக போகிறார்கள், இந்த கிரிமினல்கள் கட்சி ஊழலை பற்றி பேசலாமா? ஐயா முருகன் அவர்களே ? 2 G வழக்கில் தி மு க வென்று இப்போது நீதிமன்றத்தில் ஆப்பிலிள் உள்ளது தெரியுமா அல்லது தெரியாதா ? இன்னும் ஒரு தடவை சொன்னால் நீதிமன்ற அவமதிப்பு உள்ளாவீர்கள் , அடுத்து நீலகிரி தொகுதியில் நீங்கள் செய்த தகிடு தத்தம் வேலை எல்லாம் இனி செல்லாது, கண்டிப்பாக டிபாசிட் போகும், தைரியம் இருந்தால் நின்று பார்க்கவும்.


ramesh
மார் 18, 2024 17:46

.தேர்தல் பத்திரம் மூலம் வாங்கினால் அது அங்கீகரிக்க பட்ட லஞ்சம் தான்


Sakthi Parthasarathy
மார் 18, 2024 21:02

நிதி வாங்கியது அதுவும் தேசப்பற்றில் முன்னோடிகள் பாகிஸ்தான் நிறுவனத்திடம் பெற்று கொண்டது எந்த தேச பக்தியோ. நிதி கொடுத்த நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் வழங்கியது மிகப்பெரும் தவறு. அமலாக்கத்துறை பிடித்தவற்றை அரசு கஜானாவில் சேர்க்காமல் தேர்தல் நிதியாக பெற்று கொண்டது கொள்ளை அடிப்பதற்கு சமம் ..அதீத பெரும்பான்மை, அதிகார துஷ்பிரயோகம் ..திவர்கள் காலத்தில் செய்யப்படும் வாக்கு இயந்திரங்கள் என்ன நம்பகத்தன்மை கொள்வது


Raj Kamal
மார் 18, 2024 17:35

மொதல்ல உங்க முதுகை பாருங்க. சுப்ரீம் கோர்ட்டில் உங்க வண்டவாளமெல்லாம் தண்டவாளமேறிக்கொண்டிருக்கிருக்கின்றது. ஒண்ணுமே தெரியாத மாதிரி என்ன நடிப்புடா சாமீ?


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி