உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் பா.ஜ., 25 தொகுதி இலக்கு: ம.பி., முன்னாள் முதல்வர்

தமிழகத்தில் பா.ஜ., 25 தொகுதி இலக்கு: ம.பி., முன்னாள் முதல்வர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை : 'லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ., 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவதை இலக்காக வைத்து செயல்படுகிறது'' என மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் இந்திய அளவில் 400 தொகுதிகளுக்கு மேலும், தமிழகத்தில் 25 தொகுதிகளுக்கு மேலும் பா.ஜ., தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். அதற்கேற்ப 5515 ஓட்டுச்சாவடிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை தொகுதியின் எம்.பி.,யான வெங்கடேசன் செயல்பாடுள்ளவராகவோ, திறமையானவராகவோ இல்லை.பிரதமர் மோடி தமிழ், தமிழ் கலாசாரம், பண்பாட்டுக்கான முக்கியத்துவத்தை அளித்து வருகிறார். ஐ.நா., சபையில் தமிழின் முக்கியத்துவம் குறித்து பேசுகிறார். பார்லிமென்டில் தமிழகத்தின் செங்கோலை நிறுவியது, ஜி 20 மாநாட்டில் தமிழக கலாசாரத்திற்கான முக்கியத்துவம் கொடுத்தது என செயல்படுகிறார். எனவே இங்குள்ளோரைவிட நாங்களே தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் பற்றுள்ளவர்களாக இருக்கிறோம்.தமிழகத்திற்கு மத்திய அரசு எதுவுமே கொடுக்கவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்திற்கென ரூ.2.47 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மத்தியில் ஐக்கிய முன்னணி ஆட்சி நடந்தபோது ரூ.95 ஆயிரம் கோடிதான் வழங்கினர். பா.ஜ., ஆட்சியில்தான் தமிழகத்தில் 62 லட்சம் வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 56 லட்சம் விவசாயிகளுக்கு நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளை பா.ஜ., ஒரே துாரத்தில் வைத்துப் பார்த்தே செயல்படுகிறது. இண்டியா கூட்டணியில் பெரிய ஊழல் கட்சி தி.மு.க.,தான். அக்கட்சியின் அமைச்சர்களில் ஒருவர் ஜெயிலில் உள்ளார். மற்றொருவர் பெயிலில் உள்ளார். இவர்களைப் போலவே அனைவரும் ஊழல் செய்தவர்களாகவே உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியை பொறுத்தவரை அது எந்த மாநிலத்திலும், இந்தியாவிலும், ஏன் உலகத்திலுமே இல்லை. எனவே அவர்களைப் பற்றி பேச ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

பச்சையப்பன் இன்பாண்ணா பாச அறை, கோபால் புரம்
ஜன 25, 2024 15:47

என்ன?? 25 தொகுதியா!? இதை உங்க ஊர்லேயே தூங்கும் போது இந்த கனவை கண்டிருக்கலாமே???


s k suresh babu
ஜன 25, 2024 13:25

JAI SHREE RAM JAIHIND


திகழ்ஓவியன்
ஜன 25, 2024 13:15

சாரி 539 தொகுதி என்று சொல்லுங்கள்.


sahayadhas
ஜன 25, 2024 11:05

EVM சற்று திருக்கினால் 40ம் எடுக்கலாமே..


MANI DELHI
ஜன 25, 2024 12:07

கர்நாடகத்திலும், தெலுங்கானாவில் அப்படி தான் திருகினீர்களோ?


Sridhar
ஜன 25, 2024 12:54

எப்படி "திருக்குவது" ன்னு சோனியா கிட்ட கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன். பிஜேபிக்கு இப்போ தேவையில்லேன்னாலும் பத்து பதினைஞ்சு வருசதுக்கப்புறம் வேண்டியிருந்தா யூஸ் பண்ணிக்கலாம்.


Ramesh
ஜன 25, 2024 10:09

As per latest surveys, around 10 to 15 MPs are possible for BJP, if they have the alliance with PMK, DMDK, OPS, AMMK (TTV) and small parties... Most of the places, ADMK alone (if they don't get any alliance) will be in third place only... In 2026, BJP will be the single largest party in terms of vote percentages...


Kadaparai Mani
ஜன 25, 2024 13:25

Tamil nadu BJP can win elections only in Internet, social media and war room comments set up by one top BJP functionary in Tamil Nadu. AIADMK is more powerful than DMK in terms of vote bank and cadre strength. In villages aiadmk still extreme support and two leaves symbol is powerful in semi urban and rural areas. On the alliance front all erstwhile partners are going to team up with AIADMK led alliance.


T.S.Murali
ஜன 25, 2024 17:19

தமிழகத்தின் எல்லா இடங்களிலும் நோட்டாவை விட அதிகமாக வோட்டு வாங்க வேண்டும் என்கிறார் . பிஜேபி எல்லாம் இரண்டாவது இடம் சான்ஸ் இல்லை . மும்முனை DMK, ADMK BJP என்றால் பிஜேபி கடைசி இடம் தான் அல்லது நோட்டாவிற்கு பின் தான். அதிமுக பிஜேபி உடன் கூட்டணி இல்லாமல் இருப்பது நல்லது. பிஜேபியினால் அதிமுக வுக்கு லாபம் இல்லை. திமுக முதுகில் ஏறி சவாரி செய்யும் காங்கிரஸ் போல்தான் பிஜேபியும் அதிமுகவுக்கு


hari
ஜன 25, 2024 09:43

முதல் பிரியாணி அல்லக்கை வந்தாச்சு


தத்வமசி
ஜன 25, 2024 11:39

உனக்கு, குவாட்டர், பிரியாணி, குத்து டான்ஸ் என்று தான் பழக்கம். அதனால் தான் திருட்டு திராவிடம் உன்னை அப்படியே நடத்துகிறது.


venugopal s
ஜன 25, 2024 07:53

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு இருபத்தைந்து தொகுதிகளில் வெற்றி கிடைக்குமா? இதை பாஜகவினரே யாரும் நம்ப மாட்டார்கள்! அந்த அயோத்தி ராமரே நினைத்தாலும் அது நடக்காது!


கலிவரதன்,திருச்சி
ஜன 25, 2024 10:08

வேணு இதையேதான் கடந்த ஐந்து மாநில தேர்தலிலும் பாஜக மண்ணை கவ்வும்னு சொன்ன பாஜக மூன்றில் அமோக வெற்றி. இப்ப அதே டயலாக்கை திரும்ப சொல்ற..


Mani . V
ஜன 25, 2024 06:23

வடிவேல் காமெடி ஒன்று. "ஆமா, நான் உனக்கு எவ்வளவு தரணும்? 2.50. ஆமா, நான் உனக்கு எவ்வளவு தரணும்? 2.50. ஆமா, நான் உனக்கு எவ்வளவு தரணும்? 2.50. ஆமா, நான் உனக்கு எவ்வளவு தரணும்? 2.50. ஆக மொத்தம் பத்து. ஆமா, நான் உனக்கு எவ்வளவு தரணும்? 2.50. ஆமா, நான் உனக்கு எவ்வளவு தரணும்? 2.50. ஆமா, நான் உனக்கு எவ்வளவு தரணும்? 2.50. ஆமா, நான் உனக்கு எவ்வளவு தரணும்? 2.50. மொதல்ல பத்து, இப்பப் பத்து. ஆக மொத்தம் இருபது. என்பதுபோல், பாஜக 25, திமுக 40, அதிமுக 30, மநீம 40, காங்கிரஸ் 10, மற்றவை 20. ஆக மொத்தம் 165.


செல்வேந்திரன்,அரியலூர்
ஜன 25, 2024 10:11

மணி இதெல்லாம் ஒரு காமெடியா? கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாத வண்டான் சிங்கப்பூர்லருந்து.


தத்வமசி
ஜன 25, 2024 11:42

மணியை போன்ற அல்லக்கைகள் அறிவிலிகள் இருப்பதால் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த கட்சி, இப்போது தனது தந்தை பெயரில் விளையாட்டு மைதானம் அமைத்துள்ளது. என்ன நடக்கிறது தமிழகத்தில் என்பது கூட தெரியாமல் முரட்டு முட்டு கொடுப்பது நியாமில்லை. இப்போது தான் சேலத்தில் நடந்த மாநாட்டுக்கு சென்று வந்தார் போல.


Kasimani Baskaran
ஜன 25, 2024 06:05

கூடுகிற கூட்டம் ஓட்டாக மாறினால் கண்டிப்பாக பல தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. த்தீம்காவை டிஸ்மிஸ் செய்யாமல் வைத்து இருப்பது முக்கியம். அது அடுத்த சட்டசபை தேர்தலில் உதவும்.


kumar c
ஜன 25, 2024 11:00

அது மட்டுமல்ல உதயநிதி நிறைய பேசணும். அது கூட்டம் கூட்டமா ஒட்ட மாத்தும் உதயா முதல்வர் ஆகவேண்டும் அது அண்ணாமலை முதல்வராக மிகப்பெரிய அடித்தளத்தை உருவாக்கும்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி