உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரை திமுக புள்ளியின் கமிஷன் பகீர்: அம்பலப்படுத்திய அண்ணாமலை

மதுரை திமுக புள்ளியின் கமிஷன் பகீர்: அம்பலப்படுத்திய அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தென்மாவட்ட தேவையை பூர்த்தி செய்ய ரயிலில் வந்திறங்கிய யூரியா மூட்டைகளை வைத்து கமிஷன் அடிக்க திமுக புள்ளி செய்த அதிர்ச்சி வேலையை இப்போது தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை அம்பலப்படுத்தி உள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, 1,350 டன் யூரியா, குஜராத்திலிருந்து சரக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த யூரியா, மதுரை கூடல்புதூர் பகுதியில் உள்ள குட்ஷெட்டிற்கு வந்தடைந்த நிலையில், திமுக வட்டச் செயலாளராக உள்ள செந்தில் என்பவர், லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் தடுத்து வைத்திருக்கிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=gz6ex7jg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாலை 6 மணிக்கு முன்பாக லோடு ஏற்றினால், ரூபாய் 100 கூலியும், 6 மணிக்கு மேல் லோடு ஏற்றினால், ரூபாய் 300 கூலியும் வழங்கப்பட வேண்டும். லோடுமேன் கூலியில் அதிகம் கமிஷன் வாங்குவதற்காக, இந்த திமுக வட்டச் செயலாளர் செந்தில், மாலை 4 மணிக்கே வந்த யூரியா மூட்டைகளை ஏற்ற விடாமல், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என அனைவரையும் அலைக்கழிக்கும் வகையில் ரவுடிகளை வைத்து, லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். இதனால், தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய 1350 டன் யூரியா மூட்டைகள் மதுரை குட்ஷெட்டில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, நாள்தோறும் 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. ஒருபுறம் தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு என்று, மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி நாடகமாடியிருக்கிறார். மற்றொரு புறம், மதுரையை வந்தடைந்த யூரியா மூட்டைகளை, தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல விடாமல், அவரது கட்சிக்காரர் தடங்கல் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இதனால் பாதிக்கப்படுவது, தென்மாவட்ட விவசாயிகளே. உடனடியாக, யூரியா மூட்டைகளை தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்குத் தொடர்ந்து இடைஞ்சலாக நடந்து கொள்ளும் தனது கட்சியினரை, முதல்வர் ஸ்டாலின், எச்சரித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

ராமகிருஷ்ணன்
செப் 20, 2025 06:06

எங்கெல்லாம் சுருட்ட வழிகள் உள்ளன என்று திமுகவினருக்கு மட்டும் தெரியும். ஏனெனில் பரம்பரை பரம்பரையாக திருடியே தின்பவர்கள் திமுகவின்ர்தான் நல்ல விதமாக வேலை பார்த்து சம்பாத்தியம் செய்த காசில் சாப்பிட்டால் திமுகவினருக்கு உணவு ஜீரணிக்காது. திருடி, சுருட்டி முழுங்கி னால் தான் அவர்களுக்கு உணவு ஜீரணமாகும்.


நிக்கோல்தாம்சன்
செப் 19, 2025 22:03

உங்க அப்பா பெரு என்ன என்றால் ஆளும்கட்சி அனுதாபிகள் என்ன என்று கூறுவார்கள் ? இன்று அண்ணாமலை அவர்கள் விவசாயிகளின் சார்பாக பேசியதற்கு அனுதாபிகள் பதிலே சாட்சி . யாருப்பா உங்கப்பா ?


திகழ்ஓவியன்
செப் 19, 2025 19:09

என் கருத்துக்கு நிறைய பேர் வந்து பதில் சொல்ல என்னுடைய FOLLOWER அதிகம் ஆகிய தினமலர் நன்றி


திகழ்ஓவியன்
செப் 19, 2025 19:06

அண்ணாமலை முன்ப எல்லாம் உமது கருத்து வந்தா அப்படியே கருத்து வந்து குவியும். ஆனால் இப்ப 29 தான் வந்திருக்கு , உங்க நிலை இது தான் உன் கட்சி காரன் கூட இனி உம்மை நம்ப மாட்டான்


N Sasikumar Yadhav
செப் 19, 2025 15:53

கோபாலபுர கொத்தடிமைகள் வாங்குகிற 200 ரூபாய்க்கு விசுவாசமாக அண்ணாமலையை திட்டுகிறார்கள் . திராவிட களவானிங்க ஆட்டய போடுவதில் மிகச்சரியாக கமிஷன் போய்விடுவதால் திமுக களவானிங்க செய்கிற அட்டூழியங்களை கண்டு கொள்வதில்லை


திகழ்ஓவியன்
செப் 19, 2025 20:16

பெரியவரே...அவர் வாங்கிய 80 கோடி SOURCE எங்கே என்று கேட்டு சொல்லுங்கள் அப்புறம் 200 பற்றி பேசலாம் , எல்லாம் நண்பர்கள் என்று சொல்லி மாதம் 10 லட்சம் என்று ஐந்து வருடம் 6 கோடி நண்பர்களிடம் லவட்டி இருக்கார் உங்கள் உத்தம சேயோன்...


கூத்தாடி வாக்கியம்
செப் 19, 2025 15:00

நெனச்சு பாக்கவே முடியாத எடத்துல ஒருத்தன் லஞ்சம் வங்கு ரன்னா இந்த திமுக புறம் போக்குகள் தான். முட்டால் மக்கள் மாறாதவரை எதுவும் சாதியம்மில்லை தலைவா


Barakat Ali
செப் 19, 2025 14:39

ஏதோ பால்பண்ணை வெச்சு பொழச்சு போறார்ன்னு பார்த்தா....


Priyan Vadanad
செப் 19, 2025 14:27

போகிற போக்கை பார்த்தால் மலையார் திமுக ரயிலில் துண்டு போடுகிறாரோ


Mettai* Tamil
செப் 19, 2025 14:44

ஊழல் நடந்ததா இல்லையா ??


V Venkatachalam
செப் 19, 2025 16:20

தீயமுக காரன்களுக்கு துண்டு மேல் எப்பவுமே ஒரு கண் உண்டு. அந்த துண்டுக்காக வேட்டியையே ஊட்டுடுவானுங்க. கடாடு மரம் கருணாதான் இதனை அறிமுகப்படுத்தியது. இரட்டை குழல் துப்பாக்கி மாதிரி எப்பவுமே இரண்டு வழி வஞ்சிக்கும். வேட்டிக்கு முன்னுரிமை. அது சரியா வராது ன்னா துண்டோட வெளியே வந்துடும். இது மாதிரி பண்ணி பண்ணி துண்டுக்கு மவுசு எகிறிப்போச்சு. அது என்னான்னு தெரியாமலேயே கட்டுமரம் ப்ளைன்ட் ஃபாலோயர்ஸ் ம் அதை பத்தி பேசுவாய்ங்க. கட்டு மரம் சரியான வில்லன். ப்ளைன்ட் ஃபாலோயர்ஸ் பாவம் சரியான இளிச்சவாயன்கள். ஆனாலும் துண்டை விட மாட்டானுங்க..


Priyan Vadanad
செப் 19, 2025 14:23

சிறுவர்கள் குளத்துக்குள் கூழாங்கற்களை வீசி விளையாடுவது போல இருக்கிறது.


Arunkumar,Ramnad
செப் 19, 2025 19:24

அப்பத்துக்கு மதம் மாறிய அறிவாலய கும்பல்களுக்கு எல்லாம் அண்ணாமலை பெயரைக் கேட்டாலே அல்லு விடுவது அவன்கள் போடும் கருத்துகளில் தெரிந்து கொள்ளலாம்.


Priyan Vadanad
செப் 19, 2025 14:14

செய்தியை படித்ததும் பக்கீர் பாக்கீர் பிக்கீரனு ஆகிவிட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை