உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் காப்பீட்டில் சேர மனநல காப்பகவாசிகளுக்கு ஆவணம் தேவையில்லை

முதல்வர் காப்பீட்டில் சேர மனநல காப்பகவாசிகளுக்கு ஆவணம் தேவையில்லை

சென்னை:ஆதார், அடையாள சான்று உட்பட எந்த ஆவணங்களும் இன்றி, மனநல காப்பகவாசிகளை, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் பிறப்பித்த அரசாணை: மத்திய அரசின் வரையறைப்படி, மனநல காப்பகங்கள், ஆதரவு இல்லங்களை உருவாக்கி முறையாக பராமரிக்க வேண்டிய பொறுப்பு, மாநில அரசுகளுக்கு உண்டு. அவ்வாறு அமைக்கப் பட்ட காப்பகங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப் படும். தமிழகத்தில், 54 அரசு மனநல காப்பகங்களும், 54 தன்னார்வ அமைப்பு மனநல காப்பகங்களும் செயல்படுகின்றன. அங்குள்ள காப்பகவாசிகளில் பெரும் பாலானோருக்கு அடையாள ஆவணங்களோ, ஆதார் அட்டைகளோ இல்லை. எனவே, முதல்வர் காப் பீட்டு திட்டத்தின் கீழ், எந்த ஆவணங்களும் இன்றி, அவர்களை சேர்க்க வேண் டும் என, தமிழக சுகாதார தி ட்ட இயக்குநர் பரிந்துரைத்தார். அதை கவனமாக பரிசீலித்த அரசு, அதற்கு அனுமதி அளித்திருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி