உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதுப்பித்த 103 ரயில் நிலையங்களை 22ல் திறக்கிறார் மோடி

புதுப்பித்த 103 ரயில் நிலையங்களை 22ல் திறக்கிறார் மோடி

சென்னை: 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக 22ம் தேதி திறந்து வைக்கிறார்.ரயில்வேயில், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை, 24,470 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் ஓராண்டாக நடந்து வருகின்றன. தெற்கு ரயில்வேயில், 40க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. நாடு முழுதும் பணிகள் நிறைவடைந்த 103 ரயில் நிலையங்களை, பிரதமர் மோடி டில்லியில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, 22ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.தெற்கு ரயில்வேயில், சென்னை பரங்கி மலை, சிதம்பரம், மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி, ஆந்திர மாநிலம் சூலுார்பேட்டை உட்பட 12க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள ரயில் நிலையங்களில், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடை, பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், 'சிசிடிவி' கேமரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

சண்முகம்
மே 21, 2025 03:56

வந்துட்டாரையா.....வந்துட்ட்ட்டாரையா. கொடி காண்பிக்க வந்துட்டாரையா....


venkatasubramanian
மே 20, 2025 15:30

முதலில் ரயிலில் பயணம் செய்யும் பொது மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். இதற்கென்று நல வாரியம் உள்ளது. உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ரயிலில் பிரயாணம் செய்ய மாட்டார்கள். எம் பி/ எம் எல் ஏ வேலைக்கு ஆக மாட்டார்கள். படித்து முடித்து வேலைக்காக இளைஞர்கள் இளைஞிகள் காத்திருக்கிறார்கள். ரயில் சர்வீஸ் ஐ அதிகப்படுத்தலாம். தமிழ்நாட்டில் அரசியல் பினாமிகள் நடத்தும் பஸ் சர்வீஸ்களை குறைக்கலாம். திட்டமிடுவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளன. இருந்தாலும் பத்தாண்டுகளில் ரயில்வே துறை செய்திருக்கிறார்கள், நமக்கு தான் போதவில்லை.


சுதர்சன்
மே 20, 2025 15:01

A/C coachல போனதாலும் ஸ்டேஷன் வந்தா நடந்து தான் போக வேண்டியிருக்கும்.இதற்கெல்லாம் சலித்துக் கொள்ளக் கூடாது.


அப்பாவி
மே 20, 2025 10:04

புதுப்பிக்கத் தேவையில்லாத எங்க ஊர் டேசனை முன்னாடி இடிச்சு பூசுறாங்க. ஆனால், நாலாவது பிளாட்பாரத்திலிருந்து வெளியே போக கீழே இறங்கி திரும்ப மேலே ஏறணும். 23 கோச்களை இயக்கி, கடைசி கோச்களில் இருக்குறவன் ஒரு மைல் நடக்க வேண்டியிருக்கு. நிறைய பேர் இறங்கி ஏறும் முக்கிய ரயில்களை முதல் பிளாட்பாரத்தில் இயக்கத் தெரியலை. ரயில்வே ப்ளான் பண்றவன் எவனும் ரயில்ல போறதில்ல. நம்ம கஷ்டம் கொடியசைச்சு துவக்கி வெக்கிறவருக்கு என்ன புரியப் போகுது?


SUBBU,MADURAI
மே 20, 2025 15:57

அப்புசாமி தாத்தா நீங்கள் பல்லு போன காலத்திலும் பல் செட்டு வைத்து அந்த பாஞ்சி லட்சத்தை கேட்க தெரியுதுல்ல அப்படின்னா இது போன்ற சிறு சிறு இன்னல்களை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். எங்க ஊர் மதுரையிலும் அப்படித்தான் இரயில்வே நிலையத்தில் வேலை நடந்து கொண்டு இருக்கிறது. சென்னைக்கு போகும் பிஸியான வைகை எக்ஸ்பிரஸ் நான்காவது பிளாட்பாரத்தில் நிற்கிறது நான் என் வயதான தாயாரை அழைத்துக் கொண்டு படிக்கட்டு வழியாக ஏறித்தான் வைகையில் பயணம் செய்கிறேன் அதற்காக ஒருபோதும் நான் நம் இரயில்வேயை குறை பட்டுக் கொண்டது கிடையாது மதுரை ஜங்ஷனில் பணி முழுவதும் முடிந்த பிறகு எல்லோருக்கும் அனைத்து வசதிகளுடன் கூடிய ஜங்ஷனாக மதுரை திகழும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனவே எதுக்கெடுத்தாலும் மத்திய அரசாங்கத்தை குறை கூறுவதை தயவுசெய்து தவிருங்கள்.


அப்பாவி
மே 20, 2025 07:29

பச்சைக்கொடியை புதுப்பியுங்க.


S Nagarajan
மே 20, 2025 06:30

மக்களின் வரிப்பணம் எவ்வாறு மக்களுக்கே, இன்றைய மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. மோடி அவர்களின் அரசால் பயன்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இப்படிப்பட்ட முதல்வர்கள் அனைத்து மாநிலங்களுக்கும் இருந்தால் நம் நாடும் நலமாக இருக்கும், மக்களும் நலமாக இருப்பார்கள்.


P. SRINIVASAN
மே 20, 2025 12:10

மனசாட்சி இல்லாம பேசறாரு.


venugopal s
மே 20, 2025 17:44

அப்போது கடந்த பதினோரு வருடங்களில் நூறுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தனி விமானத்தில் பயணம் செய்தது எல்லாம் அவருடைய சொந்த செலவிலா அல்லது கட்சியின் செலவிலா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை