உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை; கடலூரில் சோகம்

2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை; கடலூரில் சோகம்

கடலூர்; கடலூரில் இருகுழந்தைகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூரை அடுத்த மாளிகைபுர மேட்டு பகுதியைச் சேர்ந்தவர் அழகப்பன். எலக்ட்ரிசியனான இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த நித்யா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு, ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தை உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்றிரவு இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அதிருப்தியடைந்த நித்யா, தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பொதுகிணற்றில் குதித்துள்ளார். இதில் மூவரும் உயிரிழந்தனர். கிணற்றில் சடலங்கள் கிடப்பதைக் கண்ட அப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 3 பேரின் சடலங்களை மீட்டு விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ