உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேசிய கொடி வடிவில் கேக் வெட்டியதால் புதிய சர்ச்சை

தேசிய கொடி வடிவில் கேக் வெட்டியதால் புதிய சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: சுதந்திர தின விழாவில், தேசியக்கொடி வடிவில் காட்சிப்படுத்தப்பட்ட 79 கிலோ கேக்கை கலெக்டர், எஸ்.பி., வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், 79 கிலோ 'கேக்' காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த கேக், 16 அடி நீளம், 3.25 அடி அகலம் இருந்தது. போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பின், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ், கூடுதல் கலெக்டர் திவ்யான்ஷீநிகம் உள்ளிட்டோர் அசோக சக்கரத்துடன் கூடிய மூவர்ணக்கொடி வடிவில் அமைக்கப்பட்ட கேக்கை வெட்டினர். சுதந்திர தினத்தன்று, தேசியக்கொடி வடிவில் இருந்த கேக்கை உயர் அதிகாரிகளே வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். உரிய மரியாதையுடன், தேசியக்கொடி வடிவில் கேக் வெட்டுவது தவறில்லை என, 2021 மார்ச் 22ல், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

ManiMurugan Murugan
ஆக 17, 2025 00:08

ஐஏஎஸ் ஐபி எஸ் படித்தவர்களுக்கு தேசியக் கொடியின் மதிப்பு தெரியாதா சட்டம் என்ன என்று தெரியாமல் தான் கலெக்டர் ஆனார்களா பங்கு பெற்ற அனைவரும் அவர்கள் வீட்டு விசேசத்திற்கு அவரவர் உருவ க் கேக்கை வெட்டுவார்களா உருவ பொம்மை எரிப்பு என்பதற்கு மட்டும் கைது நடவடிக்கை உடனே செய்கிறது அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோகன் கட்சி தி மு கா கூட்டணி இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது


Suppan
ஆக 16, 2025 13:40

பிறந்த நாளன்று கொண்டாடுபவரின் பெயரை கேக்கில் எழுதி அதை வெட்டுவது சரியான செயலா? அதன் மேல் மெழுகுவர்த்தி ஏற்றி அதை அணைப்பதும் எதிர்மறை எதிர்மறை செயல் அல்லவா? விளக்கை ஏற்றுவதுதானே நம் மரபு . நாம் என்று திருந்துவோம் ?


பெரிய குத்தூசி
ஆக 16, 2025 10:33

இந்திய தேசிய கொடியை கையாள மரபு உள்ளது. தேசிய கொடியை ஏற்றுவது காலை 7-9 மணிக்குள் ஏற்ற வேண்டும், தேசிய கொடியை 24 மணி நேரமும் பறக்க விடலாம், இரவில் கொடி பறக்கவிடப்பட மாலை 6 மணியிலிருந்து காலை 7 மணி வரை பறக்கும் தேசிய கொடியில் போகஸ் லைட் செய்யப்பட வேண்டும். தேசியக் கொடியையோ அல்லது வேறு விதத்தில் உருவாக்கி வெட்டுவது, கிழிப்பது, எரிப்பது, சேதப்படுத்துவது தூக்கி எரிவது குற்றம். கிழிந்த அல்லது வர்ணம் போன தேசிய கொடியை முறைப்படி மடித்து காகித அல்லது பிளாஸ்டிக் கவர்ல் வைத்து அருகில் உள்ள உள்ளாட்சி அலுவலக செயலாளர் அல்லது பஞ்சாயத்து செயலாளரிடம் கொடுக்க வேண்டும், அதிக அவர் இந்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதல் படி முறைப்படி டிஸ்போஸ் செய்வார். வாழ்க்கை நடத்தும் திராவிடம் கொடுக்கும் 200கும் பிரியாணிக்கும், குவாட்டருக்கும், வறட்டு பிசா பர்கர் சாப்பிட்டு வாழ்வை சீரஷித்து கொள்ளும் ஜென்மங்களுக்கு தேசிய கோடிக்கும் கேவலமான திமுக கோடிக்கும் வித்தியாசம் தெரியாது. ராமநாதபுரம் மாவட்ட SP மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு எப்படி இது தெரியாமல் போனது. இதற்கு கண்டிப்பாக மத்திய உள்துறை அமைச்சின் எச்சரிக்கை அல்லது தண்டனை கிடைக்கும்.


Sivasankaran Kannan
ஆக 16, 2025 10:28

dravidia models.


ஜெய்ஹிந்த்புரம்
ஆக 16, 2025 09:42

எல்லாத்துக்கும் இப்படி நெகடிவ் ஆகவே வியாக்கியானம் பண்ணிக்கிட்டு இருங்க. சீந்திறதுக்கு ஆளில்லாமல் அட்ரஸ் இல்லாமல் போவதை விரைவில் பார்க்கலாம்.


அப்பாவி
ஆக 16, 2025 09:18

தேசிய கொடி துணியை வெட்டிதானே தைக்கறாங்க?


Netaji
ஆக 16, 2025 10:40

Arivili who is unable to identify National Flag.


Natarajan Ramanathan
ஆக 16, 2025 08:12

இது தவறில்லை, ஆனால் வேண்டாத வேலை.


KRISHNAN R
ஆக 16, 2025 07:48

அவ்ளோ புத்திசாலிகள்


N.Purushothaman
ஆக 16, 2025 06:58

முன் உதாரணமாக இருக்க வேண்டியவர்கள் இதை எல்லாம் தவிர்க்க வேண்டும் ...


Kumaran
ஆக 16, 2025 06:36

This is the sorry state of mind set of the so called the best brains of the country. Action is must initiated for the disrespect to the National Flag as provided.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை