உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல்: தமிழக எல்லை சோதனை சாவடிகளில் ஆய்வு

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல்: தமிழக எல்லை சோதனை சாவடிகளில் ஆய்வு

பந்தலூர் : கேரளா மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவி வருகிறது. வவ்வால்கள் மூலம் இந்த வகை வைரஸ் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வவ்வால்கள் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை சாப்பிடுவதன் வாயிலாகவோ, பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தாலோ நோய் தொற்று ஏற்படும். இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் கூறுகையில், கேரளா மாநிலம் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் 'நிபா வைரஸ்'பரவி வருகிறது. வைரஸ் தாக்கம் ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, மூச்சு திணறல், மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் காணப்படும். தற்போது கேரளா மாநிலம் பாலக்காடு மற்றும் மலப்புரம் பகுதியில் இருந்து தமிழக எல்லையான நாடுகாணி வழியாக அதிக அளவிலான வாகனங்கள் தமிழகத்திற்கு வருவதால், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு, நோய் தாக்கத்தின் அறிகுறிகள் இருப்பது குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது. கேரளாவுக்கு சென்று வரும் மக்கள் தங்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றும் கழுவப்படாத அல்லது கீழே விழுந்த பழங்களை சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து சுகாதாரத்துறையினர் நாடுகாணி, தாளூர், சோலாடி, பாட்டவயல், நம்பியார்குன்னு உள்ளிட்ட சோதனை சாவடிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை