உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் இல்லை: முத்துசாமி

டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் இல்லை: முத்துசாமி

சூலூர்:கோவை மாவட்டம், சூலுாரில், பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை, வீட்டு வசதி மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்த பின் அளித்த பேட்டி: புயல், மழையால் பாதிப்புகள் உள்ளிட்ட நெருக்கடிக்கு இடையிலும், மகளிர் உரிமை தொகை உள்ளிட்டவை, மக்களுக்கு வழங்கப்படுகின்றன.பொங்கல் பண்டிகைக்காக, டாஸ்மாக் மது விற்பனைக்கு, இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்பட வில்லை. விற்பனையாகும் தொகை குறைய வேண்டும் என்று தான் நினைக்கிறோம்; கூட வேண்டும் என நினைக்கவில்லை. முறையாக வியாபாரம் நடக்கிறதா என்பதை அறியவே அதிகாரிகள் கணக்கு பார்க்கின்றனர்; ஏன் வியாபாரம் ஆகவில்லை என பார்ப்பதற்காக இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ